Wednesday, 25 September 2019

Christmas Valthal Koorugintrom கிறிஸ்மஸ் வாழ்த்தல் கூறுகின்றோம்

Christmas Valthal Koorugintrom
கிறிஸ்மஸ்  வாழ்த்தல் கூறுகின்றோம் 
பரிசுத்தர்  பிறந்த தினமிதுவாம்  திரு
மைந்தன் மானிடனாயுதித்தார்
மகிமையை வெறுத்து புவிதனிலே
       
        வான ரடி  பணி   நாதா நர குரு
        வான கனி மரி  தேனே கழல் சரண்

1. மந்தை ஆயர்கள் தேடி வர  கன
விந்தை ஞானியர் உவந்து வர பல
மைந்தர் எமையே  சந்தித்திட
சுந்தரன் கந்தையை போர்த்துக் கொண்டார்  --- வான

2. ஆதி கிருபாசனம்  துறந்து
அழகான மோட்சம் அதை மறந்து
மனு ஜோதிக்கு  பதேத் துணர்ந்த 
ஜோதி மனு உருவாய் வந்தார்  --- வான

3. மானிடர்களை வான் சேர்க்க கனி
மரியின் மடியில் மகிழ்ந்துதித்து கனி
வினையைத் தீர்த்திட விண்ணை விட்டு
வந்தார் மண்ணின் முன்னணையில்   --- வான

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.