Monday 30 December 2019

Deva Sabaiyile Devan Eluntharulinar தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

Deva Sabaiyile Devan Eluntharulinar தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் 1.பயத்தோடே நல் பக்தியோடே தேவனை ஆராதிப்போம் வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் --- தேவ 2.ஆபத்து நாளில் அரணாம் கோட்டை நித்திய கன்மலையே யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே --- தேவ 3.இராப்பகலாய் தன் கண்மணிபோல் தூங்காது காப்பவரே தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் --- தேவ 4.உலகின் முடிவு வரைக்கும் நான் உன்னோடிருப்பேன் என்றாரே அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் --- தேவ 5.சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய ஏகமாய் துதித்திடுவோம் சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே --- தேவ 6.ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம் உன்னத தேவனையே ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம் --- தேவ

Sunday 29 December 2019

En Yesu Raja Saronin Roja என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

En Yesu Raja Saronin Roja என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா உம் கிருபை தந்தாலே போதும் (2) அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல உம் கிருபை முன் செல்ல அருளும் (2) 1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில் சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2) கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு 2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2) பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு 3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2) இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன் என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு

Konja Kalam yesuvukkaga கொஞ்ச காலம் இயேசுவுக்காக

Konja Kalam yesuvukkaga கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப் பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது (2) அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன் ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன் 1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் (2) ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் --- கொஞ்ச 2. இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார் (2) என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன் --- கொஞ்ச 3. வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும் (2) என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார் எனக்கானந்தம் பொங்கிடுமே --- கொஞ்ச 4. பலியாக காணிக்கையாக படைத்தேனே உமக்காக (2) என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசு ஆண்டவரே ஏழை நான் என்றும் உம் அடிமை --- கொஞ்ச

Sunday 22 December 2019

Vinnil Oor Natchathiram விண்ணில் ஓர் நட்சத்திரம்

Vinnil Oor Natchathiram விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவே தாவீதின் மரபினில் தோன்றினாரே மரியன்னை புதல்வனாய் அவதரித்தார் ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை போற்றிடுவோம் ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம் 1. மந்தையை காக்கும் ஆயர்களும் சாஸ்திரியர் மூவரும் வந்தனரே முன்னணை பாலனை கண்டனரே பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம் 2. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார் இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்

Vinnil Oor Natchathiram Thontridave விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

Vinnil Oor Natchathiram 1.விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவே தாவீதின் மரபினில் தோன்றினாரே மரியன்னை புதல்வனாய் அவதரித்தார் ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை போற்றிடுவோம் ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம் 2. மந்தையை காக்கும் ஆயர்களும் சாஸ்திரியர் மூவரும் வந்தனரே முன்னணை பாலனை கண்டனரே பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம் 3. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார் இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்

Piranthar Piranthar Kiristhu Piranthar பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

Piranthar Piranthar Kiristhu Piranthar பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க 1. மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க எந்நாளும் அதிர நம் இயேசு பிறந்தார் தூதர் சேனைகள் எக்காளம் முழங்க எந்நாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் 3. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள் இராஜன் இயேசுவை வாழ்த்திப்பாடுங்கள் மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள் இராஜன் இயேசுவை வாழ்த்திப்பாடுங்கள் – பிறந்தார்

Saturday 21 December 2019

Deva Palan Pirantheere தேவபாலன் பிறந்தீரே

Deva Palan Pirantheere தேவபாலன் பிறந்தீரே மனுக்கோலம் எடுத்தீரே வானலோகம் துறந்தீர் இயேசுவே நீர் வாழ்க வாழ்கவே --- தேவ பாலன் 1.மண் மீதினில் மாண்புடனே மகிமையாய் உதித்த மன்னவனே வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம் தூயா உன் நாமத்தையே --- தேவ பாலன் 2.பாவிகளை ஏற்றிடவே பாரினில் உதித்த பரிசுத்தரே பாடிடுவோம் புகழ்ந்திடுவோம் தூயா உன் நாமத்தையே --- தேவ பாலன்

Friday 20 December 2019

Van Velli Pragasikkuthe வான் வெள்ளி பிரகாசிக்குதே

Van Velli Pragasikkuthe வான் வெள்ளி பிரகாசிக்குதே உலகில் ஒளி வீசிடுமே யேசு பரன் வரும் வேளை மனமே மகிழ்வாகிடுமே (2) 1. பசும் புல்லணை மஞ்சத்திலே திருப்பாலகன் துயில்கின்றான் அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார் நல் ஆசிகள் கூறிடுவார் – வான் 2. இகமீதினில் அன்புடனே இந்த செய்தியை கூறிடுவோம் மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம் அவர் பாதம் பணிந்திடுவோம் – வான் 3. இந்த மாடடை தொழுவத்திலே அவர் மானிடனாய் பிறந்தார் மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் நம் இயேசுவை வணங்கிடுவோம் --- வான்

Eerayiram Aandugal Mun ஈராயிம் ஆண்டுகள் முன்

Eerayiram Aandugal Mun 1.ஈராயிம் ஆண்டுகள் முன் மரியாளின் நன் மகனாய் தெய்வ மைந்தன் தோன்றினார் தேவன் பூவினில் வந்துதித்தார் வானதூதர் சேனைத்திரள் பாடும் தொனி கேளாய் மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதித்ததால் எக்காளம் முழங்க தூதர் சேனை பாடும் தொனி கேளாய் மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதித்ததால் 2.ராக்கால மந்தை மேய்ப்பர்கள் காக்க பேரொளி தோன்றினது தூதர்கள் கூட்டம் முழங்கின பாடல் தூரத்தில் கேட்டது 3.யோசேப்பும் மரியாளும் ஒன்றாய் பெத்தலகேம் ஊர் வந்தனர் பிள்ளையை கிடத்த இடமில்லை தேவ மைந்தனுக்கிடமில்லை 4.பெத்தலகேம் சத்திர முன்னனை மாட்டு தொழுவத்திலே பிறந்தார் மரியாளின் மகனாய் தோன்றினார் தேவன் பூவினில் வந்துதித்தார்

Wednesday 18 December 2019

En Yesu Rajan Varuvar என் இயேசு ராஜன் வருவார்

En Yesu Rajan Varuvar என் இயேசு ராஜன் வருவார் எண்ணிலடங்கா தூதரோடு என்னை மீட்ட இயேசு ராஜன் என்னை ஆளவே வருவார் 1.அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு அவர் வருகை மிகபெரும் அதிர்ச்சி 2.உலகில் நடப்பவை எல்லாம் அவர் வருகைக்கு உண்மையைக் கூறும் அவர் வருகை மிகவும் சமீபம் அவர் வரவை சந்திக்க ஆயத்தமா 3.வானில் ஓர் பேரொளி தோன்றும் விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும் மேற்கும் கிழக்கும் நடுங்க மேகங்கள் மீதே வருவார்

Tuesday 17 December 2019

Aa Ambara Umbara ஆ அம்பர உம்பர

Aa Ambara Umbara ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ 1. அன்பான பரனே அருள் மேவுங் காரணனே – நவ அச்சய சச்சிதா – ரட்சகனாகிய உச்சிதவரனே – ஆ 2. ஆதம் பாவமற, நீதம் நிறைவேற – அன்று அல்லிராவினில் வெல்லையடியினில் புல்லணையிற் பிறந்தார் – ஆ 3. ஞானியர் தேட வானவர் பாட – மிக நன்னய உன்னத – பன்னரு மேசையா இந்நிலம் பிறந்தார் – ஆ 4. கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத கோத்திரன் பிறந்தார் – ஆ 5. விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட விந்தையாய்ப் பிறந்தார் – ஆ

Samathanam Oothum சமாதானம் ஓதும் இயேசு

Samathanam Oothum சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம் 1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர் அனுகூலரிவர் மனுவேலரிவர் --- சமாதானம் 2. நேய கிருபையின் ஓரு சேயர் இவர் பரம ராயர் இவர் நம தாயரிவர் --- சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் --- சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே அறிஞோர் தேடவே இடையோர் கூடவே --- சமாதானம் 5. மெய்யாகவே மே சையாவுமே நம்மை நாடினாரே கிருபை கூறினாரே --- சமாதானம் 6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே --- சமாதானம்

Monday 16 December 2019

Vana Thoothar Senaigal வான தூதர் சேனைகள்

Vana Thoothar Senaigal வான தூதர் சேனைகள் கீதங்களைப் பாடியே ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினாரே 1. ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில் தோன்றினர் தூதர்கள் அட்சணமே அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம் நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர் 2. பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏந்திடுவோம் சென்றனர் பாலனை தரிசிக்கவே வான் நட்சத்திரத்தின் ஒளியிலே மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர் 3. ஏவையின் சாபத்தை நீக்கிடவே மானிடர் ரூபமாய் ஜென்மித்தார் பாவிகளை மீட்டு ரட்சிக்கவே மனுக்குமாரன் வந்துதித்தார் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர்

Arasanai Kanamalirupomo அரசனைக் காணமலிருப்போமோ

Arasanai Kanamalirupomo அரசனைக் காணமலிருப்போமோ - நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ - யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ - யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே - யூத --- அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் - மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார் பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர் பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே - யூத --- அரசனை 3. அலங்காரமனை யொன்று தோணுது பார் - அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார் இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்- நாம் எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் - யூத --- அரசனை 4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம் வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் - யூத --- அரசனை 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை

Aanantha Geethangal Ennalum ஆனந்த கீதங்கள் எந்நாளும்

Aanantha Geethangal Ennalum ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம் 1.புதுமை பாலன் திருமனுவேலன் வறுமை கோலம் எடுத்தவதரித்தார் முன்னுரைப் படியே முன்னணை மீதே மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே --- ஆனந்த 2.மகிமை தேவன் மகத்துவ ராஜன் அடிமை ரூபம் தரித்திக லோகம் தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே --- ஆனந்த 3.மனதின் பாரம் யாவையும் நீக்கி மரண பயமும் புறம்பே தள்ளி மா சமாதானம் மா தேவ அன்பும் மாறா விஸ்வாசமும் அளித்தாரே --- ஆனந்த 4.அருமை இயேசுவின் திரு நாமம் இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும் கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும் வலிமை வாய்ந்திடும் நாமமிதே --- ஆனந்த 5.கருணை பொங்க திருவருள் தங்க கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம் எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் --- ஆனந்த

Sunday 15 December 2019

Chinnanjiru Suthane சின்னஞ்சிறு சுதனே

Chinnanjiru Suthane சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே மன்னர் மன்னவனே உன்னதத் திருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு கூடுண்டு பறவைகட்கு பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே வீடுண்டோ உந்தனுக்கு தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க தாரகம் நீரானீரோ கோரவன் பகைகள் பாரச்சுமைகள் தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு 2. அன்பின் தாய் தந்தை எல்லாம் எனக்கு உன்னதர் நீரல்லவோ துன்பம் துடைக்க பண்பினைக் காக்க என்னருள் நீரல்லவோ பாசமாய் வந்தே காசினை மீட்ட நேசமுள்ள ஏசுவே நீச சிலுவை தொங்கப் பிறந்த தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு

Thursday 12 December 2019

Aathuma Kartharai Thuthikintrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

Aathuma Kartharai Thuthikintrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ 1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை அனைவரும் பாக்கிய மென்பாரே முடிவில்லா மகிமை செய்தாரே – பல முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ – ஆத்துமா 2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர் பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ – ஆத்துமா 3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த முனியாபி ராமுட ஜனமதன்பால் நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன் நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ – ஆத்துமா

Bethalaiyil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரை

Bethalaiyil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும் 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் 3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில் 4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில் 5. இவ்வளாவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம் எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Wednesday 11 December 2019

Bethalehem Oororam பெத்தலகேம் ஊரோரம்

Bethalehem Oororam 1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி --- பெத்தலகேம் 2.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் நேரம் --- பெத்தலகேம் 3.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான்வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூண்டோ ஆன பழங்கந்தை என்ன பாடோ பாடோ --- பெத்தலகேம் 4.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி இன்றிரவில் என்ன இந்த மோடி மோடி --- பெத்தலகேம் 5.ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்மகிமை கண்டு அட்டியின்றிகாபிரியேல் சொன்ன செய்தி கொண்டு நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு --- பெத்தலகேம்

Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ

Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் சரணங்கள் 1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப்பொருள் தானிவரோ சீருடன் புவி, வான் அவை பொருள் யாவையுஞ் சிருஷ்டித்த மாவலரோ 2. மேசியா இவர் தானோ – நம்மை – மேய்த்திடும் நரர் கோனோ ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ 3. தித்திக்குந் தீங்கனியோ – நமது தேவனின் கண்மணியோ மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண் ணொளியோ 4. பட்டத்துத் துரை மகனோ – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ 5. ஜீவனின் அப்பமோதான் – தாகம் தீர்த்திடும்பானமோ தான் ஆவலாய் ஏழைகள் அடைந்திடு மடைக்கல மானவரி வர்தானோ

Monday 9 December 2019

Panivilum Ravinil பனிவிழும் ராவினில்

Panivilum Ravinil பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில் கன்னிமரி மடியில் விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட இயேசு பிறந்தாரே ராஜன் பிறந்தார் (2) நேசர் பிறந்தாரே (2) 1.மின்னிடும் வானக தாரகையே தேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவே பாலனைக் கண்டு பணிந்திடவே மகிழ்ந்தார் புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை --- பனி 2.மகிமையில் தோன்றிய தவமணியே மாட்சிமை தேவனின் கண்மணியே மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே மானிடனாக உதித்தவரே பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை --- பனி

Thuthiyungal Devanai துதியுங்கள் தேவனை

Thuthiyungal Devanai துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை - 2 1. அவரது அதிசயங்களை பாடி (2) அவர் நாமத்தை பாராட்டி அவரை ஆண்டவர் என்றறிந்து அவரையே போற்றுங்கள் ஆப்ரகாமின் தேவனை ஈசாக்கின் தேவனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள் 2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை (2) இடையூற்றினை போக்கினோனே கானானின் தேசத்தை காட்டினோனே கர்த்தரை போற்றுங்கள் ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள்

Thinam Thinam Nam Devanaiye தினம் தினம் நம் தேவனையே

Thinam Thinam Nam Devanaiye தினம் தினம் நம் தேவனையே மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் (2) 1.இரக்கம் உருக்கம் நிறைந்தவரே மறவாமல் நம்மை காப்பவரே (2) சிறந்த நாமம் உடையவரே அரணான துணையாய் இருப்பவரே (2) - தினம் 2.அன்பின் உருவம் உடையவரே ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே (2) ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே அன்னையை போல அணைப்பவரே (2) - தினம் 3.விண்ணில் மகிமை உடையவரே மண்ணில் சமதானம் தருபவரே (2) என்னில் தினமும் வாழ்பவரே உன்னில் அழைத்தால் வருபவரே (2) - தினம்

Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை

Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க தன்னை ஈந்தது 1. உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுத் தொழுவில் பிறந்த திருவே உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின் அன்பின் உருவே — பொங்கி 2. கருவில் உதித்த தூய கனியே கவலை தீர்க்கும் கண்ணின் மணியே உள்ளமெல்லாம் பூரிக்கும் தூய்மையே உந்தன் வரவே — பொங்கி 3. விழிகள் திறந்த விந்தை தெய்வம் பழிகள் சுமந்த விந்தை தெய்வம் உலகெல்லாம் தொழுதிடும் உன்னதம் உந்தன் நாமம் — பொங்கி

Saturday 7 December 2019

Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி

Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம் தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் 1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க பிறந்து வந்தார் உலகை ஜெயிக்க வந்தார் அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம் 2. உண்மையின் ஊழியம் செய்திடவே வானவர் இயேசு பூவில் வந்தார் வல்லவர் வருகிறார் நம் மேய்ப்பர் வருகிறார் அல்லேலுயா பாடுவோம் மேய்ப்பரை வாழ்த்துவோம் 3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து வேதத்தின் ஓளியை பரப்பினாரே இருளை அகற்றுவார் நம்மை இரட்சித்து நடத்துவார் அல்லேலுயா பாடுவோம் தேவ மைந்தரை வாழ்த்துவோம்

Wednesday 4 December 2019

Santhosha Vinnoliye சந்தோஷ விண்ணொளியே

Santhosha Vinnoliye சந்தோஷ விண்ணொளியே இயேசு சாந்த சொரூபியவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா பாரில் மலர்ந்துதித்தார் 1.இன்ப பரலோகம் துறந்தவர் துன்பம் சகித்திட வந்தவர் பாவ மனிதரை மீட்டவர் பலியாகவே பிறந்தார் 2.பூலோக மேன்மைகள் தேடாதவர் பேரும் புகழும் நாடாதவர் ஒன்றான மெய் தேவன் இயேசுவே என் ஆத்ம இரட்சகரே 3.ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர் தேவாதி தேவன் சுதன் இவர் இயேசுவல்லால் வேறு யாருமில்லை இரட்சண்யம் ஈந்திடவே 4.ஆடம்பர வாழ்வை வெறுத்தவர் அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர் எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும் இயேசுவைப் பின்பற்றுவோம் 5.எங்கள் சமாதானப் பிரபு இவர் இயேசு அதிசயமானவர் வேதம் நிறைவேறும் காலமே வேகம் வருகின்றாரே

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார்

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார் இந்த லோகத்தை மீட்டிடவே இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார் இந்த நற்செய்தி சாற்றிடுவோம் 1.மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள் மந்தையைக் காத்திருக்க தூதர்கள் வானத்திலே தோன்றி தேவனைத் துதித்தனரே--- இயேசு 2.ஆலோசனை கர்த்தரே இவர் அற்புதமானவரே விண் சமாதான பிரபு சர்வ வல்லவர் பிறந்தனரே --- இயேசு 3.மாட்டுத் தொழுவத்திலே பரன் முன்னணையில் பிறந்தார் தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர் ஏழ்மையின் பாதையிலே --- இயேசு 4.பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப் போளமும் காணிக்கையே சாட்சியாய் கொண்டு சென்றே – வான சாஸ்திரிகள் பணிந்தனரே --- இயேசு 5.அன்னாளும் ஆலயத்தில் அன்று ஆண்டவரை அறிந்தே தீர்க்கதரிசனமே கூறி தூயனைப் புகழ்ந்தனரே --- இயேசு 6.யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர் வாக்கு மாறாதவரே கண்ணிமை நேரத்திலே நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் --- இயேசு

Tuesday 3 December 2019

Rajan Thaveethurillulla ராஜன் தாவீதூரிலுள்ள


Rajan Thaveethurillulla 1. ராஜன் தாவீதூரிலுள்ள மாட்டுக் கொட்டில் ஒன்றிலே கன்னி மாதா பாலன் தன்னை முன்னணையில் வைத்தாரே மாதா, மரியம்மாள்தான் பாலன் இயேசு கிறிஸ்துதான் 2. வானம் விட்டுப் பூமி வந்தார் மா கர்த்தாதி கர்த்தரே அவர் வீடோ மாட்டுக் கொட்டில் தொட்டிலோ முன்னணையே ஏழையோடு ஏழையாய் வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் 3. ஏழையான மாதாவுக்கு பாலனாய்க் கீழ்ப்படிந்தார் பால்ய பர்வம் எல்லாம் அன்பாய் பெற்றோர்க்கு அடங்கினார் அவர்போல் கீழ்ப்படிவோம் சாந்தத்தோடு நடப்போம் 4. பாலர்க்கேற்ற பாதை காட்ட பாலனாக வளர்ந்தார் பலவீன மாந்தன் போல துன்பம் துக்கம் சகித்தார் இன்ப துன்ப நாளிலும் துணை செய்வார் நமக்கும் 5. நம்மை மீட்ட நேசர் தம்மை கண்ணால் கண்டு களிப்போம் அவர் தாமே மோட்ச லோக நாதர் என்று அறிவோம் பாலரை அன்பாகவே தம்மிடத்தில் சேர்ப்பாரே 6. மாட்டுத் தொழுவத்திலல்ல தெய்வ ஆசனத்திலும் ஏழைக் கோலமாக அல்ல ராஜ கிரீடம் சூடியும் மீட்பர் வீற்றிருக்கின்றார் பாலர் சூழ்ந்து போற்றுவார்

Monday 2 December 2019

Maanida Uruvil Avatharitha மானிட உருவில் அவதரித்த

Maanida Uruvil Avatharitha மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே 1.ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய் அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் --- மானிட 2.கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய ரத்தம் பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரே வழி --- மானிட 3.இயேசுவின் நாமத்தில் வல்லமையே இதை நாடுவோர்க்கு விடுதலையே துன்ப கட்டுகள் காவல் சிறைகள் இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா --- மானிட 4.அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார் அதிசயங்கள் அவர் காட்டிடுவார் உண்மை நிறைந்த உள்ளம் திறந்து உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் --- மானிட 5.கர்த்தர் உன்னை இனி கைவிடாரே கடைசி வரை தளராதே நம்பு என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர் இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார் --- மானிட

Sunday 1 December 2019

Bakthare Vaarum – பக்தரே வாரும்

Bakthare Vaarum 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை. 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்திலீர் தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன் விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர் 4. இயேசுவே, வாழ்க இன்று ஜென்மித்தீரே புகழும் ஸ்துதியும் உண்டாகவும் தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.

Kel Jenmitha Rayarkkae கேள் ஜென்மித்த ராயர்க்கே

Kel Jenmitha Rayarkkae 1. கேள் ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே அவர் பாவ நாசகர் சமாதான காரணர் மண்ணோர் யாரும் எழுந்து விண்ணோர் போல் கெம்பீரித்து பெத்லேகேமில் கூடுங்கள் ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவே லோகம் ஆளும் நாதரே ஏற்ற காலம் தோன்றினீர் கன்னியிடம் பிறந்தீர் வாழ்க நர தெய்வமே அருள் அவதாரமே நீர் இம்மானுவேல் அன்பாய் பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவே வாழ்க நீதி சூரியனே மீட்பராக வந்தவர் ஒளி ஜீவன் தந்தவர் மகிமையை வெறுத்து ஏழைக்கோலம் எடுத்து சாவை வெல்லப் பிறந்தீர் மறு ஜென்மம் அளித்தீர்

Saturday 30 November 2019

Paathai Kaatum Maa Yegovaa பாதை காட்டும் மாயெகோவா

Paathai Kaatum Maa Yegovaa 1. பாதை காட்டும், மாயெகோவா பரதேசியான நான் பலவீனன், அறிவீனன், இவ்வுலகம் காடுதான்; வானாகாரம் வானாகாரம் தந்து என்னைப் போஷியும். 2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை, நீர் திறந்து தாருமேன்; தீப மேக ஸ்தம்பம் காட்டும், வழியில் நடத்துமேன்; வல்ல மீட்பர் வல்ல மீட்பர் என்னைத் தாங்கும், இயேசுவே. 3. சாவின் அந்தகாரம் வந்து, என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றி தந்து, என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில் கீத வாழ்த்தல் கீத வாழ்த்தல் உமக்கென்றும் பாடுவேன்

Nal Meetper Patcham Nillum நல் மீட்பர் பட்சம் நில்லும்

Nal Meetper Patcham Nillum 1. நல் மீட்பர் பட்சம் நில்லும் ரட்சணிய வீரரே ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார் பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார் 2. நல் மீட்பர் பட்சம் நில்லும் எக்காளம் ஊதுங்கால் போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால் அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன் பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன் 3. நல் மீட்பர் பட்சம் நில்லும் எவ்வீர சூரமும் நம்பாமல் திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும் சர்வயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர் எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர் 4. நல் மீட்பர் பட்சம் நில்லும் போராட்டம் ஓயுமே வெம்போரின் கோஷ்டம் வெற்றி பாட்டாக மாறுமே மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார் விண்லோக நாதரோடே வீற்றரசாளுவார்.

Friday 29 November 2019

Yesuvodu Sernthirupathenna Pakiam இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம்

Yesuvodu Sernthirupathenna Pakiam 1.இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம் இயேசுவிற்காய் ஜீவிப்பதோர் என்ன ஆனந்தம் ஆசை என்றும் எந்தனகம் பெருகின்றதே ஆனந்தமாய் என்றும் வாழ வாஞ்சித்திடுதே 2. போக்கினார் என் பாவமெல்லாம் தாம் மரித்ததால் நீக்கினார் என் சாபமெல்லாம் தாம் சுமந்ததால் எண்ணவே உம் சிநேகம் உள்ளில் பெருகுதே மன்னவா உம் கூட வாழ என்று கூடுமோ --- இயேசு 3. மாட்சி மிகும் நாட்டிலே நான் வாசஞ் செய்திட மாசிறந்த வீடெனக்காய் ஆயத்தமாக்க கைகளால் கட்டிடாதோர் நித்திய ராஜ்யமே கண்டிடவே ஆசையோடு காத்திருக்குதே --- இயேசு 4. அன்று தீரும் எந்தன் கஷ்டம் லோக மண்ணிலே அன்று நீங்கும் எந்தன் துக்கம் யாவும் நிச்சயம் அன்று சுத்தர் நின்று ஒன்றாய் பாடி ஆர்க்கவே என்று அந்நாள் வந்து சேரும் எந்தன் இயேசுவே --- இயேசு 5. நல்லவரே வல்லவரே பொன்னு காந்தனே அல்லல் தீர்க்க என்று வாரீர் ஆத்ம நேசரே எல்லையில்லா ஆனந்தமாய் வீணைகளேந்தி அல்லேலூயா கானம் பாடி வானில் வாழ்ந்திட --- இயேசு

Theivanbin Vellamae தெய்வன்பின் வெள்ளமே

Theivanbin Vellamae 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே, மெய் மனதானந்தமே செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை அய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல எந்தாய் துணிவேனோ யான் புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின் பொற்பாதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப் பாதை தவறிடினும், கூவி விளித்துந்தன் மார்போடணைத்தன்பாய் யாவும் பொறுத்த நாதா 4. மூர்க்ககுணம் கோபம் மோகம் சிற்றின்பமும் மேற்கொள்ளும் லோக ஏக்கம் தாக்கி தடுமாறித் தயங்கிடும் வேளையில் தூக்கித் தற்காத்தருள்வாய். 5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப் பூசைப் பீடம் படைப்பேன் மோச வழிதனை முற்றுமகற்றியென் நேசனே நினைத் தொழுவேன். 6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ, மகிமையோ, வருங்காலமோ, பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ, பிரித்திடுமோ தெய்வன்பை

Karthar Thuyar Thoniyai கர்த்தர் துயர் தொனியாய்

Karthar Thuyar Thoniyai கர்த்தர் துயர் தொனியாய் கதறி முகங்கவிழ்ந்தே இருள் சூழ்ந்த தோட்டத்திலே இதயம் நொறுங்கி ஜெபித்தார் 1. மரணத்தின் வியாகுலமோ மனிதர் துணை இல்லையோ தேவ தூதன் தேற்றிடவே தருணம் நெருங்க ஒப்படைத்தார் துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர் 2. துக்கத்தால் தம் சீஷர்களே தலை சாய்த்து தூங்கினாரே தம்மை மூவர் கைவிடவே தூரமாய் கடந்தே திகிலடைந்தார் தன்னந்தனிமையிலே – கர்த்தர் 3. பிதாவே இப்பாத்திரத்தின் பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன் ஆகட்டும் உமது சித்தம் அது நீங்கிடுமோ என்றுரைத்தார் ஆ இரத்த வேர்வையுடன் – கர்த்தர் 4. திறந்த கெத்சமனேயில் துணிந்து வந்த பகைஞன் என்ன துரோகம் செய்திடினும் எந்தன் சிநேகிதனே என்றழைத்தார் என்ன மா அன்பிதுவோ – கர்த்தர் 5. இயேசு தாங்கின துன்பங்கள் என்னைத் தாண்டியே செல்லாதே எனக்கும் அதில் பங்குண்டே சிலுவை மரணப் பாடுகளால் சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்

Wednesday 27 November 2019

Kanaga Pathai Kadum Malaiyum கானகப் பாதை காடும் மலையும்

Kanaga Pathai Kadum Malaiyum
1.கானகப் பாதை காடும் மலையும்
காரிருளே சூழ்ந்திடினும்
மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன்செல்லுவாய்

பயப்படாதே கலங்கிடாதே
பாரில் ஏசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்

2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே
ஏசுவின் பின்னே நடந்தே
தூய பஸ்கா நீ புசித்தே
தேவ பெலனால் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்ரு சேனை மூழ்கி மாளும்
ஜெயம் சிறந்தே முன்செல்லுவாய்  --- பயப்படாதே

4.குளிர்ந்த  ஏலீம் பன்னீரூற்றும்
காணுவாய் பேரீச்சமரம்
கனமழையின் தாகம் தீர்த்து
மன்னா ருசித்து முன் செல்லுவாய்  --- பயப்படாதே

5.கசந்த மாரா உன்னைக் கலக்கும்
கஷ்டத்தால் உன் கண் சொரியும்
பின் திரும்பிச் சோர்ந்திடாதே
நன்மை அருள்வார் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

6.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
கோர யோர்தான் வந்தெதிர்க்கும்
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

7.புதுக்கனிகள் கானான் சிறப்பே
பாலும் தேனும் ஓடிடுமே
இந்தக் கானான் கால் மிதித்து
சொந்தம் அடைய முன்செல்லுவாய்  ---- பயப்படாதே

Aanantha Geethangal Ennalum Paadi ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

Aanantha Geethangal Ennalum Paadi
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்

1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த

2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த

3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த

4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே – ஆனந்த

5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் – ஆனந்த

Yesu Palanai Piranthar இயேசு பாலனாய் பிறந்தார்

Yesu Palanai Piranthar
இயேசு பாலனாய் பிறந்தார் (2)
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லனை மீதிலே பிறந்தார்

1.உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட --- இயேசு

2.விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானுடவதாரமாய்
தம்மைப் பலியாக தந்த ஒளி இவர்
தம்மைப் பணிந்திடுவோம் வாரும் --- இயேசு

3.ஓடி அலைந்திடும் பாவியை
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் --- இயேசு

4.கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் --- இயேசு

5.அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரைப் பணிவோம் வாரும் --- இயேசு

Tuesday 26 November 2019

Yesuvin Pinnae Poga Thuninthen இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்

Yesuvin Pinnae Poga Thuninthen
1. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

2. உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

3. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

4. என் மீட்பர் பாதைஎன்றும் பின்செல்வேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

5. இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

6. நேசரின் சித்தம் செய்வதென் பாக்கியம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

7. செல்வேன் நான் வேகம் வெல்வேன் நான் கிரீடம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

Deva Devan Balakanai தேவ தேவன் பாலகனாய்

Deva Devan Balakanai
1.தேவ தேவன் பாலகனாய்
தேவ லோகம் துறந்தவராய்
மானிடரின் சாபம் நீங்க
மா நிலத்தில் அவதரித்தார்
         
              அல்லேலூயா அல்லேலூயா
             அற்புத பாலகன் இயேசுவுக்கே

2. பரம சேனை இரவில் தோன்றி
பாரில் ஆடி மகிழ்ந்திடவே
ஆ நிரையின் குடில் சிறக்க
ஆதவனாய் உதித்தனரே --- அல்லேலூயா

3. ஆயர் மனது அதிசயிக்க
பேயின் உள்ளம் நடுநடுங்க
தாயினும் மேல் அன்புள்ளவராய்
தயாபரன் தான் அவதரித்தார் --- அல்லேலூயா

4. லோகப்பாவம் சுமப்பதற்காய்
தாகம் தீர்க்கும்  ஜீவ ஊற்றே
வேதம் நிறை வேற்றுதற்கோ
ஆதியாக அவதரித்தார் --- அல்லேலூயா

5. தாரகையாய் விளங்கிடவோ
பாரில் என்னை நடத்திடவோ
ஆருமில்லா என்னைத் தேடி
அண்ணலே நீர் ஆதரித்தீர் --- அல்லேலூயா

Monday 25 November 2019

Yorthan Nathiyoram Thigaiyaathe யோர்தான் நதியோரம் திகையாதே

Yorthan Nathiyoram Thigaiyaathe
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனை யாலுன்னைக் கலக்காதே உள்ளமே

1.வெள்ளம் பெருகினும் வல்லமைக் குன்றாதே
வல்லவர் வாக்கென்றும் மாறிப் போகாதே    - யோர்

2.வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே            - யோர்

3.உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
துன்பமணுகாமல் துணையருள்வாரே            - யோர்

4.கானானினோரமே காதலின் நாடதே
காணுவேன் தேசம் ஆ என்ன இன்பமே        - யோர்

5.பால்தேனு மோடுதே பூரண அன்பதே
பாட்டினாலே அதைப் பகரலாகாதே            - யோர்

6.ஜெபத்தினால் வல்லமை ஜெயம் பெற்றோர் நாடதே
ஜோதியின் வஸ்திரம்  தரித்திடலாமே            - யோர்

Sathiyamum Jeevanumai Nithamume சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

Sathiyamum Jeevanumai Nithamume
1.சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்
கர்த்தனே எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்

வானந்திறந்தருளும் பல தானங்களையிந் நேரமதில்
வானவனே ஞானமுள்ள வல்ல குரு நாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்

2.என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனூற்றிடும்
இன்னும் இன்னும் ஈசனேயும் நல்வரங்கள் ஈந்திடும்
கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணி போல் காத்திடும்
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே        - வானந்

3.சுய ஆடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமே
தயவு தாழ்மையினாவி தந்தருள வேணுமே
மாயமான யாவினின்றும் மனமதைப் பேணுமே
ஆயனே அடியார்களின் அடைக்கலமே        - வானந்

4.அதிகமதிக அன்பில் அமிழ்ந்து அனுதினம்
புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட
அதிசயமே அகத்தின் குறைகளகற்றியே
இது சமயமுன்னத பெலனீந்திடும்            - வானந்

Pirasannam Tharum Devane பிரசன்னம் தாரும் தேவனே

Pirasannam Tharum Devane
பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
பிரசன்னம் தாரும் தேவனே

1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன் சேராபீன் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்

2. நீரல்லால் இந்த பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடுமே

3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் ஈந்திடுமே

4. தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன்

Thuthi Thuthi En Maname துதி துதி என் மனமே

Thuthi Thuthi En Maname
துதி துதி என் மனமே
துதிகட்குள் வசிப்பவரை --  எல்லா
நாட்களும் செய்திடும் நன்மைகளை நினைத்து
நன்றியுடன் பாடு மனமே  அல்லேலூயா  (2) --- துதி

1.அன்னையை போல அவர்
என்னை அரவணைத் தாற்றிடுவார்
அவர் அன்புள்ள மார்பதனில்
நான் இன்பமாக இளைப்பாறுவேன் (2) --- துதி

2.கஷ்டங்கள் வந்திடவே
நல்ல கர்த்தராம் துணை அவரே
துஷ்ட எதிரிகள் நடுவிலவர்
நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் (2)  --- துதி

3.பாரங்கள் அமிழ்த்தினாலும்
தீரா வியாதியால் கலங்கினாலும்
அவர் காயத்தின் தழும்புகளால்
வியாதி தனை விலக்கிடுவார் (2) --- துதி

4.சகாய பர்வதமே
வல்ல கோட்டையும் அரணுமாமே
ஏதும் பயமொன்றும் வேண்டாமென்றால்
எந்த சேதமின்றி காக்கவல்லோன்(2)  --- துதி

 5.சிங்கமோ விரியன் பாம்போ
பால சிங்கமோ வலு சர்ப்பமோ
அதன் தலையதை நசுக்கிடவே
தக்க பலம் தருபவரே (2)--- துதி

Friday 22 November 2019

Unnatha Thevanuke Magimai உன்னத தேவனுக்கே மகிமை

Unnatha Thevanuke Magimai
1.உன்னத தேவனுக்கே மகிமை
உலகில் சமாதானமாமே
காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே
பேரொளியாய் ஜெனித்தார்

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா துதியவர்க்கே

2.மானிடர் மேல் இவர்க் கன்பிதுவோ
மனுக்கோலமாய் மனுவேலனார்
மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
மாணொளியாய் ஜெனித்தார்

3.தாரகை என அவர் தோன்றிடவே
நேர் பாதையில் நடத்திடவே
தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
தன் ஒளியாய் ஜெனித்தார்

4.வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
வல்ல தேவனின் ஏக சுதன்
வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
வானொளியாய் ஜெனித்தார்

5.தாவீதின் வேர் இவராய் அவனின்
ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
தாம் உதித்தார் ஒளியாய்

Wednesday 20 November 2019

Poorana Aaseer Polinthidume பூரண ஆசீர் பொழிந்திடுமே

Poorana Aaseer Polinthidume
1. பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே

வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே

2. ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்கினி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே

3. தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா

4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்

5. குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே

6. மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே

Tuesday 19 November 2019

Maalayil Thuthipom Magilvudanae மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே

மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே மனக் களிப்புடனே
மாண்புகழ் இயேசுவை  வானவரோடே

1.காலை மாலை உறங்காரே நம்
காவலனாய் இருப்பாரே
ஆவலுடன் துதி சாற்றிடுவீரே – மாலை

2.கிருபையின் வாக்கு தந்தாரே – அதை
அருமையாய் நிறைவேற்றினாரே
உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரே – மாலை

3.சோதனை வந்திட்ட நேரம் அவர்
போதனை செய்தார் அந்நேரம்
சாதனையாகவே நிற்கச் செய்தாரே – மாலை

4.அழைத்த மெய் அழைப்பிலே தானே – நாம்
உழைத்திட பெலன் தந்ததேனே
பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானே – மாலை

5.வயல் நிலம் ஏராளம் காட்டி – அதின்
அறுவடை தாராளம் ஏற்றி
அரிக்கட்டோடே வர கிருபை செய்தாரே – மாலை

6.ஆணி துளைத்திடதானே தன்னை
தியாகமாய் கொடுத்திட்ட தேனே
ஏகமாய் ஏசுவின் நாமத்தைத்தானே – மாலை

7. ஆயிரம் நாவிருந்தாலும் அவர்
அன்பைத் துதிக்கப் போதாது
பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம் – மாலை

8. உன்னதருக்கு மகிமை இந்தப்
பூமியிலே சமாதானம்
மனுஷரில் பிரியம் உண்டாகச் செய்தாரே – மாலை

Monday 18 November 2019

Kirubai Emmai Soolnthu Kollum கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்

Kirubai Emmai Soolnthu Kollum
கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை

1.யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்
இயேசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை தேவ கிருபை

2. தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசர்கள் வேண்டிடுவோம் – கிருபை தேவ கிருபை

3. கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
காத்திருந்தே அடைவோம் – கிருபை தேவ கிருபை

4. ஆண்டுகள் நன்மையினால் – முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார் – கிருபை தேவ கிருபை

5. ஜாதி ஜனங்களையும் – வந்து
மோதி அசைத்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார் – கிருபை தேவ கிருபை

6. உண்மையும் நேர்மையுமாய் – இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை

Deva Janame Paadi Thuthipom தேவ ஜனமே பாடி துதிப்போம்

Deva Janame Paadi Thuthipom
தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்

1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனைத் துதித்திடுவோம்

2. வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம்

3. கர்த்தர் நாமம் ஓங்கிப் படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராய் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம்

4. தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம்

5. நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம்

Sunday 17 November 2019

What a friend we have in Jesus

What a friend we have in Jesus
All our sins and  griefs to bear
What a privilege to carry
Everything to God in prayer
Oh, what peace we often forfeit
Oh, what needless pain we bear
All because we do not carry
Everything to God in prayer

Have we trials and temptations
Is there trouble any where
We should never be discouraged
Take it to the Lord in prayer.
Can we find a friend so faithful
Who will all our sorrows share
Jesus knows our every weakness
Take it to the Lord in prayer

Are we weak and heavy laden
Cumbered with a load of care
Precious Savior, still our refuge
Take it to the Lord in prayer
Do your friends despise, forsake you
Take it to the Lord in prayer
In his arms he’ll take and shield you
You will find a solace there.

Yesuve Neer Nalla Nanpar யேசுவே நீர் நல்ல நண்பர்

Yesuve Neer Nalla Nanpar
1.யேசுவே நீர் நல்ல நண்பர்
பாவம் துக்கம் சுமந்தீர்
பாரம் முற்றும் நீக்க எந்தன்
வேண்டல் அன்பாய்க் கேட்கிறீர்
உந்தன் ஆவல் உணராமல்
சாந்தி முற்றும் இழந்தோம்
உந்தன் மீது வைத்திடாமல்
நோவு முற்றும் சுமந்தோம்

2. சோதனை போராட்டம் மிஞ்சித்
துன்பம் மூடும் வேளையில்
அஞ்சிடாதே யேசு  நோக்கிக்
கெஞ்சி வேண்டிக் கொள்ளவே
உந்தன் துக்கம் தாங்கிக் கொள்ள
நண்பர் மீட்பரல்லவோ
உந்தன் சோர்பெல்லா மறிந்த
யேசுவண்டை  ஓடி வா

3. பாரம் பொங்கிச் சோர்பு மிஞ்சி
ஆழ்த்தும் வேளை ஓடி வா
பாதுகாவல் யேசு தானே
வேறே தஞ்சமில்லையே
நண்பர் எல்லாம் கைவிட்டாலும் 
யேசு சேர்த்துக் கொள்வாரே
மார்போடுன்னைச் சேர்த்தணைத்து
விண்ணில் வாழச் செய்குவார்

Kaalai Thorum Karthane Puthu காலை தோறும் கர்த்தனேபுது

Kalai Thorum Karthane Puthu
காலை தோறும் கர்த்தனே-புது
கிருபையை தினம் பொழிகின்றீரே
காலை தோறும் கர்த்தனே

நம் தேவன் நல்லவரே
மாதேவன் வல்லவரே
உம் சமூகம் எனக்கானந்தமே  (2)   --- காலை

1. ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே --- காலை

2. ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மனதில் மறுரூபமாகிடுவேன் --- காலை

3. சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய் --- காலை

4. கனிமரமாய் நான் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர் --- காலை

5. ஜாதிகள் நடுவே உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர் --- காலை

Friday 15 November 2019

Kartharai Padiye Potriduvomae கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

Kartharai Padiye Potriduvomae
கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனியநாமமதை
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரையில்லை அவரன்பு கரையற்றதே

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசுவைபோல் வேறு நேசரில்லையே

1.கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின்  மீதே
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய்
வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார்

2.போரட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான்
ஜீவித்து சேவிக்க திடமளித்தார்

3.கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்

4.சீயோனில் சிறப்புடன் சேர்த்திட இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
முகமுகமாகவே காண்போமே அவரை
யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம்

Namathu Yesu Kiristhuvin Namam நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்

Namathu Yesu Kiristhuvin Namam
1.நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம் 

2 அவரை நோக்கி கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார்  --- தேவ

3 பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் --- தேவ

4 பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார்     --- தேவ                                                                                                               

5 நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
 உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில் --- தேவ
 
6.பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம்   --- தேவ

Thursday 14 November 2019

En Aathuma Nesa Meipare என் ஆத்தும நேச மேய்ப்பரே

En Aathuma Nesa Meipare
1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டி சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ  காட்டும் செய்ய ஆயத்தம் – 2

2. மெய்  மீட்பரைக் கீழ்ப்படிவோர்
தன் ஆத்மத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்  --- பேசும்

3. பாவிகட்கு உமது அன்பை
என் நடையால் காட்டச் செய்யும்
கல்வாரி அன்பால் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேகியும்  --- பேசும்

4. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையே செல்லுவேன்
ஆசித்துத் தாறேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் --- பேசும்

Thuthipaen Thuthipaen Thuthipaen துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

Thuthipaen Thuthipaen Thuthipaen
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளவும் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

1.பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பைச் சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

2.நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

3.வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

Wednesday 13 November 2019

Potriduvom Pugalnthiduvom போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்

Potriduvom Pugalnthiduvom
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே (2)

1.தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெமைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நான் துதித்திடுவோம் – போற்றிடுவோம்

2. கன மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
கனலெரியின் சோதனையில்
கலங்கிடுமோ எம் விசுவாசமே – போற்றிடுவோம்

3.ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இணைத்தனரே நம்மைத் தன் சுதராய் – போற்றிடுவோம்

4.ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியாரை ஸ்திரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின்  நற்கந்தமாக்கினாரே – போற்றிடுவோம்

5.சீயோனே மாசாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தில் – போற்றிடுவோம்

Tuesday 12 November 2019

Yesuvin Namathil Naam இயேசுவின் நாமத்தில் நாம்

Yesuvin Namathil Naam
இயேசுவின் நாமத்தில் நாம்
கூடிடும் சமயங்களில்
பேசுவார் தியானத்திலே
அவர் தம் கிருபைகள் அளிக்க

1.மலைகள் விலகினாலும்
மாபர்வதம் நிலைபெயர்ந்தும்
என்றும் மாறாத அவர் கிருபைகள்
தம் மக்களுக்காறுதலே  --- இயேசுவின்

2.சீயோனில் அவர் நம்மையே
சிறுமந்தையாய் சேர்த்திடுவார்
நித்திய ராஜ்யத்தை தந்திடுவார்
சத்திய பாதையில் நடந்ததினால்  --- இயேசுவின்

3.கஷ்டங்கள் கவலைகளில்
அன்புக்கரம் நம்மைத் தாங்கிடுமே
நஷ்டங்கள் மாறிடுமே
நாதன் இயேசுவின் நாமத்தினால்   --- இயேசுவின்

Aanantha Padalgal Padiduven ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

Aanantha Padalgal Padiduven
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே – ஆனந்த

1.மேலாக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் – ஆனந்த

2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசு நாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
பாரதில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே --- ஆனந்த

3. கானானின் கரையிதோ காண்கின்றதே எந்தன்
காதலன் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக ஓட்டத்தை முடித்திடுவோம் – ஆனந்த

4. அற்புதமாம் அவர் நேசமது எந்தன்
பொற்பரன் சேவையென் சோகமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் - ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே --- ஆனந்த

5.அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில் – ஆனந்த

6. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம் – ஆனந்த

Monday 11 November 2019

Thevanin Aalayame தேவனின் ஆலயமே

Thevanin Aalayame 
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

1.இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்
தேவ பிள்ளைகளானோம் அவர் சொந்த ஜனமானோம்

2.நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே சரீரத்தின் சொந்தமானவர்
வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
பரிசுத்தம் காத்து கொள்வோம் பரிசுத்த ஜாதியாக

3.கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்

4.இயேசுவின் வருகை நெருங்கிடுதே
அவரின் பிரசன்னம் விரைந்திடுதே
மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே நாம்
 மறுரூபமாகிடுவோம் மகிமையில் சேர்ந்திடுவோம்

Sunday 10 November 2019

Yesu Devanai Thuthithiduvom இயேசு தேவனை துதித்திடுவோம்

Yesu Devanai Thuthithiduvom
இயேசு தேவனை துதித்திடுவோம்
இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்
இதயம் பொங்க நன்றியுடனே
போற்றி உயர்த்தி பணிந்திடுவோம்

1. வார்த்தை வடிவாய் வந்தவரை
    வாதை பிணியைத் தீர்த்தவரை
    கண்ணின் மணி போல் காத்த தயவை
   கருணை உருவைத் துதித்திடுவோம்

2. அடிமை ரூபம் எடுத்தவரை
    அகிலம் பணிந்திட செய்தவரை
   உயர்ந்த நாமம் பெற்று விளங்கும்
   உன்னதர் அவரைப் போற்றிடுவோம்

3. இருளை நீக்கும் மா ஜோதியாய்
    உலகில் வந்த அருள் வடிவே
    ஜீவ ஒளியாய் திகழும் அவரை
   இன்றும் என்றும்   துதித்திடுவோம்

4. தேவ தன்மையை வெளிப்படுத்த
    தேவ மைந்தனாய் வந்தவரை 
    தேவ சுதராய்  நாமும் விளங்க
    கிருபை உருவைத் துதித்திடுவோம்

5. பாவ சாப மரணமதை
    ஜெயித்து வென்று எழுந்தவரை
    மகிமை சூழ திரும்பி வந்திடும்
    வேந்தன் அவரைத் துதித்திடுவோம்
 

Friday 8 November 2019

Kirubai Irakkam Nirainthavor கிருபை இரக்கம் நிறைந்தவோர்


1. கிருபை இரக்கம் நிறைந்தவோர்
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
தருணமேதும் எங்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே

கிருபையே பெருகுதே
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
என்ன என் பாக்கியமிதே

2. நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
நாதனோர் பாவமுமற்றவராய்
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
நல்ல ஆசாரியர் நமக்குண்டே

3. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
நல்கிடுவார் பரிபூரணமாய்
நாடுவோமே மாறா கிருபையை
நமக்காகவே அவர் ஜீவிப்பதால்

4. வானங்களின் வழியாய்ப் பரத்தில்
தானே சென்று இயேசுவா மெமது
மா பிரதான ஆசாரியரைப்
பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை

5. பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
சதாபரிந்து பேசியே நிற்போர்
இதோ எம்மையே முற்று முடிய
இரட்சிக்க வல்லமையுள்ளவரே

Potruvomae Potruvomae போற்றுவோமே போற்றுவோமே

போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே (2) போற்றுவோமே

1.துங்கன் இயேசுவே துயா உமக்கே
துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்து போற்றி
எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி
மங்கிடாமலே தங்கிடவேணும் --- போற்றுவோமே

2.ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
அணைத்து எடுத்தோனே
ஆழிதனிலெம் பாவ மெறிந்த
அன்னை உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன்
மன்னவனையே மனதினிலே --- போற்றுவோமே

3.பாவம் போக்கியே கோபம் மாற்றியே
ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே
சுத்திகரித்த துய வேந்தனே
துயா நேயா காயமாற்றியே
கருணாநிதியே பரிகாரியே --- போற்றுவோமே

4.பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே
தாவி வந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட
அருள் நிறைந்தவனே
தரி சனம் தந்த தேவனே
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க --- போற்றுவோமே

5.பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திடக்
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே
 கானம் பாடியே துதித்திடுவேன் --- போற்றுவோமே

Wednesday 6 November 2019

Aayiram Sthothirame ஆயிரம் ஸ்தோத்திரமே

Aayiram Sthothirame
ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத் தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

1. வாலிப நாட்களிலே
என்னைப் படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

2. உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

3. சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் தோல்விகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

4. பலவித சோதனையை
சந்தோஷமாய் சகிப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

5. இயேசுவின் நாமத்திலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Koda Kodi Sthothiram Padi கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி

Koda Kodi Sthothiram Padi 
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே
சேற்றிலிருந்து தூக்கியெடுத்து
தேற்றி அணைத்துக்  காத்துக் கொண்டாரே  --- தேவசுதன்

1. பாவியை மீட்கப் பரன் சித்தங் கொண்டார்
   பரலோகந் துறந்து பாரினில் பிறந்தார்
   பரமனிவ்வேழையைத்  தேடி வந்தாரே
  பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ  --- பூவுலகில்

2. தேவனின் சித்தம் செய்யும்படியாய்
   தாசனின் கோலம் தாமெடுத்தணிந்து
   தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்
   தம்மை பலியாய்த்  தத்தம் செய்தாரே --- எந்தனுக்காய்

3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
    கேடு வராது காக்கும் நல்மேய்ப்பர் 
    இன்று மென்மேலே வைத்த  நேசத்தால்
   இன்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் --- இறையவனை

4. தாவீது கோத்திர சிங்கமாய் வந்தும்
    சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே
   தாழ்மையான ஆட்டுக்குட்டியுடனே
   தங்கியிருப்பேன் சீயோன்மலையில்  --- நித்தியமாய்

5. குயவனின் கையில் களிமண்ணைப் போல
    குருவே நீர் என்னை உருவாக்குமையா
   மாசற்ற மணவாட்டியாய் என்னை
   காத்துக்கொள்ளும்படி கருணை கூர் ஐயா  --- ஏழையென்னை

Sunday 3 November 2019

Thuthi Geethame Padiye துதி கீதமே பாடியே

Thuthi Geethame Padiye
துதி கீதமே பாடியே
வாழ்த்தி வணங்கிடுவோம்
ஜோதியின் தேவனாம்
இயேசுவைப் பணிந்திடுவோம்

1.தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
தோளில் ஏந்தி சுமந்தனரே
சேதம் ஏதும் அணுகிடாமல்
காத்த தேவனைத் துதித்திடுவோம்

2.காரிருள் போன்ற வேளையில்
பாரில் நம்மைத் தேற்றினாரே
நம்பினோரைத் தாங்கும் தேவன்
இன்றும் என்றுமாய் துதித்திடுவோம்

3.பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
பாவம் யாவும் நீக்கினாரே
சொந்த இரத்தம் சிந்தி நம்மை
மீட்ட தேவனைத் துதித்திடுவோம்

4.கட்டுகள் யாவும் அறுத்துமே
கண்ணீர் கவலை அகற்றினாரே
துதியின் ஆடை அருளிச் செய்த
தேவ தேவனைத் துதித்திடுவோம்

5.வானத்தில் இயேசு தோன்றிடுவார்
ஆயத்தமாகி ஏகிடுவோம்
அன்பர் இயேசு சாயல் அடைந்து
என்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம்

Anpodu Emmai Poshikium அன்போடு எம்மைப் போஷிக்கும்

Anpodu Emmai Poshikium
1. அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே.

2. கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.

3. மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும்;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.

4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.

5. இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.

Saturday 2 November 2019

Thuthi Geethangalaal Pugalvaen துதி கீதங்களால் புகழ்வேன்

Thuthi Geethangalaal Pugalvaen
துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்துவங்களை
இயேசுவே இரட்சகா
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்

1. தினந்தோறும் உம் கானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்   --- துதி

2. அலைமோதும் இவ்வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும்போது
வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோடடியார்களை காருண்யத்தால்   --- துதி

3. துன்ப துயரங்கள் வாட்டும்போது
வேத வசனங்கள் ஆறுதலே
சங்கீதங்களால் மகிழ் பாடிடுவேன்
உந்தன் வாக்குகளை எண்ணி ஆனந்தமாய்    --- துதி

4. வானம் பூமியை படைத்தவரே
வாரும் என்று அழைக்கிறோமே
என்று வந்திடுவீர் ஆவல் தீர்ந்திடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்    --- துதி

Friday 1 November 2019

Singasanathil Veetrirukkum சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

Singasanathil Veetrirukkum
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை -2

கேரூபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே

இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை உடையவரே

அக்னிஜூவாலை போன்ற கண்களையும்
வெண்கலப் பாதங்களையும் உடையவரே

பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோல் உடையவரே

Kalvariye Kalvariye கல்வாரியே கல்வாரியே

Kalvariye Kalvariye
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே

1. பாவி துரோகி சண்டாளன்
    நானாயினும்
   பாதகம் போக்கிப்
   பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே

2. பாவியை மீட்கவே நாயகன்
    இயேசு தம்
    ஜீவனின் இரத்தத்தைச்
    சிந்தின உன்னத – கல்வாரியே

3. நாதன் எனக்காக
   ஆதரவற்றோராய்ப்
   பாதகர் மத்தியில் பாதகன்
    போல் தொங்கும் – கல்வாரியே

4. முள்முடி சூடியே கூராணி
    மீதினில்
    கள்ளனை போல என்
    நாயகன் தொங்கிடும் – கல்வாரியே

5. சர்வம் படைத்தாளும்
    சொர்லோக நாயகன்
    கர்மத்தின் கோலமாய்
    நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே

6. எண்ணும் நன்மை ஏதும்
    என்னிலே இல்லையே
   பின்னை ஏன் நேசித்தீர்
   என்னை என் பொன் நாதா – கல்வாரியே

7. இவ்வித அன்பை யான்
    எங்குமே காணேனே
   எவ்விதம் இதற்கீடு
   ஏழையான் செய்குவேன் – கல்வாரியே

Wednesday 30 October 2019

Valiyentral Ethu Athu Jeeva Oli வழியென்றால் எது அது ஜீவ வழி

Valiyentral Ethu Athu Jeeva Oli
வழியென்றால் எது? அது ஜீவ வழி
வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு
                     வழியும் அவர் ஒளியும் அவர்
                     ஜீவ நதியும் அவரே
                     சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
                     ஜீவ அப்பமும் அவரே அவர் இயேசு

1.   ஒளியென்றால் எது? அது ஜீவ ஒளி
     ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு  --- வழியும்

2.  ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம்
   ஜலம் காட்டும் சற்குருயார்? அவர் இயேசு  --- வழியும்

3. சத்தியம் என்றால் எது? அது தேவ சத்யம்
   சத்தியம் காட்டிடும் சற்குணர்  யார்? அவர் இயேசு  --- வழியும்

4. அப்பம் என்றால் எது? அது ஜீவ அப்பம்
  அப்பம் ஊட்டிடும் அன்புளர்  யார்? அவர் இயேசு  --- வழியும்

5. அன்பு என்றால் எது? அது தேவ அன்பு
 அன்பு காட்டிடும் நற்குணர் யார்? அவர் இயேசு   --- வழியும்

Karthar yesu Varuvar கர்த்தர் இயேசு வருவார்

Karthar yesu Varuvar
கர்த்தர் இயேசு வருவார் 
நித்தம் காத்துத் தவிக்கும் தேவ புத்திரர்
களிப்பாய் வானத்தில் சேர்ந்திடவே

1.மேகத்தில் தோன்றும் மின்னொளியில்
மகிமைக் கிறிஸ்து வெளிப்படுவார்
தூதர் தொனி ஆரவாரத்துடன்
தேவ எக்காளம் முழங்கிடுமே - கர்த்தர்

2.ஆண்டவர் அழைத்த முதற்பலன்கள்
அமரர் வடிவாய் மாறிடுவோம்
கர்த்தருக்குள் மரித்தோர் எழும்ப
பக்தர்களோடு பறந்திடுவோம் - கர்த்தர்

3.தம் மணவாட்டி ஆயத்தமே
துதியே செலுத்தி மகிழ்ந்திடவே
நீதி விளங்கும் நல் வெண் வஸ்திரம்
ஜோதி இலங்கத் தரித்திடுவார்  - கர்த்தர்

4.நூதன சாலேம் வந்திறங்கும்
நடுவான மீதில் அலங்கரிப்பாய்
ஆட்டுக்குட்டியானவர் விருந்தே
அன்று சந்தோஷ சுப மங்களம் - கர்த்தர்

5.வெண் குதிரை மேல் ஏறிவந்தே
கண்கள் நெருப்பாய் மிக ஜொலித்தே
உண்மையும் சத்தியமும் நிறைந்தே
விண் மணவாளன் ஜெயம் எடுப்பார் – கர்த்தர்




Tuesday 29 October 2019

Inba Thunba Nerathilum Un இன்ப துன்ப நேரத்திலும் உன்

Inba Thunba Nerathilum Un
இன்ப துன்ப நேரத்திலும்  உன்
அன்புள்ள இயேசுவைப் பார்

1.இன்பத்தினால் அகமகிழ்ந்து 
கிலேசத்தினால் துக்கித்து
சிற்றின்பப் பேருலகில்
சிக்கிக்கொண்டு இருக்கும் போதும்  - இன்ப

2. சோதனையால் பிடிபட்டு 
இடுக்கண்ணில் இருக்கும் போதும்
சாத்தான் உன்னை மேற்கொள்ளும் போதும்
அக்கினி யாஸ்திரம் எரியும்போதும் - இன்ப

3.தோழரால் பகைக்கப்பட்டு 
மனகிலேசம் அடையும் போதும்
உலகம் உன்னை இகழ்ச்சி செய்து
தங்கள் இடத்தை  விட்டோடும் போதும் - இன்ப

4.அவர் தாமே சோதிக்கப்பட்டு 
பாடு நமக்காய் பட்டதினால்
அவர் சோதிக்கப்படும்
நமக்கு உதவி செய்ய வல்லவராம் - இன்ப

5.வறுமையினால் யாசித்து 
பாடு மிகப்படும் போது
சாத்தான் உன்னைப் பகடிப் பண்ணி
உன் விசுவாசத்தைக் குறைக்கும் போதும் – இன்ப

6.கடுநோயால் பெலன் குன்றி 
பெவீனத்தால் தள்ளாடி
ஜீவன் உனக்குக் கசப்பாகி
சாவை நீ விரும்பும் போதும் - இன்ப

7.பகைஞரால் கல்லெறியுண்டு 
மரண நேரம் கிட்டும்போது
பக்தன் ஸ்தேவானைப் போல
தைரியமாய் உன் இயேசுவைப் பார் - இன்ப

8.நான்  என் இயேசுவின் தரிசனத்தை 
நிமிஷந் தோறும் காண்கிறதால்
நான் தான் பயப்படாதிருங்கள் 
என்றவர் என்னை தேற்றுகிறார் – இன்ப

Sunday 27 October 2019

Naan Umai Patri Ratchaga நான் உம்மைப் பற்றி இரட்சகா

Naan Umai Patri Ratchaga
1.நான் உம்மைப் பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில்
நம்பி வந்து நிற்க்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

2.ஆ உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3.மா வல்ல வாக்கின் உண்மையைக்
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4.நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

Virunthai Serumen Alaikirar விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்

Virunthai Serumen Alaikirar
1.விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன் போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா பாவி வா

2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு
வா பாவி வா

3. மீட்பரின் பாதமும் சேராவிடில்
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
இயேசுவே வல்லவர்
இயேசுவே நல்லவர்
இயேசுவே ஆண்டவர்
வா பாவி வா

4. மோட்சத்தின் பாதையில் முன்செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்
வாடாத கிரீடமும்
ஆனந்த களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா பாவி வா

5. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர்
பாவமும் அறவே சுத்தம்செய்வீர்
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்