Monday 28 November 2022

Unnatha Devanukke Magimai உன்னத தேவனுக்கே மகிமை


 


உன்னத தேவனுக்கே மகிமை
உலகில் சமாதானமாமே
காரிருள் நீங்கிடக் குவலய மீதினில்
பேரொளியாய் ஜெனித்தார்

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா துதியவர்க்கே

1. மானிடர் மேல் இவர்கன்பிதுவோ
மனுக்கோலமாய் மனுவேலனார்
மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
மானொளியாய் ஜெனித்தார்

2. தாரகை என அவர் தோன்றிடவே
நேர் பாதையில் நடந்திடவே
தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
தன் ஒளியாய் ஜெனித்தார்

3. வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
வல்ல தேவனின் ஏக சுதன்
வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
வானொளியாய் ஜெனித்தார்

4. தாவீதின் வேர் இவராய் அவனின்
ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
தாம் உதித்தார் ஒளியாய்


Sunday 27 November 2022

Pathai Theriyatha Aatai Pola பாதை தெரியாத ஆட்டைப் போல


 


பாதை தெரியாத ஆட்டைப் போல

அலைந்தேன் உலகிலே

நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

 

1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்

பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்

கல்வாரியினண்டை வந்தேன்

 பாவம் தீர நான் அழுதேன்பாதை

 

2. என் காயம் பார்த்திடு என்றீர்

உன் காயம் ஆறிடும் என்றீர்

நம்பிக்கையோடே நீ வந்தால்

துணையாக இருப்பேனே என்றீர்பாதை

 

3. ஊனினை உருக்கிட வேண்டும்

உள்ளொளி பெருக்கிட வேண்டும்

உம் ஆவியைத் தர வேண்டும்

எம் நெஞ்சம் மகிழ்ந்திட வேண்டும்பாதை


Friday 4 November 2022

Alleluah Namathaandavarai அல்லேலூயா நமதாண்டவரை


 

அல்லேலூயா நமதாண்டவரை
அவர் ஆலயத்தில் தொழுவோம்
அவருடைய கிரியையான
ஆகாய விரிவை பார்த்து

1. மாட்சியான வல்ல கர
மகத்துவத்துக்காகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும்
வீணையோடும் துதிப்போம்
மாசில்லா சுர மண்டலத்தோடும்
தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை தேன்
குழலோடும் துதித்திடுவோம்

2. அல்லேலூயா ஓசையுள்ள
கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை
பண்ணிசைத்து துதிப்போம்
அதிசய படைப்புகள் அனைத்தோடும்
உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும்
பாடித் துதித்து உயர்த்திடுவோம்


Wednesday 2 November 2022

 




அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய்  நாமும் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட
சாட்சிகளாய்  என்றும்
வாழ்ந்திடஇந்நாளிலே

1. தேடினேன் தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார்
துயரினில் நம்மைத் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

2. அன்பினால் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்


Tuesday 1 November 2022

Un Pugalai Paduvathu உன் புகழைப் பாடுவது


 

உன் புகழைப் பாடுவது என்
வாழ்வின் இன்பமையா
உன் அருளைப் போற்றுவது என்
வாழ்வின் செல்வமையா
     
1. துன்பத்திலும் இன்பத்திலும் நல்
தந்தையாய் நீ இருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல்
அன்னையாய் அருகிருப்பாய் 
அன்பு எனும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய் (2)       – உன் புகழை

2. பல்லுயிரை படைத்திருப்பாய் நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ
என்னையும் ஏன் அழைத்தாய் 
அன்பினுக்கு அடைக்கும் தாழ் 
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்  (2)     -உன் புகழை