Tuesday 31 May 2022

Jeevanulla Devan Ennodirupathal ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்


 


ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்

எனக்கு என்ன கவலை

ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்

எனக்கு ஏது கவலை

இல்லை கவலை எனக்கு இல்லை கவலை

ஏது கவலை எனக்கு ஏது கவலை

 

1. அஞ்சாதே முதலும் முடிவும் நான் என்றதால்

எனக்கு ஏன் கவலை

ஆபத்து காலத்தில் தப்புவிப்பேன் என்றதால்

பயமே எனக்கு இல்லை

 

2. வாக்கு மாறா வல்லவர் என்னோடிருப்பதால்

எனக்கு ஏன் கவலை

சர்வ வல்லவர் நிழலில் நான் உள்ளதால்

பயமே எனக்கு இல்லை

 

3. வாதை உன் கூடாரத்தை அணுகாது என்றதால்

எனக்கு ஏன் கவலை

வழிகள் எல்லாம் என்னைக் காக்க தூதர்கள் உள்ளதால்

கலக்கம் ஏதுமில்லை

 

4. நித்தம் என்னை நடத்துவேன் என்று நீர் சொன்னதால்

எனக்கு என்ன கவலை

என் கிருபை போதும் என்ற வாக்கு இருப்பதால்

பயமே எனக்கு இல்லை

 

5. என்னை விசுவாசி அற்புதங்கள் காண்பாய் என்றதால்

எனக்கு என்ன கவலை

பரிசுத்தமாய் வாழ்ந்து பலர் பரத்துக்கு வரணுமே

அதுதான் எந்தன் கவலை


Sunday 29 May 2022

Ponnana Yesuvai பொன்னான இயேசுவை


 

பொன்னான இயேசுவை
புண்ணிய நல் நேசரை
கொண்டு செல்வோம் பூலோகம் எங்கும்
அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்

தேவனே வந்து நம்மை நடத்திடுவார்
தேவை அறிந்து பயன்படுத்திடுவார்

1. அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்
அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை
அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம்
அரணான கோட்டைகளை பிடித்திடுவோம்

2. அவர் எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்
இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார்
எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும்
இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்

3. காலமும் கடலலையும் காத்திருக்காதுஇந்த
காலத்திலே உலகை கலக்கிடுவோம்
கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம்


Friday 27 May 2022

Aaviyanavare Aaviyanavare ஆவியானவரே ஆவியானவரே


 


ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே, அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே

1. பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே

2. ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே

3. உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே

4. நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்தில் ஜீவநதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்கும் இடம் அசைய வேண்டுமே

5. வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்குகள் வேண்டுமே
கள்ளங்கபடு மாற வேண்டுமே
உள்ளத்தில் தேவ அன்பு வேண்டுமே

6. அந்நிய பாஷைகள் பேசியே
மண்ணிலே சாட்சியாய் வாழவே
விண்ணிலே உம்மை நான் சந்திக்க
புண்ணியரே என்னையும் நிரப்புமே


Thursday 26 May 2022

Aaviyana Engal Anbu Theivame ஆவியான எங்கள் அன்பு தெய்வமே


 


ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே

ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்

1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா

2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர் பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா

3. பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா

4. மனதைப் புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும்

5. தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா

6. பாவம், நீதி, நியாயத்தீர்ப்பை
கண்டித்து உணர்த்தும் ஐயா
பரிபூரண உம் சத்தியத்திற்குள்
பக்தர்களை நடத்தும் ஐயா


Wednesday 25 May 2022

Pallangalellam Nirambida Vendum பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்


 

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே

3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்

4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

5. அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம்


Tuesday 24 May 2022

Kartharai Thuthipen கர்த்தரை துதிப்பேன்


 

கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன் -2

1. யூத கோத்திரனை துதிப்பேன்
இம்மானுவேலரை துதிப்பேன் -2

2. ஏசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2

3. உந்தன் பெலனாக துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன் -2

4. நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2


Monday 23 May 2022

Anathi Snegathal அநாதி சிநேகத்தால்


 


அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

1. அனாதையாய்  அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே

2. நிலையில்லாத உலகத்தில்
அலைந்தேனையா
நிகரில்லாத இயேசுவே
அணைத்துக் கொண்டீரே

3. தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்டீரே
தாயைப் போல ஆற்றித்
தேற்றி நடத்தி வந்தீரே

4. நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனையா

5. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே


Magilchiyodu Thuthikirom மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்


 


மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் 
மன மகிழ்ந்து துதிக்கிறோம் 
மன்னவரே இயேசு ராஜா --  எங்க
மனதில் பூத்து மணம் வீசும் ரோஜா
இயேசு ராஜா சாரோன் ரோஜா

1. நாற்றமாக இருந்த வாழ்வை
வாசமாக மாற்றினீரே
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தமாய் மாற்றினீரே
நல்லவரேவல்லவரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வமே

2. நெருக்கத்திலே இருந்த என்னை
விசாலத்தில் வைத்தீரே
சேற்றினின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே ... அதிசயமே ...
ஆனந்தமே பரம ஆனந்தமே -- இயேசு

3. அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தால் கழுவி என்னை
சுத்தமாக ஆக்கினீரே
உன்னதரேஉயர்ந்தவரே
இருள் நீக்கும் ஒளிவிளக்கே -- உள்ளத்தின்

4. தாயைப்போல என்னை அவர்
சேர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பா அல்லோ ... அப்பா அல்லோ...
பிள்ளை அல்லோ செல்லப் பிள்ளை அல்லோ


Sunday 22 May 2022

Aandavar Padaitha Vetriyin ஆண்டவர் படைத்த வெற்றியின்


 

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் – 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் – 2

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்

2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் – 2
நீதிமான்களின் சபைகளிலே (கூடாரத்தில்)
வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி

3. தள்ளப்பட்ட  கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று – 2
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி

4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் – 2
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி


Saturday 21 May 2022

Um Naamam Uyaranume உம் நாமம் உயரணுமே


 


உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே

அப்பா பிதவே அப்பா

1. அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா

2. பிறர் குற்றம் மன்னித்தோம் ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே

3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா

4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்

5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே

6. ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே

7. உமக்காய் வாழணும் உம்குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே

8. அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா


9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா

10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே


Thursday 19 May 2022

Raja Neer Seitha Nanmaigal ராஜா நீர் செய்த நன்மைகள்


 


ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
நான் ஏறெடுப்பேன் நன்றிபலி
என் ஜீவ நாளெல்லாம்

நன்றி ராஜா இயேசு ராஜா (4)

1. அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா

2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளிச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா

3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா

4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்றீரையா
அன்பர் உம்கரத்தால் அணைத்து அணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா

5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கறைகளைப்  போக்கி
கூடவே வந்தீரையா

6. உமக்காக வாழ உம்  நாமம் சொல்ல
தெரிந்து எடுத்தீரையா
உம்மோடு வாழ ஊழியனாக
உருவாக்கி வந்தீரையா


Wednesday 18 May 2022

Nantri Bali Nantri Bali நன்றி பலி நன்றி பலி


 


நன்றி பலி நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமேஎன்
அப்பா உம் திருப்பாதமே

1. நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையாஅது
நிரந்தரமானதையா

கோடி கோடி நன்றி டாடி (3)

2. இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரேஇன்று
உறவாடி மகிழ்ந்திடுவேன்

3. ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா

4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையாஇயேசு

5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா

6. என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே

7. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே
ஆறுதல் நாயகனே


Nantri Entru Sollukirom Naatha நன்றி என்று சொல்லுகிறோம் நாதா


 

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)

1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்திரே நன்றி ராஜா

2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா

4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

5. தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா

6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே

7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா

8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா


Monday 16 May 2022

Idukkamana Vasal Valiye இடுக்கமான வாசல் வழியே


 


இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்

1. வாழ்வுக்கு செல்லும்
வாசல் இடுக்கமானது
பரலோகம் செல்லும்
பாதை குறுகலானது - சிலுவை

2. நாம் காணும் இந்த உலகம்
ஒருநாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம் - சிலுவை

3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு - சிலுவை

4. அழிவுக்கு செல்லும் வாயில்
மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை
மிகவும் விரிந்தது - சிலுவை


Yesu Ennodu Iruppatha இயேசு என்னோடு இருப்பத


 


இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
.... லலல்லாலாலா ம்ம்..

1. கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியுதம்மா

அகிலம் ஆளும் தெய்வம்என்
அன்பு இதய தீபம்

2. பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா

3. உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா

4. எரிகோ கோட்டை எல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா


Sunday 15 May 2022


 


போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு பதறாதே மனமே

1. அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே

.. ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே

2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர்  வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி..நன்றி..சொல்லு

3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு

4. நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு