Sunday, 27 October 2019

Naan Umai Patri Ratchaga நான் உம்மைப் பற்றி இரட்சகா

Naan Umai Patri Ratchaga
1.நான் உம்மைப் பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில்
நம்பி வந்து நிற்க்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

2.ஆ உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3.மா வல்ல வாக்கின் உண்மையைக்
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4.நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.