Deva Sabaiyile Devan Eluntharulinar
தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்
1.பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் --- தேவ
2.ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே --- தேவ
3.இராப்பகலாய் தன் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் --- தேவ
4.உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் --- தேவ
5.சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே --- தேவ
6.ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம் --- தேவ
En Yesu Raja Saronin Roja
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)
1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு
2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு
3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு
Konja Kalam yesuvukkaga
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப் பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது (2)
அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்
ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்
1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன் (2)
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் --- கொஞ்ச
2. இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார் (2)
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் --- கொஞ்ச
3. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும் (2)
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே --- கொஞ்ச
4. பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக (2)
என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை --- கொஞ்ச
Vinnil Oor Natchathiram
விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்
ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை போற்றிடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்
1. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்திரியர் மூவரும் வந்தனரே
முன்னணை பாலனை கண்டனரே
பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம்
2. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்
Vinnil Oor Natchathiram
1.விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்
ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை போற்றிடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்
2. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்திரியர் மூவரும் வந்தனரே
முன்னணை பாலனை கண்டனரே
பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம்
3. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்
Van Velli Pragasikkuthe
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே (2)
1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் – வான்
2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்
3. இந்த மாடடை தொழுவத்திலே
அவர் மானிடனாய் பிறந்தார்
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
நம் இயேசுவை வணங்கிடுவோம் --- வான்
En Yesu Rajan Varuvar
என் இயேசு ராஜன் வருவார்
எண்ணிலடங்கா தூதரோடு
என்னை மீட்ட இயேசு ராஜன்
என்னை ஆளவே வருவார்
1.அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு
அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி
அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு
அவர் வருகை மிகபெரும் அதிர்ச்சி
2.உலகில் நடப்பவை எல்லாம்
அவர் வருகைக்கு உண்மையைக் கூறும்
அவர் வருகை மிகவும் சமீபம்
அவர் வரவை சந்திக்க ஆயத்தமா
3.வானில் ஓர் பேரொளி தோன்றும்
விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும்
மேற்கும் கிழக்கும் நடுங்க
மேகங்கள் மீதே வருவார்
Samathanam Oothum
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
அனுகூலரிவர் மனுவேலரிவர் --- சமாதானம்
2. நேய கிருபையின் ஓரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயரிவர் --- சமாதானம்
3. ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் --- சமாதானம்
4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே --- சமாதானம்
5. மெய்யாகவே மே சையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே --- சமாதானம்
6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே --- சமாதானம்
Arasanai Kanamalirupomo
அரசனைக் காணமலிருப்போமோ - நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ - யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ - யூத
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே - யூத --- அரசனை
2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் - மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே - யூத --- அரசனை
3. அலங்காரமனை யொன்று தோணுது பார் - அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்- நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் - யூத --- அரசனை
4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் - யூத --- அரசனை
5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை
Aanantha Geethangal Ennalum
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
1.புதுமை பாலன் திருமனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப் படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே --- ஆனந்த
2.மகிமை தேவன் மகத்துவ ராஜன்
அடிமை ரூபம் தரித்திக லோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே --- ஆனந்த
3.மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே --- ஆனந்த
4.அருமை இயேசுவின் திரு நாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே --- ஆனந்த
5.கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் --- ஆனந்த
Bethalehem Oororam
1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி --- பெத்தலகேம்
2.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் நேரம் --- பெத்தலகேம்
3.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான்வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூண்டோ
ஆன பழங்கந்தை என்ன பாடோ பாடோ --- பெத்தலகேம்
4.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி
மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி மோடி --- பெத்தலகேம்
5.ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்மகிமை கண்டு
அட்டியின்றிகாபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு --- பெத்தலகேம்
Thinam Thinam Nam Devanaiye
தினம் தினம் நம் தேவனையே
மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் (2)
1.இரக்கம் உருக்கம் நிறைந்தவரே
மறவாமல் நம்மை காப்பவரே (2)
சிறந்த நாமம் உடையவரே
அரணான துணையாய் இருப்பவரே (2) - தினம்
2.அன்பின் உருவம் உடையவரே
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே (2)
ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே
அன்னையை போல அணைப்பவரே (2) - தினம்
3.விண்ணில் மகிமை உடையவரே
மண்ணில் சமதானம் தருபவரே (2)
என்னில் தினமும் வாழ்பவரே
உன்னில் அழைத்தால் வருபவரே (2) - தினம்
Ponnana Neram Ven Pani
பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்
1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார்
உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்
2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மேய்ப்பர் வருகிறார்
அல்லேலுயா பாடுவோம்
மேய்ப்பரை வாழ்த்துவோம்
3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்
அல்லேலுயா பாடுவோம்
தேவ மைந்தரை வாழ்த்துவோம்
Yesu Manidanai Piranthar
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
1.மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே--- இயேசு
2.ஆலோசனை கர்த்தரே இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே --- இயேசு
3.மாட்டுத் தொழுவத்திலே பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர்
ஏழ்மையின் பாதையிலே --- இயேசு
4.பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே --- இயேசு
5.அன்னாளும் ஆலயத்தில் அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே கூறி
தூயனைப் புகழ்ந்தனரே --- இயேசு
6.யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் --- இயேசு
Maanida Uruvil Avatharitha
மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
1.ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் --- மானிட
2.கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி --- மானிட
3.இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா --- மானிட
4.அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் --- மானிட
5.கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார் --- மானிட