Wednesday 31 July 2019

Ekkaalathum Karthar Yesuvai

எக்காலத்தும் கர்த்தர்  இயேசுவை
 எந்தன்  துணையாய் ஏற்றிடுவேனே
உயர்வோ தாழ்வோ எந்நிலையோ
எந்தன் தஞ்சம்  இயேசுவே
1.  மண்ணின் வாழ்வு மாயையாகும்
     மனிதன் காண்பது பொய்யாகும்
     மாறிடா நேசர் இயேசுவை
     மாறாத  அன்பு என்றும் போதுமே --  எக்காலத்தும்
2.  அலைகள் மோதி  எதிர்வந்தாலும்
     கலங்கிடேனே வாழ்க்கையிலே
    அசையா எந்தன் நம்பிக்கை
    நங்கூரம்  எந்தன் இயேசு போதுமே  --  எக்காலத்தும்
3.  அவரை   நோக்கி ஜெபிக்கும் போது
     அருகில் வந்து உதவி செய்வார்
    கைவிடாமல் கருத்துடன்
    காத்தென்னை என்றும் நடத்திடுவார்  --  எக்காலத்தும்
4.  தேவ பயமே ஜீவ ஊற்று
     மரண கண்ணிக்கு விலக்கிடுமே
    தேவ பாதையில் நடந்திட
    தேவாவியானவர் உதவி செய்வார்  --  எக்காலத்தும்
5.  முன்னறிந்து அழைத்த தேவன்
     முடிவு வரையும் நடத்திடுவார்
     தேவ சாயல்  மாறியே
     தேவாதி தேவனை துதித்திடுவேன்  --  எக்காலத்தும்

Thanthaen Ennai Yesuvae தந்தேன் என்னை இயேசுவே

Thanthaen Ennai Yesuvae

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
               அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன்
                  சரணங்கள்
     1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன்

2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன்

4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்

Tuesday 30 July 2019

Paavam Peruguthae பாவம் பெருகுதே

பாவம் பெருகுதே
பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம்
அதையும் இரட்சிப்பீரே

1. ஆத்தும இரட்சிப்பிழந்தவர்
ஆயிரம் ஆயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில்
அழிந்து சாகின்றாரே

2. இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
இன்றும் கெட்டழிகின்றார்

3. தானியேல் போல ஜெபித்திடும்
தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
தூங்கி களைத்துப் போனார்

4. எமது காரியமாகவே
யாரை அனுப்பிடுவேன்
என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
என்னுள்ளம் தொனிக்குதே

5. ஜீவனை வெறுத்து தியாகமாய்
சேவையும் செய்திடுவேன்
ஜீவனுக்கீடாக ஜனங்களை
ஜீவ தேவன் தருவார்

6.வெறுங்கையாய் பரலோகத்தில்
வந்திடேன் இயேசு நாதா
ஆத்தும ஆதாயம் செய்திடவே
ஆசீர் பொழிந்தனுப்பும்

Sunday 28 July 2019

Parama Erusalame Paralogam பரம எருசலேமே பரலோகம்

Parama Yerusalame Paralogam

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா – (4)

1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே

2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே

3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே

4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே

5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைநகராம் எருசலேமே

Thursday 25 July 2019

Naan Piramithu Nintru Peranbin நான் பிரம்மித்து நின்று பேரன்பின்

Naan Piramithu Nintru  Peranbin

1. நான் பிரம்மித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்

மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன்

2. முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன்

3. தம் கரத்தை என் மீதில் வைத்து
நீ சொஸ்தமாவாய் என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினார்

4. எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வார்

Paava Thosham Neekida பாவ தோஷம் நீக்கிட


Paava Thosam Neekida  பாவ தோஷம் நீக்கிட

1. பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!
தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே!

                        பல்லவி

மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே

2. என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே!
மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே!

3. வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே
புண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே!

4. மோட்ச மார்க்கம் இதுவே! மீட்பரின் இரத்தம் தானே!
இயேசு சுத்த தீர்த்தமே! மீட்பரின் இரத்தம் தானே

Have You Been To Jesus For The Cleansing Pow'r

1.Have you been to Jesus for the cleansing pow’r?
Are you washed in the blood of the Lamb?
Are you fully trusting in His grace this hour?
Are you washed in the blood of the Lamb?
 
     Are you washed in the blood,
    In the soul-cleansing blood of the Lamb?
    Are your garments spotless? Are they white as snow?
    Are you washed in the blood of the Lamb?

2.Are you walking daily by the Savior’s side?
Are you washed in the blood of the Lamb?
Do you rest each moment in the Crucified?
Are you washed in the blood of the Lamb?

3.When the Bridegroom cometh will your robes be white!
Are you washed in the blood of the Lamb?
Will your soul be ready for His presence bright,
And be washed in the blood of the Lamb?

4.Lay aside the garments that are stained with sin,
And be washed in the blood of the Lamb;
There’s a fountain flowing for the soul unclean,
O be washed in the blood of the Lamb.

Wednesday 24 July 2019

Parisutham Pera Vanthitirgala பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

Parisutham Pera Vanthittirgala
1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லா திருஸ்நானத்தினால்?
பாவதோஷம் நீங்க நம்பினீர்களா?
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

மாசில்லா – சுத்தமா?
திருப்புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

2. பரலோக சிந்தை அணிந்தீர்களா?
வல்ல மீட்பர் தயாளத்தினால்?
மறு ஜன்ம குணமடைந்தீர்களா?
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்?

3. மணவாளன் வரக் களிப்பீர்களா
தூய நதியின் ஸ்நானத்தினால்?
மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

4. மாசு கறை நீங்கும் நீசப்பாவியே
சுத்த இரத்தத்தின் சக்தியினால்!
முக்திப் பேறுண்டாம் குற்றவாளியே
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்!

Tuesday 23 July 2019

Naan Ummai Patri Ratchagaa நான் உம்மைப்பற்றி இரட்சகா

Naan Ummai Patri  Ratchagaa

1. நான் உம்மைப்பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தான்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப்பாடுவேன்

2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3. மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4. நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

Vinthai Kiristhesu Raja விந்தை கிறிஸ்தேசு ராஜா

Vinthai Kiristhesu Raja

விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)

சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை

1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை

2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை

3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை

4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை

Monday 22 July 2019

Theeya Manathai Matra Varum தீய மனதை மாற்ற வாரும்

Theeya Manathai Matra Varum

தீய மனதை மாற்ற வாரும்,  தூய ஆவியே – கன
                                           நேய ஆவியே

1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
                       பாவி நான் – தீய

2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
                   தீர்க்கும், தஞ்சமே – தீய

3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு
                 பாவி நான் ஐயா – தீய

4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்
                                இதயம் அஞ்சவே – தீய

5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
                          புகழ்ந்து காக்கவே – தீய

6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
                         கிருபை தேடவே – தீய

7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே – மிகு
                           தெளிவு வேண்டவே – தீய

8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே – மிக
                              சிறப்பாய் ஏற்றவே – தீய

Paaviyaagave Vaaren பாவியாகவே வாறேன்

Paaviyaagave Vaaren

பாவியாகவே வாறேன்,
பாவம் போக்கும்  பலியாம்
என் யேசுவே, வாறேன்
பாவியாகவே வாறேன்

1.பாவக்கறை போமோ என்
பாடாய்? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே
பொல்லாத பாவியே நான்

2. நீ வா, உன் பாவம் என்னால்
நீங்கும் என்று சொன்னீரே;
தேவா, உன் வாக்கை நம்பி,
 சீர்கேடன் நீசனும் நான்

3. பேய்மருள் உலகுடல்
பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு
போரில் அயர்ச்சியாய் நான்

4. ஜீவ செல்வ ஞான
சீல சுகங்கள் அற்றேன்,
தாவென்று வேண்டிய
சாவில் சஞ்சரித்த நான்

5. துன்பங்கள் நீக்கி உன்னை
   தூக்கி அணைப்பேன் என்றீர்
  இன்ப வாக்குத்தத்தத்தை 
  இன்றைக்கே நம்பியே நான்

6. உன்னைச் சேர ஒட்டாமல்
   ஊன்றிய தடை யாவும்
  உன்னன்பால் நீங்கி நல்
  உயிர் அடைந்தோங்கவே நான்

Saturday 20 July 2019

Naan Paavi Thaan Aanaalum Neer நான் பாவிதான் ஆனாலும் நீர்


Naan Paavi Thaan Aanaalum Neer

1. நான் பாவிதான் – ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.

2. நான் பாவிதான் – என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.

3. நான் பாவிதான் – மா பயத்தால்
திகைத்து, பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே, வந்தேன்.

4. நான் பாவிதான் – மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.

5. நான் பாவிதான் – இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.

6. நான் பாவிதான் – அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.

Friday 19 July 2019

Neengaatha Paavam Neengaathatheno நீங்காத பாவம் நீங்காததேனோ

Neengaatha Paavam Neengaathatheno

நீங்காத பாவம் நீங்காததேனோ
 நீங்கிடும் நாள்தானிதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

காணாத ஆட்டை தேடி உன் நேசர்
கண்டுன்னை சேர்த்திடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

என்பாவம் போக்கி என்னையும் மீட்டார்
உன்னையும் மீட்டிடுவார்
 பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
 வாவென்று அழைக்கிறார்

நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
 வாவென்று அழைக்கிறார்

Wednesday 17 July 2019

Paavaththin Paaraththinaal பாவத்தின் பாரத்தினால்

Paavaththin Paaraththinaal

பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் ஏசு நாதா (2)

1. கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே

2.கள்ளனாயினும் நான்
நீர் பெற்ற பிள்ளை அல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீ
தள்ளாதே சிலுவை நாதா

3.தந்தையை விட்ட பின்பு
தவிடு தான் ஆகாரமோ
மனம் கசிந்து நொந்தேன்
கண்ணீரை துடைத்திடுமே

4.தந்தை தாய் தாமரெல்லாம்
என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளில் தாங்குவார்
நீர் அல்லால் யாருமில்லை

Tuesday 16 July 2019

Unnaiyae Veruththuvittaal உன்னையே வெறுத்துவிட்டால்

Unnaiyae Veruththuvittaal

உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்

1. சிலுவை சுமப்பதனால்
சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும்
நிரந்தர அமைதிவரும்

2. பெயர் புகழ் எல்லாமே
இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே
நமது மறையட்டுமே

3. நாளைய தினம் குறித்து
கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம்
இனியும் நடத்திடுவார்

4. சேர்த்து வைக்காதே
திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே
குறைவின்றி காத்திடுவார்

5. தன்னலம் நோக்காமல்
 பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை
என்றுமே இருக்கட்டுமே

Kaanaatha Aattin Pinnae காணாத ஆட்டின் பின்னே

Kaanaatha Aattin Pinnae

காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்
கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே திரும்பி நீ வா

1.முள்ளும் புதரும் காடும் மலையும்
உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் – காணாத

2.சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி
கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்
யோனாவைப் போல நீ போனாயல்லோ
ஏசுபரன் வாக்கு வெறுத்தாயல்லோ – காணாத

3.என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்
இயேசுவின் பாதை நீ விட்டோடாதே
நீதி நிறைந்த தம் கரங்களை
நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் – காணாத

4.துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே
தேவ கோபாக்கினையால் மாள்வாரே
கர்த்தரின் பந்தியில் நீ பங்கடைய
கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய் – காணாத

5.எத்தனை நேரம் உன்னை அழைத்தார்
இத்தனை காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே
கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா – காணாத

Monday 15 July 2019

Alaikkiraar Alaikkiraar Itho அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

Alaikkiraar Alaikkiraar  Itho

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா! உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ

1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும்

2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார்

3. துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ

4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்த்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ

5. கல்லறை திறக்க காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே

6. சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற் வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார்

Innamum Thamathamaen இன்னமும் தாமதம் ஏன்



1. இன்னமும் தாமதம்  ஏன்
    இன்ப சத்தம்  கேளாயோ
    இன்னலின்றிக் காத்திட
    இயேசுன்னை அழைக்கிறாரே

                       ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
                       நித்திய ஜீவனுண்டே
                       நீங்கிடா அவரன்பையே
                       நாடி நீ வந்திடாயோ

2. கல்வாரி மேட்டினிலே
    கரங்களை விரித்தவராய்
   காத்துன்னை ரட்சித்திட
   கனிவுடன் அழைக்கிறாரே --- ஜீவனின்

2. லோகத்தின் இன்பமெல்லாம்
     மாறிடும்   நொடிப் பொழுதில்
     மாறிடா நேசர் இயேசு
     மாண்புடன் அழைக்கிறாரே --- ஜீவனின்

3. நாளை உன் நாளாகுமோ
     நாடாயோ நாதனை நீ
    நாசலோகை மீட்டிட
    நாதன் அழைக்கிறாரே  --- ஜீவனின்

Saturday 13 July 2019

Ennai Nesikkintrayaa என்னை நேசிக்கின்றாயா



Ennai Nesikkintrayaa

என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா?

சரணங்கள்

1. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் — என்னை

2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார்
உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா — என்னை

3. வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
ஓடி வந்தேன் மானிடனாய் — என்னை

 உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான்
கல்வாரி காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ!

Alaiththeerae Yesuvae அழைத்தீரே இயேசுவே



Alaiththeerae Yesuvae

அழைத்தீரே இயேசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே

2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே

3. ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் — அழைத்தீரே

4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிரணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் — அழைத்தீரே

5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் — அழைத்தீரே

6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் — அழைத்தீரே

Friday 12 July 2019

Maaridaathor Nesa Meetper மாறிடாதோர் நேச மீட்பர்

Maaridaathor Nesa Meetper

மாறிடாதோர் நேச மீட்பர்
மாற்றுவார் உன் வேதனை
பாவத்தாலும் நோயினாலும்
வருந்துவானேன் நம்பிவா
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்

லோக மாந்தர் கைவிடுவார்
துரோகம் கூறி தூற்றுவார்
தூய இயேசு மெய் நேசமாய்
துன்பம் தீர்ப்பார் நம்பி வா
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்

வல்ல மீட்பர் கண்ணீர் யாவும்
வற்றிப் போகச் செய்குவார்
வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல்
என்றும் ஊறும் நம்பி வா
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்

Yesuvai Pinpatrum Manithargal இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்


Yesuvai Pinpatrum Manithargal

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்
சரணங்கள்
1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா - நீ வா
உலக மாமிச ஆசை
வீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்

2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா
எல்லாவற்றையும் விற்று வா - நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்

3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்

4. பின்பற்ற வருகிறேன் நான் - நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானே
இயேசுவே இறங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன் --- எந்தன்

Wednesday 10 July 2019

Appa Pithaavae Anpaana Deva அப்பா பிதாவே அன்பான தேவா



Appa Pithaavae Anpaana Deva

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

1. எங்கோ நான் வாழ்ந்தேன்  அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறிவிட்டீர்

நன்றி உமக்கு நன்றி (2)

2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்

நன்றி உமக்கு நன்றி (2)

3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே

நன்றி உமக்கு நன்றி (2)

4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே

நன்றி உமக்கு நன்றி (2)

Karththarukku Kaaththirunthu கர்த்தருக்கு காத்திருந்து




Karththarukku Kaaththirunthu

கர்த்தருக்கு காத்திருந்து
கழுகு போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்

புதுபெலன் அடைந்திடுவாய் – நீ
புதுபெலன் அடைந்திடுவாய்

1. தாகம் உள்ளவன் மேல்
ஆவியை ஊற்றிடுவார்
வறண்ட நிலத்தின் மேல்
தண்ணீரை ஊற்றிடுவார்

2. சர்ப்பங்களை எடுப்பாய்
தேள்களையும் மிதிப்பாய்
சத்ருவின் அதிகாரம்
சகலமும் மேற்கொள்வாய்

3. சாத்தானின் கோட்டைகளை
சத்தியத்தால் தகர்ப்பாய்
சிலுவையை சுமந்திடுவாய்
ஜெயக்கொடி ஏற்றிடுவாய்

4. கர்த்தரில் பெலனடையும்
பாக்கியம் பெற்றிடுவாய்
பெலத்தின் மேல் பெலனடைந்து
சீயோனுக்கு வருவாய்

Tuesday 9 July 2019

Engalukkullae Vaasam Seiyum எங்களுக்குள்ளே வாசம் செய்யும்



எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா

ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே  (2)

1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே(2)
வேதவசனம் புரிந்துகொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2)

2. கவலை கண்ணீர் மறக்கணும்..
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே (2)
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே  (2)

3. எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழிநடத்தும் ஆவியானவரே (2)
உம்விருப்பம் இல்லாத
இடங்களுக்கு செல்லாமல்
தடுத்து றிறுத்தும் ஆவியானவரே  (2)

4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் தீக்கணைகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே  (2)
உடல் சோர்வுகள் அசதிகள்
பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே  (2)

Monday 8 July 2019

Yesuvai Naam Engae Kaanalaam இயேசுவை நாம் எங்கே காணலாம்



Yesuvai Naam Engae Kaanalaam

இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்

பனி படர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமா?

1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலை கடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே

2. வான மதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின் மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழும் இடம் கூறிட மாட்டாயோ

3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்

Sunday 7 July 2019

Nenjaththilae Thooimaiyundo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ


Nenjaththilae Thooimaiyundo

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்

1 வருந்தி சுமக்கும் பாவம்
 உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
 செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும்

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்

 2 குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும்

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்

Varuvaai Tharunamithuvae வருவாய் தருணமிதுவே


Varuvaai Tharunamithuvae

 வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

1வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் – வருவாய்

2.கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை – வருவாய்

3.அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை – வருவாய்

4.வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே – வருவாய்

5.தீராத பாவம், வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய – வருவாய்

6.சத்திய வாக்கை நம்பியே வா
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பெயரை ஜீவா புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார் – வருவாய்

Saturday 6 July 2019

Intha Kaalam Pollathathu இந்த காலம் பொல்லாதது





Intha Kaalam Pollathathu

இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் வாழ்க்கை  தான்
அது வாடகை வீடு தான்

1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார்  ---  இந்த

2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
ஜெய வீரனாய் திகழ வா --- இந்த

3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே  --- இந்த

4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்  --- இந்த

Friday 5 July 2019

Vaasalandai Nintru Aasaiyai வாசலண்டை நின்று ஆசையாய்



Vaasalandai Nintru Aasaiyai

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே

1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயே
காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்
கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை

2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி
தற்பரன் தயவை தள்ளிடலாமா?
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை

3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்து
மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்
ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? — வாசலண்டை

4. மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில்
மகிபரின் இராஜ்ஜியம் காணக் கூடுமோ
பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும் மெய்யாய்
பிரவேசிப்பாய் தேவ இராஜ்ஜியத்தில் — வாசலண்டை

5. வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே
இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ? — வாசலண்டை

Thursday 4 July 2019

Rettippaana Nanmaigal Thanthida இரட்டிப்பான நன்மைகள் தந்திட




Rettippaana Nanmaikal Thanthida

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே

முன் மாரிமேல் பின்மாரி மழையை
உன்னதத்தினின்று வந்திறங்குதே

1. பெலத்தின் மேலே மா பெலனே
புதுபெலன் நாம் பெற்றிட
சால்வைதனை எலிசா அடைந்தாற் போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்    --- இரட்டிப்பான

2. கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட
ஸ்திரிகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம்
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்  ---- இரட்டிப்பான

3. ஜெயத்தின் மேலே மா ஜெயமே
ஜெய தொனியாய்ப் பெற்றிட
போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெயிப்போம்  ---- இரட்டிப்பான

4. நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல் விசுவாசம் பெற்றிட
ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம்  ---- இரட்டிப்பான

5. பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல் பெற்றிட
நீதியின் சூரியன் இயேசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம்    ---- இரட்டிப்பான

6. மகிமையின் மேல் மா மகிமை
மறுரூபம் நாம் பெற்றிட
கண்ணிமை நேரத்திலே பறந்தேகி
கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம்   ---- இரட்டிப்பான

Wednesday 3 July 2019

Ratcha Perumane Paarum ரட்சா பெருமானே பாரும்




Ratcha Perumane Paarum

1. ரட்சா பெருமானே, பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்!
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்;
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

3. நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்;
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

4. ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்;
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

Arul Aeraalamaai Peiyum அருள் ஏராளமாய்ப் பெய்யும்



Arul Aeraalamaai Peiyum

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே!
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே

அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் — அருள்

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு ! வந்தருளுமேன் !
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன் — அருள்

4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே — அருள்

Tuesday 2 July 2019

Parisutha Aavi Engal Meethile பரிசுத்த ஆவி எங்கள் மீதிலே


Parisutha Aavi Engal Meethile

பரிசுத்த ஆவி எங்கள் மீதிலே
பொழியும் இந்த வேளையிலே
பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
புது சக்தியை அளித்திடுமே (2)

1. இம்மண்டலம் முழுவதையும்
 உம் ஆவியால் நிரப்பி விடும்
அனுப்பியே தாரும் பரிசுத்த அக்கினி (2)
அந்தகாரத்தை நீக்கி விடும்  (2) --- பரிசுத்த ஆவி

2. தேவ செய்தி அளிக்கவிருக்கும்
தேவ பிள்ளையை பெலப்படுத்தும்
தேவ லோகத்தின் ரகசியங்களை (2)
தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும்  (2) --- பரிசுத்த ஆவி

3. பேயின் சக்தி தகர்த்திடவே
நோயின் சாபம் அகற்றிடவே
வல்லமை தாரும் பெலமும் அருளும்  (2)
வரம் தந்தெம்மை அபிஷேகியும் (2) --- பரிசுத்த ஆவி

 4. பரலோகத்தின் அதிபதியே
பரலோகத்தின் பலகணிகள்
திறந்தே கொட்டிடும் கிருபை சொரியும் (2)
திருப்திப்படுத்தி அனுப்பும்  (2) --- பரிசுத்த ஆவி