Wednesday, 25 September 2019

Yesukiristhu Intha Pooviluthithar இயேசுக்கிறிஸ்து இந்தப் பூவிலுதித்தார்

Yesukiristhu Intha Pooviluthithar
1.இயேசுக்கிறிஸ்து  இந்தப் பூவிலுதித்தார் 
அவர் நாமத்தைப் புகழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுதும் மாந்தர் பாவங்களை
அவர் நீக்கிடப்  பிறந்தனரே
         
           விண்மீனின் ஒளி வழி  காட்டிடவே
           அவர் பாதத்தைப் பணியச் செல்வோம் 

2. ஆயர்கள் ஆடுகளைக்  காத்து நின்றிட
தேவ தூதர்கள் தோன்றி நின்றார்
அவர் உள்ளம் எல்லாம் இன்பம் பொங்கிடவே
நல்ல செய்தியை அறிவித்தனர்  --- விண்மீனின்

3. பெத்லகேம் நகருக்கு விரைந்தேகுவோம்
இயேசு பாலனை வணங்கிடுவோம்
நம் உள்ளந்தனை  அவர் துயிலிடமாய்
என்றும் மாற்றியே மகிழ்ந்திடுவோம்  --- விண்மீனின்

4. தூதர்கள் துதி செய்து தொழுது நின்றார்
இயேசு நாதனில் நிறைந்து நின்றார்
இந்தப் பார் முழுதும் இயேசு நாமம் எங்கும்
எந்நாளுமே  வளர்ந்திடவே  --- விண்மீனின்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.