Sunday 29 September 2019

Nee Iraivanai Thedi Kondiruka நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க

Nee Iraivanai Thedi Kondiruka
நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்  (2)
நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார் (2)

1. அழுகையில் அவரை அழைத்திடுங்கள்
அழுகுரல் கேட்டு அரவணைப்பார்
 நீதியைப் பூவினில் இறைத்திடுங்கள்
நீதியின் தலைவன் சிரித்திடுவார்

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்

2. இரக்கம் கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவார்
தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்
வாய்மையின் உருவில் வளர்ந்திடுவார்

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்

Karthave Thevargalil கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்  (2)

1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)

2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)

3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2)
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2)

Enthan Kanmalaiyanavare எந்தன் கன்மலையானவரே

Enthan Kanmalaiyanavare 
எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே(4)

1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே — ஆராதனை

2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை

3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை

Saturday 28 September 2019

Aaseervathikum Devan Nammai ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை

Aaseervathikum Devan Nammai
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே

1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே (2)

2. அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே             
ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே (2)

3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே (2)

துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை ஆசிர்வதிப்பாரே

Anbe Pirathanam Sagothara அன்பே பிரதானம் சகோதர

Anbe Pirathanam Sagothara
அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

1.பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்

2.பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே

3.என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை

4.சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

5.புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா

6.சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது

7.சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்

Eppadi Paduven Nan எப்படி பாடுவேன் நான்

Eppadi Paduven Nan
எப்படி பாடுவேன் நான்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2

1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில் (2)
அடைக்காத ஆண்டவரல்லோ (2)

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே  (2)
எப்போதும் பாடிடுவேன் (2)

3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே (2)
அதிகமாய் ஆசீர்வதித்தீர்(2)

Pitha Kumaran Parisutha Aaviyanavaram பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்

Pitha Kumaran Parisutha Aaviyanavaram 
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம்

1. பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்

2. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்

3. வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கீந்து
ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

Deva Senai Vana Meethu தேவசேனை வானமீது

Deva Senai Vana Meethu
1.   கோடிகோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )

2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )

3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )

Thuthi Umake Yesu Natha துதி உமக்கே இயேசு நாதா

Thuthi Umake Yesu Natha
துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உம்மையே
நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
எண்ணியே துதித்திடுவோம்

1.கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை
காருண்யத்தாலே காத்தீரே
வல்ல தேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம்

2.தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தந்தைபோல் எம்மை சுமந்தீரே
ஜீவனைத் தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம்

3.உன்னதர் உந்தன் மகிமையைக் காண
சீயோனை எமக்கு காட்டினீரே
இயேசுவே உந்தன் வருகையின் நாளை
எண்ணியே துதித்திடுவோம்

4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
ஜீவனை வைத்தே துதித்திடவே
நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

Enthan Yesu Enaku Nallavar எந்தன் இயேசு எனக்கு நல்லவர்

Enthan Yesu Enaku Nallavar
எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர்

கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் சூடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை ஊற்றினதால்

அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரை
துதிக்கப் படத்தக்கவரே

புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அனுதினம் என்னை வழி நடத்தும்

எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன்

Engum Pugal Yesu Rajanuke எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

Engum Pugal Yesu Rajanuke
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
உங்களையல்லவோ உண்மை வேதங்காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்.

1.ஆயிரத் தொருவர் ஆவிரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி ஏசுவுக்கிதயம் தந்திடுவீர்

2.கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண் திறக்கவே
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்

3.தாழ்மை சற்குணம் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி
பாழுந்துற்குணமும் பாவச் செய்கை யாவும்
பறந்தோட பாற்பதுங்கள் பாரமன்றோ

4.சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே துயன் வீரரே
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்

Friday 27 September 2019

Mana Valvu Puvi Valvinil Valvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

Mana Valvu Puvi Valvinil Valvu
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
                                     சரணங்கள்
1. துணை பிரியாது, தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது - நல்ல --- மண

2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா,
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? - நல்ல --- மண

3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல --- மண

4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறை  மே தாவி
அன்றியிப் பூவி லமிர்த   சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல --- மண

Aseervathiyum Karthare Aanantha ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த

Aseervathiyum Karthare Aanantha
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்

2. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே

3. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன்

4. ஞான விவாகம் எப்பொதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே

Aananthame Jaya Jaya ஆனந்தமே! ஜெயா! ஜெயா!

Aananthame Jaya Jaya 
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே

1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே

2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே

3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்
தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே

Adenil Aathi Manam ஏதேனில் ஆதி மணம்

Adenil Aathi Manam
1. ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே

2. இப்போதும் பக்தி யுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்

3. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணை
கொடுக்க வாருமே

4. இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே

5. மெய் மணவாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே

6. நீரும் இந்நேரம் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி
மெய்ப் பாக்கியம் ஈந்திடும்

7. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்

Puthik Ketatha Anbin புத்திக் கெட்டாத அன்பின்

Puthik Ketatha Anbin
1. புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.

2. ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்.

3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.

Ullam Aanantha Geethathile உள்ளம் ஆனந்த கீதத்திலே

Ullam Aanantha Geethathile 
உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்

1. பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம்

2. மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைவிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம்

3. உலகம் முடியும் வரையும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே – உள்ளம்

Enni Enni Thuthi Seivai எண்ணி எண்ணி துதிசெய்வாய்

Enni Enni Thuthi Seivai
எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே

1. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே!

2. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்

3. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்

Unnaiyum Ennaiyum Ratchikkave உன்னையும் என்னையும் இரட்சிக்கவே

Unnaiyum Ennaiyum Ratchikkave
1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
குருசில் கண்டேன் குருசில் கண்டேன்  குருசில் கண்டேன்  என் இயேசுவை

2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
குருசில் கண்டேன் குருசில் கண்டேன் குருசில் கண்டேன்   என் இயேசுவை

3. மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
சோர்ந்திடாதே நம்பியேவா  நிச்சயம் நேசர் ஏற்றுக்கொள்வார்

4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
அழைக்கிறார் அழைக்கிறார்  அழைக்கிறார்  அன்புடனே

 5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
அல்லேலூயா அல்லேலூயா  அல்லேலூயா  ஆமென்

Kereeth Aatru Neer Vatrinalum கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்

Kereeth Aatru Neer Vatrinalum
1. கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும் (2)
பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு (2)

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு (2)

2. இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்
உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார்

3. முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே
அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார்

4. இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்
மகிமையின் ப்ரசன்னத்தால்
மூடி நடத்திடுவார்

Thursday 26 September 2019

Siluvai Sumantha Uruvam சிலுவை சுமந்த உருவம்

Siluvai Sumantha Uruvam
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா (2)

1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டைவா — சிலுவை

2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்துமம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே — சிலுவை

3. பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
பாவமெல்லாம் சுமந்தார் — சிலுவை

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய் — சிலுவை

5. தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
ஜீவன் உனக்களிப்பார் — சிலுவை

Siluvaiyin Nilalil சிலுவையின் நிழலில்

Siluvaiyin Nilalil
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்(2)
அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையின்

1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்ததென் ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில் (2)
ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையின்

2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்(2)
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையின்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்(2)
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையின்

Athisayamana Olimaya Nadam அதிசயமான ஒளிமய நாடாம்

Athisayamana Olimaya Nadam 
அதிசயமான ஒளிமய நாடாம்
   நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் (2)

1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு – 2
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா

2. சந்திர சூரியன் இல்லை ஆனால்
இருள் ஏதும் காணவில்லை – 2
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமவர் – என்றும் பகல்

3. விதவிதக் கொள்கையில்லை
பலப்பிரிவுள்ள பலகை இல்லை – 2
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும்

4. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை – 2
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி

5. பல பல திட்டம் இல்லை
ஆளும் சட்டங்கள் ஏதும் இல்லை – 2
காவல்துறையில்லை கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சியில்லை – பேரானந்தமே

6. கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை – 2
தரித்திரர் செல்வர் சிறியவர் பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம்

7. இயேசுவின் இரத்ததினால்
பாவம் கழுவினால் செல்லலாமே – 2
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர்

Singara Maligaiyil Jeyageethangal சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள்

Singara Maligaiyil Jeyageethangal
சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன் (2)
                    சரணங்கள்
ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

1. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம் – சிங்கார

2. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார் – சிங்கார

3. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம் – சிங்கார

4. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே – அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம் – சிங்கார

Marithor Evarum uyirtheluvar மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

Marithor Evarum uyirtheluvar
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
வானெக்காளத் தொனி முழங்க.
             
                  அனுபல்லவி
எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்.
                சரணங்கள்

1. தூதர் மின் னாற்றிசை துலங்க,
ஜோதி வான் பறை இடி முழங்க,
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
பரிசுத் தோர் திரள் மனதிலங்க.

2. வானம் புவியும் வையகமும்
மட மட வென்று நிலை பெயர,
ஆன பொருளெல்லாம் அகன் றோட,
அவரவர் தம் தம் வரிசையிலே.

3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்;
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்.

Pilavunda Malaiye பிளவுண்ட மலையே

Pilavunda Malaiye
1. பிளவுண்ட மலையே புகலிடம் தாருமே,
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே,
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.

3. யாதுமற்ற ஏழை நான், நாதியற்ற நீசன் தான்,
உம் சிலுவை தஞ்சமே, உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.

4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில், நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே.

Wednesday 25 September 2019

Malaigalin Naduve Veelnthidum மலைகளின் நடுவே வீழ்ந்திடும்

Malaigalin Naduve Veelnthidum
1.மலைகளின் நடுவே வீழ்ந்திடும் அருவிகள்
கண்களை கவர்ந்திடுதே
வாழ்க்கையின் நடுவே இயேசுவின் அன்பு
அருவியாய் பாய்ந்திடுதே
குரங்குகள் பறவைகள் அருவியின் சத்தம்
செவிகளில் ஒலித்திடுதே
கூக்குரல் நடுவே அன்பரின் குரலும்
உள்ளத்தில் தொனித்திடுதே
         
          நான் கண்ட இன்ப வாழ்வு
          யேசுவால் அடைந்த வாழ்வு
          கல்வாரி அன்பால் பாவங்கள் தீர்ந்த
          நீடிய சுக வாழ்வு
ஆ ஹா  ஹா  ஹா  ஹா  ஹா
ஓ  ஹோ  ஹோ  ஹோ  ஹோ  ஹோ
லா  லா  லா  லா  லா  லா
ம்  ம்  ம்  ம்  ம் 

2. அடுக்கடுக்கான மலைகளின் மீது 
மேகங்கள் தவழ்ந்திடுதே
மிடுக்கான பாவங்கள் உணர்ந்திட  என்னை
தூயவன் தொடுகின்றாரே
கடின பாறைகளில் தோன்றிய மரங்கள்
ஓங்கி   வளர்ந்திடுதே
கடின என் உள்ளத்தில் எழுந்திடும் தீர்மானம்
யேசுவால் உயர்ந்திடுதே  --- நான் கண்ட

3. கன்மலை கசிந்து சிந்திடும் தண்ணீர்
அருவியாய் பெருகிடுதே
கன்மலை இயேசு சிந்திய ரத்தம்
என் பாவம் கழுவிடுதே
சிகரங்கள் பின்னே மறைந்திடும் சூரியன்
தெளிவாக தெரிகிறதே
நீதியின் சூரியன் இயேசு நடு வானில்
விரைவினில் தோன்றிடுவார் --- நான் கண்ட

4. வானத்தில் மிதந்திடும் விண்ணொளி தீபங்கள்
இரவிற்கு அழகு தரும்
வானவர் இயேசுவின் திருமறை வசனங்கள்
உள்ளத்தில் ஒளியை தரும்
கடலின் அலைகள் சீறி எழுந்து
தாமாக அடங்கி விடும்
கடவுளின் பிள்ளையின் வாழ்வினில் புயல்கள்
 எளிதினில் ஒடுங்கி விடும்  -- நான் கண்ட

Yesukiristhu Intha Pooviluthithar இயேசுக்கிறிஸ்து இந்தப் பூவிலுதித்தார்

Yesukiristhu Intha Pooviluthithar
1.இயேசுக்கிறிஸ்து  இந்தப் பூவிலுதித்தார் 
அவர் நாமத்தைப் புகழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுதும் மாந்தர் பாவங்களை
அவர் நீக்கிடப்  பிறந்தனரே
         
           விண்மீனின் ஒளி வழி  காட்டிடவே
           அவர் பாதத்தைப் பணியச் செல்வோம் 

2. ஆயர்கள் ஆடுகளைக்  காத்து நின்றிட
தேவ தூதர்கள் தோன்றி நின்றார்
அவர் உள்ளம் எல்லாம் இன்பம் பொங்கிடவே
நல்ல செய்தியை அறிவித்தனர்  --- விண்மீனின்

3. பெத்லகேம் நகருக்கு விரைந்தேகுவோம்
இயேசு பாலனை வணங்கிடுவோம்
நம் உள்ளந்தனை  அவர் துயிலிடமாய்
என்றும் மாற்றியே மகிழ்ந்திடுவோம்  --- விண்மீனின்

4. தூதர்கள் துதி செய்து தொழுது நின்றார்
இயேசு நாதனில் நிறைந்து நின்றார்
இந்தப் பார் முழுதும் இயேசு நாமம் எங்கும்
எந்நாளுமே  வளர்ந்திடவே  --- விண்மீனின்

En Aaththuma Nesar Yesuvai என் ஆத்தும நேசர் இயேசுவை

En Aaththuma Nesar Yesuvai
என் ஆத்தும நேசர் இயேசுவை
நான் அண்டிக்கொள்வேனே  (4)

1. நிலையில்லா என்னை கண்டிட் டார்
நித்திய  வழிக்குள்  நடத்திட்டார்
விலையில்லா இரத்தம் சிந்தினார்
விந்தையாய்  என்னைச் சந்தித்தார்
         
          பரகதி வாழ்வைத்  தந்தவர் பரமன் இயேசு கர்த்தரே
          நித்திய  வழிக்குள்  நடத்தியவர் நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
          அல்லேலுயா  அல்லேலுயா அல்லேலுயா  அல்லேலுயா   --- என்

2.  பாவத்தை கழுவி பரிகரித்தார்
 சாபத்தை நீக்கி சங்கரித்தார்
லாபம் இன்றேல்  ஜீவனே
தாபம் எனக்கினி அவர்தானே  --- பரகதி

3. என்னையே மீட்க என் இயேசு
தன்னையே  தியாகம் செய்தாரே
அன்னையாய் அப்பனாய் ஆனவர்
உன்னையும் அன்பாய் அழைக்கின்றார்  --- பரகதி

Valvinile Oli Veesida Vanavar வாழ்வினிலே ஒளி வீசிட வானவர்

Valvinile Oli Veesida Vanavar
1.வாழ்வினிலே  ஒளி வீசிட வானவர் பிறந்தனரே
வாழ்க்கையிலே இருள் அகல தூயவன்  உதித்தனரே
 ஆதித் தந்தை ஆதாம் ஏவாள் பாவம் போக்கிடவே
ஜோதித்  திரு தேவபாலன்  ஜோதியாய் அவதரித்தார்

கன்னியின் பாலனாய் முன்னணையில் நிலமிதில்  பிறந்தனரே
போற்றிடுவோம்  போற்றிடுவோம் இறைவனைப்  போற்றிடுவோம்

2. அன்னாளும் சிமியோனும் ஆர்வமாய் சென்றேகி
பொன்னான பாலனையே கண்டு மகிழ்ந்தனரே
விண்ணோரும் மண்ணோரும் புகழ்ந்து சாற்றிடவே
விண்ணின் மணி புல்லணையில் அழகுடன் தவழ்ந்தாரே

3. ஏதேனெனும்  தோட்டத்திலே ஏவையால்  வந்த வினை
எந்நாளும் ஓங்காமலே அன்றலன் அகற்றிடவே
பூதலத்தில்  புண்ணியமாய் கிருபைகள் செய்திடவே
பூவுலகில் புனிதமான ஆசிகள் அளித்திடுவோம்

4. மாடடையும் கொட்டிலிதில் மானிடன் தோன்றினாரே
கேடுகளை நீக்கிடவே காவலன் உதித்தனரே
பாவிகளாம்  மாந்தர்களை பரிசுத்தமாக்கிடவே
பாவிகளின் நேசர் அவர் பாரினில் அவதரித்தார்

Aararo Ariraro Deva Paalanuku Ariraro ஆராரோ ஆரிரரோ

Aararo Ariraro Deva Paalanuku Ariraro
ஆராரோ  ஆரிரரோ
தேவ பாலனுக்கு  ஆரிரரோ  (2)

1. ஆவகம்  பூத்த விடிவெள்ளிக்  கதிர்கள் ஆரவத் தலை நசுக்கும் 
என்று வான் தூதர் மொழிந்தார்
கானாயர் மிளிர்ந்த கன்னியின் பாலனுக்கே  --- ஆராரோ

2. ஆலோசனை மிகும் கர்த்தரின் தத்துவம் அதிசயம் அதிசயமே
இவர் அற்புதப் பாலகன்
இம்மானுவேலனாம்  தாவீதின் பாலனுக்கே  --- ஆராரோ

3. ஏழையின் பாவம் எட்டி உதைக்கவும் எளியோனை ரட்சிக்கவும்
தயை செய்தே இப் பூவகக்  காரிருள் நீக்கிடும்
மெய்  தேவ  பாலனுக்கே   --- ஆராரோ

4. தூபமாய் ஜெபமாய் போளமாயிருதயம் உனதடிக்கேப்  படைத்தேன்
சொந்தம் ஊற்றியே பொன்னகை சோலையில்
பிறந்திடும்  உன்னதன் பாலனுக்கே   --- ஆராரோ

Than Van Mathi Vin Meenodu தன் வான் மதி விண் மீனொடு

Than Van Mathi Vin Meenodu
தன்  வான் மதி விண்  மீனொடு
தாலாட்டுது  இன்பமாய் தூங்குவாய்

1. மெல்லிமை மூடிடு  கண்மணி விண்ணவர் பாடிடத்  தூங்குவாய்
வாடை வீசும் அந்தி நேரம் ஆடை  இன்றி தவிக்கும் நேரம்
ஆக்களுடைய சத்தத்துக்குள்  அழுது பிறந்தார்  --- தன்

2. கல்லணை உந்தனுக்கு தொட்டிலோ புல்லணை உந்தனுக்கு மெத்தையோ
மாட்டுக்கொட்டில் மாளிகையோ பாட்டுப் பாட தூதரோ
ஜோதி விண்மீன் உந்தனுக்கு  அகல் விளக்கோ  --- தன்

3. ஆரிரோ ஆரிரோ  ஆரிரோ ஆரிரோ ஆரிரோ தூங்குவாய்
காரிருளில் கடுங் குளிர் சேரும் இந்த நேரமிதில்
ஆரும் துணை இல்லையென்று அழுகின்றாயோ  --- தன்

Christmas Valthal Koorugintrom கிறிஸ்மஸ் வாழ்த்தல் கூறுகின்றோம்

Christmas Valthal Koorugintrom
கிறிஸ்மஸ்  வாழ்த்தல் கூறுகின்றோம் 
பரிசுத்தர்  பிறந்த தினமிதுவாம்  திரு
மைந்தன் மானிடனாயுதித்தார்
மகிமையை வெறுத்து புவிதனிலே
       
        வான ரடி  பணி   நாதா நர குரு
        வான கனி மரி  தேனே கழல் சரண்

1. மந்தை ஆயர்கள் தேடி வர  கன
விந்தை ஞானியர் உவந்து வர பல
மைந்தர் எமையே  சந்தித்திட
சுந்தரன் கந்தையை போர்த்துக் கொண்டார்  --- வான

2. ஆதி கிருபாசனம்  துறந்து
அழகான மோட்சம் அதை மறந்து
மனு ஜோதிக்கு  பதேத் துணர்ந்த 
ஜோதி மனு உருவாய் வந்தார்  --- வான

3. மானிடர்களை வான் சேர்க்க கனி
மரியின் மடியில் மகிழ்ந்துதித்து கனி
வினையைத் தீர்த்திட விண்ணை விட்டு
வந்தார் மண்ணின் முன்னணையில்   --- வான

Mannavan Yesu Manidanai மன்னவன் இயேசு மானிடனாய்

Mannavan Yesu Manidanai
மன்னவன் இயேசு மானிடனாய்
மனுவை மீட்க தோன்றினாரே

1. பாரெல்லாம் படைத்தீர் ஒற்றையாலே
பாலகர் தம்மையும் தள்ளினாரே
ஆரிரோ என்ற என் தாய் உள்ளத்தை
வாரீரோ உன்னை என் வீடாக்கினார்  --- மன்னவன்

2. கந்தை என் வீதியில் கலைத்திட
கந்தை உடை தனை  தரித்தாரே
விந்தையில் நீர் சித்தம் மஞ்சம் தந்து
மந்தைக்குள் நீர் நின்று பேசிடவே   --- மன்னவன்

3. மூன்று ஜோடிகள் பிடித்திங்கு
மூன்றிலொன்றோனை பணிந்தன
ஞானிகள் ஞானத்தையாக மாற்றி
ஆவிக்குள் ஞானமும் பெலனுமாய்  --- மன்னவன்

Tuesday 24 September 2019

Motcha Yaathirai Selgirom மோட்ச யாத்திரை செல்கிறோம்

Motcha Yaathirai Selgirom
1.மோட்ச யாத்திரை செல்கிறோம்
மேலோக வாசிகள் – இம்மாய லோகம்
தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து செல்கிறோம் கரையின் ஓரமே
காத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம்

ஆனந்தமே  ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் வாழுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

2.சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்
நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே   --- ஆனந்தமே 

3.அள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் --- ஆனந்தமே 

4.மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்  --- ஆனந்தமே 

5.கர்த்தர் என் அடைக்கலம் கவலை
இல்லையே – இக்கட்டு துன்ப
நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்  --- ஆனந்தமே 

Alagai Nirkum Yaar Ivargal அழகாய் நிற்கும் யார் இவர்கள்

Alagai Nirkum Yaar Ivargal
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 
            சரணங்கள்

1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர் — அழகாய்

2. காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் — அழகாய்

3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய்

4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்

5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் பிதாவின்  முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று — அழகாய்

6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை — அழகாய்

Deva Sayal Aga Mari தேவ சாயல் ஆக மாறி

Deva Sayal Aga Mari
தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்

1.அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் (2)

2.பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் (2)

3.காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் (2)

4.உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவிப்பேனே நீடுழியாய் (2)

Paavaththin Palan Naragam பாவத்தின் பலன் நரகம்

Paavaththin Palan Naragam
1.பாவத்தின் பலன் நரகம் நரகம் 
ஓ பாவி நடுங்கிடாயோ,
கண் காண்பதெல்லாம் அழியும் அழியும் 
காணாததல்லோ நித்தியம்
                 
                    இயேசு இராஜா வருவார்
                   இன்னுங் கொஞ்ச காலந்தான்
                   மோட்சலோகம் சேர்ந்திடுவோம்

2.உலக இன்பம் நம்பாதே, நம்பாதே 
அதின் இச்சை யாவும் ஒழியும்
உன் ஜீவன் போகும் நாளிலே, நாளிலே 
ஓர் காசும்கூட வராதே

3.உன் காலமெல்லாம் போகுதே, போகுதே 
உலக மாய்கையிலே,
ஓ தேவகோபம் வருமுன், வருமுன் 
உன் மீட்பரண்டை வாராயோ

4.தேவன்பின் வெள்ளம் ஓடுதே,  ஓடுதே 
கல்வாரி மலை தனிலே
உன் பாவம் யாவும் நீங்கிப்போம், நீங்கிப்போம் 
அதில்ஸ்நானம்செய்வதாலே.

5.மாபாவியான என்னையும்,  என்னையும் 
என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
ஒபாவி நீயும் ஓடிவா,  ஓடிவா 
தேவாசீர்வாதம் பெறுவாய்

Jeevanulla Devane Varum ஜீவனுள்ள தேவனே வாரும்

Jeevanulla Devane Varum
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்

தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர்

1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்

3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ

Monday 23 September 2019

Antha Naal Inba Inba Inba Naal அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்

Antha Naal Inba Inba Inba Naal
அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே
சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்
விரைவுடன் ஓடிவா விண்ணிலே சேரவே
வேகமாய் வேகமாய் வேகமாய்

2. கஷ்டம் நஷ்டம் பட்டப்பாடு பறந்து போகுமே
பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே
வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே
நீங்குமே நீங்குமே நீங்குமே

3. ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார்
பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்
ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே
மகிழுவோம் மகிழுவோம் மகிழுவோம்

4. புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே
நித்திய காலம் நாமும் அங்கே வாழ்வோமென்றுமே
தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே
என்றுமே என்றுமே என்றுமே

5. பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே
பாலர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே
பாலுடன் தேனுமாய்ப் பழரசம் பாங்குடன்
பருகுவோம் பருகுவோம் பருகுவோம்

Rajathi Rajan Yesu Varuvar இராஜாதி இராஜன் இயேசு வருவார்

Rajathi Rajan Yesu Varuvar
1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்
சந்திக்க ஆயத்தமா ?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
சந்திக்க ஆயத்தமா ?

கேள் ! கேள் ! மானிடரே
சந்திக்க ஆயத்தமா ?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
சந்திக்க ஆயத்தமா ?

2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
சந்திக்க ஆயத்தமா ?
பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
சந்திக்க ஆயத்தமா ?

3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?
கத்திக் கதறியே தாழிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?

4. உலகமனைத்துமே கண்டிடுமே
சந்திக்க ஆயத்தமா ?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
சந்திக்க ஆயத்தமா ?

Par Potrum Venthan பார் போற்றும் வேந்தன்

Par Potrum Venthan
1. பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்
பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்
பரிசுத்தவான்களோடு இணைத்தார்
இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே

அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்
ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்
ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்
அல்லேலூயா! அல்லேலூயா!

2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே
பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே
உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே
இயேசுவின் சிலுவை அடிவாரமே!

3. தாழ்மை உள்ளம் கொண்டு பின் செல்வேன் நானே
கந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்
உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கலே
வல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே!

 4. நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்
விட்டு வந்த பாவக் கிடங்கிற்குச் செல்லேன்
என் முன்னே அநேக சுத்தர் செல்கின்றார்
இப்பாதையே எந்தன் ஜீவ பாதையே!

En Yesu Rajan Varuvar என் இயேசு ராஜன் வருவார்

En Yesu Rajan Varuvar
என் இயேசு ராஜன் வருவார்
எண்ணிலடங்கா தூதரோடு
என்னை மீட்ட இயேசு ராஜன்
என்னை ஆளவே வருவார்

1.அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு
அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி
அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு
அவர் வருகை மிகபெரும் அதிர்ச்சி

2.உலகில் நடப்பவை எல்லாம்
அவர் வருகைக்கு உண்மையைக் கூறும்
அவர் வருகை மிகவும் சமீபம்
அவர் வரவை சந்திக்க  ஆயத்தமா

3.வானில் ஓர் பேரொளி தோன்றும்
விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும்
மேற்கும் கிழக்கும் நடுங்க
மேகங்கள் மீதே வருவார்

Saturday 21 September 2019

Megangal Naduve Vali Pirakkum மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

Megangal Naduve Vali Pirakkum
1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் (2)

2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)

3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)

4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவிலோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)

Mega Meethil Yesu Rajan மேகமீதில் இயேசு ராஜன்

Mega Meethil Yesu Rajan
மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வாராரே
ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்க
அவரே வாராரே

1. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
அவனியில் வாராரே
மீண்டவரோ மேலோகமே செல்ல
மேதினியை விடுவார் – மேகமீதில்

2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம்
கிளம்பியே யெழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே – மேகமீதில்

3. பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே
பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே
கூவியே கொடுத்திடுவார் – மேகமீதில்

4. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே அறியார்
ஆண்டவரே யறிவார் – மேகமீதில்

5. ஆயிரம் வருஷம் ஆளுகை செய்வார்
ஆண்டவர் இயேசு தாமே
நீதி சமாதானம் நிறைந்தேயிருக்கும்
ஜோதியின் ஆளுகையில் – மேகமீதில்

6. அல்லேலூயா கீதமே பாடி
அகமகிழ்ந்தாடிடுவோம்
வல்லவர் வரும் வேளையுமிதோ
மெல்லவே நெருங்கிற்றே – மேகமீதில்

Devan Varugitrar Vegam Irangi தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

Devan Varugitrar Vegam Irangi
1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்
           
                       பல்லவி
இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்தக் கடைசி காலத்திலே
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே

2. தம்மை விரோதித்த அவபக்தரை
செம்மை வழிகளில் செல்லாதவரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்

3. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்

4. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம்
சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
ஆவி மணவாட்டி வாரும் என்றே
ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்

Friday 20 September 2019

Alinthu Pogintra Aaththumaakalai அழிந்து போகின்ற ஆத்துமாக்களை

Alinthu Pogintra Aaththumaakalai
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்

தெய்வமே தாருமே
ஆத்ம பாரமே

1.இருளின் ஜாதிகள்
பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல்
வெளிச்சம் உதிக்கட்டும்

2.திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்

3.எக்காள சப்தம் நான்
மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன்
சத்தியம் பேசுவேன்

4.கண்ணீர் சிந்தியே
விதைகள் தூவினேன்
கெம்பீர சப்தமாய்
அறுவடை செய்கிறேன்

5.ஊதாரி மைந்தர்கள்
உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும்
விருந்து நடக்கட்டும்

Yesuvukkaai Thondu Seithidave இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே

Yesuvukkaai Thondu Seithidave
இயேசுவுக்காய்  தொண்டு செய்திடவே
ஏகமாய் எழும்பிடுவீர் சபையே
நாசமின் னானிலத்தில்  வருதே

1. தமக்கு முன் வைத்த மகிமை எண்ணி
தளராமல் பாடுகள் சகித்தவரை
நோக்கியே நாம் ஓடிடுவோம்
தாங்கியே காப்பாரே கடைசி  வரை   --- இயேசு

2. பாவத்தில் மா ஜனம் அழிகிறது
 லோகத்தின் ரட்சிப்பைக் கருதியே நாம்
நள்ளிரவோ  நடுப்பகலோ
நருங்குண்ட  ஆவியில் ஜெபித்திடுவோம்     --- இயேசு

3. மேகத்தில் இயேசு தான் தோன்றிடும் நாள்
வேகத்தில் நெருங்கிடும் காலமிதில்
பரிசுத்தத்தைக்  காத்துக்கொண்டே
பரமனுக்காய் கடும் சேவை  செய்வோம்   --- இயேசு

Ekala Satham Vanil எக்காள சத்தம் வானில்

Ekala Satham Vanil
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்

1.அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள

2.வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
தேவதூதர் பாடல் தொனிக்க
தேவன் அவரையே தரிசிப்போமே – எக்காள

3.கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள

4.கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள்  யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள

5.கள்ளர்கள் பரவி அங்கு மிங்கும்
கர்த்தரின் வார்த்தையைப் புரட்டுகிறார்
கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும்
கருத்துடன் நாம் விழித்திருப்போம் – எக்காள

Thursday 19 September 2019

Yesuvai Noki Naan Mun Nadapen இயேசுவை நோக்கி நான் முன் நடப்பேன்

   Yesuvai Noki Naan Mun Nadapen
   இயேசுவை நோக்கி நான் முன் நடப்பேன்
  அவர் முகத்திரு ஒளி என் முன்வீச
  என் பின்னே இருள்தான் பின்னோக்கிடேன்
  முன்னேறி பயணம் நான் தொடர்ந்திடுவேன்
                               சரணங்கள்
1. கோடிக் கோடி மக்கள் அழியும்போது
    ஓடி நீ தப்பிடு என்றார் என்னை
   மலை மீது ஏறிப் பின்னிட்டுப் பார்த்து
   சிலையாக மாறுவதா? (2)

2. கடல் மீது நடந்திட நான் துணிந்தேன்
   அலைமோதும் நிலை கண்டு பின்னோக்கினேன்
   ஆழ்ந்திட்ட என்னைத் தம் கரம் நீட்டி
   என்னுயிர் மீட்டு விட்டார் (2)

3. கலப்பையில் கை வைத்துப் பின் திரும்பி
    நலமான தகுதியை இழப்பதுண்மை
   சிலரேனும் இயேசு மந்தையில் சேர
   பெலத்தோடு பணிபுரிவேன் (2)

4. அவர் அடிச்சுவட்டிலே நான் நடந்தால்
  அவர் பாதக் காயத்தில் பாய்ந்த இரத்தம்
  என் பாதம் நனைக்க என்னுள்ளம் குளிர
  பின் வாங்கி இனி சோர்வேனோ (2)

Kattadam Kattidum Sirpigal கட்டடம் கட்டிடும் சிற்பிகள்

Kattadam Kattidum Sirpigal 
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல

1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம் (2)
பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம்

2. கைவேலை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம் (2)
கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம்

3. பாவமா மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம் (2)
அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம்

Urakkam Thelivom உறக்கம் தெளிவோம்

Urakkam Thelivom 
உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதிவரை
கல்வாரித் தொனிதான்
மழை மாறி பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்

1. அசுத்தம் களைவோம்
அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க
நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்

2. அச்சம் தவிர்ப்போம்
தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்தச் சாட்சிகள்
நம்மிடை தோன்றி
நாதனுக்காய் மடிவோம்

3. கிறிஸ்துவுக்காய்
இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ய மேன்மைக்காய்
கஷ்டம் அடைந்தோர்
நஷ்டப்பட்டதிலை

4. உயிர் பெறுவீர்
ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா
ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார்

Wednesday 18 September 2019

Vilaintha Palanai Arupparillai விளைந்த பலனை அறுப்பாரில்லை



Vilaintha Palanai Arupparillai
விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ! மனிதர் அழிகின்றாரே

1.அவர் போல் பேசிட நாவு இல்லை
அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த

2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?
தினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த

3. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த

Yesu Kiristhuvin Nal Seedaraguvom இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

Yesu Kiristhuvin Nal Seedaraguvom 
1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு

           நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
           அதி வேகமாய் செயல்படுவோம்

2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு

3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் – நம் இயேசு

4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் – நம் இயேசு

Irul Soolum Kalam Ini Varuthe இருள் சூழும் காலம் இனி வருதே



Irul Soolum Kalam Ini Varuthe
1. இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ? 

           திறவுண்ட வாசல் அடைபடுமுன்
           நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?
           நாட்கள் கொடியதாய் மாறிடுதே
           காலத்தை ஆதாயம் செய்திடுவோம் 

2. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்

3. விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்

4. இனி வரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே

5. இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே

Tuesday 17 September 2019

Vithaippum Aruppumae விதைப்பும் அறுப்புமே

Vithaippum Aruppumae
1. விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினில்
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே

சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே இன்று பிரதானம்

2. ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவெனக் கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு

3. நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து

4. ஆழக்கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ?

Kalmithikum Desamellam கால் மிதிக்கும் தேசமெல்லாம்



Kalmithikum Desamellam
கால் மிதிக்கும் தேசமெல்லாம்  – என்
காத்தருக்கு சொந்தமாகும்
கண் பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்

1.பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி
அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் 
 அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

2.எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் 
அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று 
அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

3.செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை 
அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

4.திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள்
அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள் 
அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

Manthayil Sera Aadugale மந்தையில் சேரா ஆடுகளே

Manthayil Sera Aadugale

எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்

1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை

2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்

Monday 16 September 2019

Nadaka Solli Tharum நடக்கச் சொல்லித் தாரும்



Nadaka Solli Tharum
நடக்கச் சொல்லித் தாரும்
இயேசுவே இயேசுவே [2]
தனித்துச் செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்

1. இருள் நிறைந்த உலகமிதில்
துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி
அன்பு கொண்ட தெய்வமே

2. அடம் பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே
அழைத்துச் செல்லும் இயேசுவே

Sunday 15 September 2019

Enakoththaasai Varum Parvatham எனக்கொத்தாசை வரும் பர்வதம்



Enakoththaasai Varum Parvatham
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்

1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்

2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே

3. என் காலை தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே

4. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்

Ennai Marava Yesu Natha என்னை மறவா இயேசு நாதா

Ennai Marava Yesu Natha
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே   --- என்னை

2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை  --- என்னை

3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே  --- என்னை

4. என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே.  --- என்னை

Enthan Jeba Velai எந்தன் ஜெபவேளை

Enthan Jeba Velai
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்

1.சோராது ஜெபித்திட
ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே
தயை கேட்டு உம் பாதம் வந்தேன்

2.உம்மோடு எந்நாளும்
உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேன்

3.நம்பிக்கை இல்லாமல்
அழிகின்ற மாந்தர்தனை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா

Thooyathi Thooyavare தூயாதி தூயவரே

Thooyathi Thooyavare
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்  (2)
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி

2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி

4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி

Eliyavin Devan Nam Devan எலியாவின் தேவன் நம் தேவன்

Eliyavin Devan Nam Devan
எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் – 2

1. வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்   --- கர்த்தரே

2. சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்  --- கர்த்தரே

3. தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன்  --- கர்த்தரே

4. வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்   --- கர்த்தரே

Saturday 14 September 2019

Thirukarathal Thangi Ennai திருக்கரத்தால் தாங்கி என்னை



Thirukarathal Thangi Ennai 
1. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே (2)

2. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

3. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

4. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை

Friday 13 September 2019

Deva Aaseervaatham Perykiduthey தேவ ஆசீர்வதம் பெருகிடுதே



Deva Aaseervaatham Perykiduthey
தேவ ஆசீர்வதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க

1. நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசிவரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்

2. குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம்

3. பொருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம்

Kuyavane Kuyavane Padaippin குயவனே குயவனே படைப்பின்



Kuyavane Kuyavane Padaippin
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே – குயவனே

2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம் கிருபையால்
உகந்த தாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே – குயவனே

3. மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே – குயவனே

Kaathu kulira Padungal காது குளிர பாடுங்கள்



Kaathu kulira Padungal
1. காது குளிர பாடுங்கள்  கிருபா சத்தியம்
புத்தி தெளியக் காட்டுங்கள்  திவ்விய வசனம்
வெல்க ! சத்திய வேதம் வாழ்க! நித்திய வேதம்
   
 அமிர்தமே! அற்புதமே!  திவ்விய  சத்தியம்
     அமிர்தமே! அற்புதமே!  திவ்விய  சத்தியம்

2. நல்ல செய்தியைக் கூறுமேன் கிருபா சத்தியம்
பாவ நாசத்தைக் காட்டுமேன் திவ்விய வசனம்
வான வருஷமாரி ஞான பொக்கிஷவாரி   --- அமிர்தமே

3. வேத நாயகர் பொழியும் கிருபா சத்தியம்
ஜீவ மங்கல மொழியும்  திவ்விய வசனம்
யேசு! எந்தனைப் பாரும் நித்தம் எந்தனைக் காரும்  --- அமிர்தமே

Anbil Ennai Parisuthanaaka அன்பில் என்னை பரிசுத்தனாக்க




Anbil Ennai Parisuthanaaka 
1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ

என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன் (2)

2. மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை – என்

3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர – என்

4. வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே – என்

5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் எப்படி பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே – என்

Jebathai Ketkum Engal Deva ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா





Jebathai Ketkum Engal Deva 
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம் 

ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்ததைப் பற்றிக்கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்யும்  --- ஜெபமே ஜீவன்

ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
வாகான தாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக் கொள்வோம்   --- ஜெபமே ஜீவன்

இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கிவிடும்
சலிப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்   --- ஜெபமே ஜீவன்

Wednesday 11 September 2019

Karthane Em Thunaiyaaneer கர்த்தனே எம் துணையானீர்

Karthane Em Thunaiyaaneer
கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்

1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே

2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2)
ஜீவனே உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

Adaikalame Umathadimai Naane அடைக்கலமே உமதடிமை நானே

Adaikalame Umathadimai Naane
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம்  நித்தம் நான் நினைப்பேனே

1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை

3. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை

4. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை

Tuesday 10 September 2019

Thanthaanai Thuthipomae தந்தானைத் துதிப்போமே

Thanthaanai Thuthipomae    தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே

விந்தையாய் நமக்கா னந்த னந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச் சீயோனே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை

2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை

3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை

4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கியெடுத்துக் கரத்திலேந்தி
தூரம் திரிந்த சீயோனே
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) – தந்தானை

5. சிங்காரக் கன்னிமாரே – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
சிங்காரக் கன்னிமாரே
மங்காத உம் மணவாளன் இயேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை

Anpe Pirathanam அன்பே பிரதானம்

Anpe Pirathanam

அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

1.பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்  --- அன்பே

2.பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே  --- அன்பே

3.என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை  --- அன்பே

4.சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள  --- அன்பே

5.புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா   --- அன்பே

6.சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது   --- அன்பே

7.சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்   --- அன்பே

Marida Em Maa Nesarae மாறிடா எம் மா நேசரே

Marida Em Maa Nesarae

1. மாறிடா எம் மா நேசரே – ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே

2. பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு

3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே — ஆ! இயேசு

4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க — ஆ! இயேசு

Monday 9 September 2019

Puthiya Padal Padi Yesu புதிய பாடல் பாடி பாடி இயேசு

Puthiya Padal Padi Yesu 

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

1. கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே  (2)
திடன் தந்தார் ஆவியாலே – எனக்கு  (2)   --- புதிய பாடல்

2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்  (2)
புவிதனில் தருபவரே – தினமும் (2)   --- புதிய பாடல்

3. அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா  (2)
வரங்களின் மன்னவனே – எல்லா  (2)  --- புதிய பாடல்

Yesu Raja Vanthirukirar இயேசு ராஜா வந்திருக்கிறார்

Yesu Raja Vanthirukirar

இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார்  --- கொண்டாடுவோம்

2. மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே (ளே)   --- கொண்டாடுவோம்

3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்   --- கொண்டாடுவோம்

Sunday 8 September 2019

Santhosham Ponguthey சந்தோஷம் பொங்குதே

Santhosham Ponguthey

சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே – சந்தோஷம்

2. சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன்
சொந்தமானாரே – சந்தோஷம்

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில்
நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு
என்றும் வாழுவேன் – சந்தோஷம்

Yesu Enthan Vaalvin இயேசு எந்தன் வாழ்வின்

Yesu Enthan Vaalvin

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்

1.எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்

2.பொல்லா தீமைகள் அகன்றோட
எல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும்

3.இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

Saturday 7 September 2019

Enthan Ullam Thangum எந்தன் உள்ளம் தங்கும்

Enthan Ullam Thangum

1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா (2)

2. மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா (2)

3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா  (2)

4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனிநான் அல்ல நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா (2)

Ratha Kottaikullae இரத்தக் கோட்டைக்குள்ளே

Ratha Kottaikullae 

இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்  --- இரத்தக்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே  --- இரத்தக்

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்   --- இரத்தக்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை   --- இரத்தக்

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்   --- இரத்தக்

Friday 6 September 2019

Iratham Jeyam இரத்தம் ஜெயம்

Iratham Jeyam
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் 
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்  (2)
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்(2)

2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் (2)

3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் (2)
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் (2)

Isravel En Janame Entrum இஸ்ரவேல் என் ஜனமே என்றும்

Isravel En Janame Entrum

இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
இடறிட வேண்டாம்
யேகோவா உன் தெய்வமானால்
ஏதும் பயம் வேண்டாம்

1.ஓங்கும் புயமும் பலத்த கரமும்
உன் பக்கமே யுண்டு
தாங்கும் கிருபை தயவு இரக்கம்
தாராளமாயுண்டு   – இஸ்ரவேல்

2. பார்வோன் கைக்கு விடுத்து மீட்ட
பஸ்கா ஆட்டுக்குட்டி
ஆரோன் மோசே என்னும் நல்ல
ஆசாரியர் உண்டு  – இஸ்ரவேல்

3. செங்கடலில் வழி திறந்த
சீயோன் நாயகனே
பங்கமின்றி பாலைவனத்தில்
பராமரித்தாரே – இஸ்ரவேல்

4.சத்துருக்களை சிதற அடித்து
சர்வ வல்ல தேவன்
யுத்தத்தில் உன் முன்னே சென்று
ஜெயமெடுத்தாரே   – இஸ்ரவேல்

5. பயப்படாதே சிறு மந்தையே
பார் நான் உன் மேய்ப்பன்
தயங்காதே மனம் கலங்காதே உன்
தேவன் தினம் காப்பேன் – இஸ்ரவேல்

Thursday 5 September 2019

Naan Unnai Vittu Vilaguvathillai நான் உன்னை விட்டு விலகுவதில்லை

Naan Unnai Vittu Vilaguvathillai

நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன்

1. பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்

2. திகையாதே கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – உன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன்

3. அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்

Deva Kirubai Entrumullathe தேவ கிருபை என்றுமுள்ளதே

Deva Kirubai Entrumullathe

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

1. நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே  ---- தேவ கிருபை

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே  ---- தேவ கிருபை

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே  ---- தேவ கிருபை

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே   ---- தேவ கிருபை

5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே   ---- தேவ கிருபை

6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே    ---- தேவ கிருபை