கிறிஸ்மஸ் வாழ்த்தல் கூறுகின்றோம்
பரிசுத்தர் பிறந்த தினமிதுவாம் திரு
மைந்தன் மானிடனாயுதித்தார்
மகிமையை வெறுத்து புவிதனிலே
வான ரடி பணி நாதா நர குரு
வான கனி மரி தேனே கழல் சரண்
1. மந்தை ஆயர்கள் தேடி வர கன
விந்தை ஞானியர் உவந்து வர பல
மைந்தர் எமையே சந்தித்திட
சுந்தரன் கந்தையை போர்த்துக் கொண்டார் --- வான
2. ஆதி கிருபாசனம் துறந்து
அழகான மோட்சம் அதை மறந்து
மனு ஜோதிக்கு பதேத் துணர்ந்த
ஜோதி மனு உருவாய் வந்தார் --- வான
3. மானிடர்களை வான் சேர்க்க கனி
மரியின் மடியில் மகிழ்ந்துதித்து கனி
வினையைத் தீர்த்திட விண்ணை விட்டு
வந்தார் மண்ணின் முன்னணையில் --- வான
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.