Thursday 31 December 2020

Senaigalin Karthar Nallavare சேனைகளின் கர்த்தர் நல்லவரே


 Senaigalin Karthar Nallavare

சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மை காப்பவரே சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள் சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம் பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம் 1. வெள்ளங்கள் புரண்டு மோதினாலும் உள்ளத்தின் உறுதி அசையாதே ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும் ஏசு நம்மோடங்கு நடக்கின்றார் 2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம் ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும் கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன் 3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம் கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம் ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின் அன்பில் நிலைத்திருப்போம் 4. ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார் ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்

Wednesday 30 December 2020

En Meiparai Yesu என் மேய்ப்பராய் இயேசு


 En Meiparai Yesu

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது 1. என்னை அவர் பசும்புல் பூமியிலே எந்நேரமும் நடத்திடும் போதினிலே என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா என்றென்றும் இன்பமல்லவா 2. தம் பாதையில் என்னை நடத்திடவே என் கரத்தை பிடித்தே முன் நடப்பார் அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே 3. என்னோடவர் நடந்திடும் போதினிலே எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா 4. என்னையவர் அன்பால் நிரப்பியதால் எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால் என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே 5. என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள என்னை என்றும் போதித்து நடத்துகின்றார் என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் 6. விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய் என்னையவர் ஆயத்தமாக்கினார் என்னானந்தம் ஆஹா என்னானந்தம் எனக்கென்றும் பேரானந்தமே

Tuesday 29 December 2020

Athi Maram Pol Ethanai அத்திமரம் போல் எத்தனை


 Athi Maram Pol Ethanai

அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள் தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள் 1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம் இயேசு ஆசையோடு க‌னியைத் தேடினார் ஏமாற்ற‌ம் இப்ப‌டித்தானே ம‌னித‌ர்க‌ள் வாழும் வாழ்க்கை ப‌ல‌ வேஷ‌ம் 2. ஊருக்குள்ளே உத்த‌ம‌ர் போல ந‌டிப்பார்க‌ள் ஆனால் உண்மையிலே அத்தி ம‌ர‌ம் போல் இருப்பார்க‌ள் பேசுவ‌தெல்லாம் வேத‌ங்க‌ள் போடுவ‌தெல்லாம் வேஷ‌ங்க‌ள் 3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும் வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும் அன்பு அதிலே இல்லையென்றால் வாழ்ந்து என்ன லாபம் தான் 4. ம‌னித‌னை ம‌ட்டும் ந‌ம்புவ‌தாலே ப‌ய‌னில்லை ஆனால் இறைவ‌னை ம‌ட்டும் ந‌ம்பிடுவாய் துன்ப‌மில்லை க‌வ‌லைக‌ள் எல்லாம் போக்கிடுவார் க‌ண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்

Sunday 27 December 2020

Yesuvai Pol Alagullore இயேசுவைப் போல் அழகுள்ளோர்


 Yesuvai Pol Alagullore

1. இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாருமில்லை பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் வெறும் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் --- பூரண 3. எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய் உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் --- பூரண 4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் --- பூரண 5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால் --- பூரண 6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே --- பூரண

As With Gladness Men Of Old


 1. As with gladness men of old

did the guiding star behold as with joy they hailed its light leading onward beaming bright so most gracious God may we evermore be led to thee 2. As with joyful steps they sped Saviour to thy lowly bed there to bend the knee before thee whom heaven and earth adore so may we with willing feet ever seek thy mercy seat 3. As they offered gifts most rare at thy cradle rude and bare so may we with holy joy pure and free from sin’s alloy all our costliest treasures bring Christ to thee our heavenly king 4. Holy Jesus every day keep us in the narrow way and when earthly things are past bring our ransomed souls at last where they need no star to guide where no clouds thy glory hide 5. In the heavenly city bright none shall need created light Thou its light its joy its crown Thou its sun which goes not down There for ever may we sing alleluias to our king.

Saturday 26 December 2020

En Idhayam Yaarukku Theriyum என் இதயம் யாருக்கு தெரியும்


 En Idhayam Yaarukku Theriyum

என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் (2) 1. நெஞ்சின் நோவுகள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே (2) – என் 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ (2) – என் 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ (2) – என் 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே (2) – என்

Thursday 24 December 2020

Perinba Nathiye பேரின்ப நதியே


 Perinba Nathiye

பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட பின் மாரியாக பொழிந்திடுமே (2) 1. எலியாவின் தேவன் எங்கே என்றானே சலியாமல் ஓடி சால்வை பெற்றானே பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள் பலவந்தமாக்கும் காலம் இதுவே (2) - பேரின்ப 2. மங்கும் திரிகள் நெரிந்த நாணல் தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர் அனலுமில்லாத குளிருமில்லாத அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே (2) - பேரின்ப 3. சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா உலரும் எலும்பும் உயிரை அடையும் உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா (2) - பேரின்ப 4. பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர் பரிசுத்த தேவ அழைப்பை பாரீர் தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன் தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே (2) - பேரின்ப 5. ஊனர் குருடர் தீரா நோயாளர் ஊமை செவிடர் பேயால் பாடுவோர் அற்புத செயலால் வேண்டிடுவோமே ஆண்டவரிடமே வேண்டிடுவோமே (2) - பேரின்ப 6. சத்திய பரனை பக்தியுடனே நித்திய யுகமாய்ப் பாடிடுவேனே ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே ஏழை என் தாகம் தீர்த்திடுவேனே (2) - பேரின்ப

Monday 21 December 2020

Deva Aseervatham Perugiduthe தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே


 Deva Aseervatham Perugiduthe

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே துதிகள் நடுவே கர்த்தர் தங்க தூதர் சேனை தம் மகிமையோடிறங்க 1. எழும்பு சீயோனே ஒளி வந்ததே எரிந்திடும் விளக்கே திருச்சபையே காரிருளே கடந்திடுதே கர்த்தரின் பேரோளி வீசிடுதே --- தேவ 2. நலமுடன் நம்மை இதுவரையும் நிலைநிறுத்திடுதே அவர் கிருபை கண்மணிபோல் கடைசிவரை காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் --- தேவ 3. குறித்திடும் வேளை உயர்த்திடுவார் கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம் தாழ்வில் நம்மை நினைத்தவரை வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம் --- தேவ 4. தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம் இரட்சிப்பினால் அலங்கரித்தார் இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் --- தேவ 5. பொருந்தொனி கேட்க ஏறிடுவோம் பரலோகந் திறந்தே அவர் வருவார் உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில் என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் --- தேவ

Sunday 20 December 2020

Nam Devan Anbullavar நம் தேவன் அன்புள்ளவர்


 Nam Devan Anbullavar

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர் நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே (2) 1. நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே என்ற போதும் நம்மை நேசித்தாரே ஆ அந்த அன்பில் மகிழ்வோம் அன்பரின் பாதம் பணிவோம் (2) --- நம் 2. அத்திமரம் துளிர் விடாமல் போனாலும் திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும் ஆ அவர் காயம் நோக்குவோம் அதுவே என்றும் போதுமே (2) --- நம் 3. வான மீதில் இயேசு இறங்கி வருவார் தேவ தூதர் போல மகிமை அடைவோம் ஆ எங்கள் தேவா வாருமே அழைத்து வானில் செல்லுமே (2) --- நம் 4. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம் ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம் ஆ அந்த நாள் நெருங்குதே நினைத்தால் நெஞ்சம் பொங்குதே (2) --- நம்

Karthar En Menmaiyum கர்த்தர் என் மேன்மையும்


 Karthar En Menmaiyum

கர்த்தர் என் மேன்மையும் மகிமையுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன் கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன் - நான் (2) 1. என் முகத்தை தேடும் என்றீர் இன்னமும் நான் அன்பு கூர்ந்து நோக்குவேன் உன் பொன் முகமே சிலுவை நோக்கி பார்த்த கண்கள் சூழ்நிலைகள் மாறினாலும் வெட்கமடைந்து போவதில்லையே - கர்த்தர் 2. தகப்பனும் தாயும் என்னைக் கைவிடும் வேளை வரினும் அரவணைக்கும் உந்தன் கரமே கழுகு தன் குஞ்சுகளைப் பறந்து காப்பது போல காத்த உந்தன் செட்டை தஞ்சமே - கர்த்தர் 3. எந்தனுக்கு விரோதமான எரிகோவின் மதில்களைத் தகர்த்து சாம்பலாக்கிடுவீர் எதிரிகளின் சேனைகள் என்றும் என்னைத் தொடராமல் பின்தொடர்ந்து வந்திடுவீர் - கர்த்தர் 4. காலமோ கடைசியாகி பாவம் பாரில் படர்ந்து பெருகி உலக வேஷம் கடந்து செல்லுதே வருகைத் தாமதிக்கையில் புறாவைப் போல் சிறகிருந்தால் பறந்து வந்து உம்மைக் காணுவேன் – கர்த்தர்

Wednesday 16 December 2020

Intru Kanda Egypthiyanai இன்று கண்ட எகிப்தியனை


 Intru Kanda Egypthiyanai

இன்று கண்ட எகிப்தியனை என்றுமே இனி காண்பதில்லை (2) இஸ்ரவேலைக் காக்கும் தேவன் உறங்கவில்லை தூங்கவில்லை (2) 1. கசந்த மாரா மதுரமாகும் வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2) கண்ணீரோடு நீ விதைத்தால் கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) 2. தண்ணீரை நீ கடக்கும்போது கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2) வெள்ளம் போல சத்துரு வந்தால் ஆவியில் கொடியேற்றிடுவார் (2) 3. வாதை உந்தன் கூடாரத்தை அணுகாமல் காத்திடுவார் (2) பாதையிலே காக்கும்படிக்கு தூதர்களை அனுப்பிடுவார் (2) 4. சோர்ந்து போன உனக்கு அவர் சத்துவத்தை அளித்திடுவார் (2) கோரமான புயல் வந்தாலும் போதகத்தால் தேற்றிடுவார் (2)

Tuesday 15 December 2020

Yesuvaiye Thuthi Sei ஏசுவையே துதி செய்


 Yesuvaiye Thuthi Sei

ஏசுவையே துதி செய் நீ மனமே ஏசுவையே துதி செய் – கிறிஸ் தேசுவையே 1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முடிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே

Monday 14 December 2020

Meetparin Satham மீட்பரின் சத்தம்


 Meetparin Satham

மீட்பரின் சத்தம் என் நேசரின் சத்தம் மேகத்தின் மீது வருவேன் என்றார் எக்காளம் முழங்கிடும் வேளையில் தான் தூதர்கள் சூழ்ந்திட வந்திடுவார் 1. அவர் வரும் வேளையை அறிந்திடாமல் அழிந்திடும் பாதையில் செல்கின்றாரே ஆவியின் அச்சாரம் பெற்றிடாமல் அழுது புலம்பி திரிகின்றாரே --- மீட்பரின் 2. உலக கவலை மதியீனத்தால் உள்ளங்கள் உடைந்து வாழ்கின்றாரே உன்னதர் இயேசுவை நேசியாமல் உல்லாச வாழ்வினில் மடிகின்றாரே --- மீட்பரின் 3. உன்னை நேசிக்கும் அன்பருண்டு இயேசு என்னும் நேசருண்டு உள்ளத்தை அவரண்டை தந்திடு இன்று உண்மையாய் நித்திய ஜீவனுண்டு --- மீட்பரின்

Sunday 13 December 2020

Engum Pugal Yesu எங்கும் புகழ் இயேசு


 Engum Pugal Yesu

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே உங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் 1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும் அதை அறிந்து துதி செய்குவீர் தாயினும் மடங்கு சதம் அன்புடைய சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்--- எங்கும் 2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் கடன் பட்டவர் கண் திறக்கவே பல்வழி அலையும்பாதை தப்பினோரைப் பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்--- எங்கும் 3. தாழ்மை சற்குணமும் தயைகாருண்யமும் தழைப்பதல்லோ தகுந்த கல்வி பாழுந்துர்க்குணமும்பாவச் செய்கையாவும் பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ --- எங்கும் 4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச்செல்ல தூதர் நீங்களே தூயன் வீரரே கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக் கருணை நிறை வசனம் கற்றிடுவீர் --- எங்கும்

Wednesday 9 December 2020

Kaanaga Paathai கானகப் பாதை


 Kaanaga Paathai

1. கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும் மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் நடந்தே முன்செல்லுவாய் பயப்படாதே கலங்கிடாதே பாரில் ஏசு காத்திடுவார் பரம கானான் விரைந்து சேர்வாய் பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் 2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே ஏசுவின் பின்னே நடந்தே தூய பஸ்கா நீ புசித்தே தேவ பெலனால் முன்செல்லுவாய் 3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும் கூட்டமாய் சென்றே கடப்பாய் சத்ரு சேனை மூழ்கி மாளும் ஜெயம் சிறந்தே முன்செல்லுவாய் 4.கசந்த மாரா உன்னைக் கலக்கும் கஷ்டத்தால் உன் கண் சொரியும் பின் திரும்பிச் சோர்ந்திடாதே நன்மை அருள்வார் முன்செல்லுவாய் 5.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும் கோர யோர்தான் வந்தெதிர்க்கும் தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால் தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய் 6.புதுக்கனிகள் கானான் சிறப்பே பாலும் தேனும் ஓடிடுமே இந்தக் கானான் கால் மிதித்து சொந்தம் அடைய முன்செல்லுவாய்

Tuesday 8 December 2020

Unnathamaana Karthare உன்னதமான கர்த்தரே


 Unnathamaana Karthare

1. உன்னதமான கர்த்தரே இவ்வோய்வு நாளைத் தந்தீரே இதற்காய் உம்மைப் போற்றுவோம் சந்தோஷமாய் ஆராதிப்போம். 2. விஸ்தாரமான லோகத்தை படைத்த கர்த்தா எங்களை இந்நாள்வரைக்கும் தேவரீர் அன்பாய் விசாரித்து வந்தீர் 3. எல்லாரும் உமதாளுகை பேரன்பு ஞானம் வல்லமை மற்றெந்த மாட்சிமையையும் அறிந்து உணரச் செய்யும். 4. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே நீர் எங்கள் ஆத்துமாவிலே தரித்து எந்த நன்மைக்கும் நீர் எங்களை உயிர்ப்பியும். 5. தெய்வாவியே நல் அறிவும் மெய் நம்பிக்கையும் நேசமும் சபையிலே மென்மேலுமே வளர்ந்து வரச் செய்யுமே.

Saturday 5 December 2020

Enthan Ullathil Puthu Unarvu எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு


 Enthan Ullathil Puthu Unarvu

1.எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு எந்தன் வாழ்வினில் புதுமலர்ச்சி எந்தன் நடை உடை பாவனை சொல் செயலும் எந்தன் இயேசுவால் புதிதாயின புதுவாழ்வு புது ஜீவன் புதுபாடல் என்னை சந்தித்த இயேசு தந்தார் ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன் ஆண்டவர் சமூகத்தை அலங்கரிப்பேன் 2.கதரேனரின் கடற்கரையில் கல்லறையிடை வாசம் செய்த பொல்லா ஆவி நாதர் பாதம் பணிய நல்ல அற்புத மாற்றம் பெற்றான் --- புதுவாழ்வு 3.ஓடையில் உருண்டோடி வரும் சின்னக் கற்களும் வடிவம் பெறும் சின்னத் தாவீதுக்கும் கோலியாத்தை வீழ்த்த கவண்கல் ஆயுதமாகிடும் --- புதுவாழ்வு 4. காட்டத்தி மரம் ஏறி ஒளிந்த குள்ளன் சகேயுவும் மாற்றம் பெற்றான் உள்ளபடி யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான் வெள்ளம் போல் மகிழ்வு பெற்றான் --- புதுவாழ்வு 5. சிலுவையண்டை வந்திட்டேனே இயேசுவின் கரம் பற்றிட்டேனே எந்தன் இயேசுவுடன் கொண்ட உறவு என்னை புது வடிவமாய் திகழச் செய்யும்--- புதுவாழ்வு

Wednesday 2 December 2020

Paduven Paravasam Aguven பாடுவேன் பரவசமாகுவேன்


 Paduven Paravasam Aguven

பாடுவேன் பரவசமாகுவேன் பறந்தோடும் இன்னலே 1.அலையலையாய் துன்பம் சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில் அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை 2.என்று மாறும் எந்தன் துயரம் என்றே மனமும் ஏங்கையில் மாராவின் கசப்பை மதுரமுமாக்கி மகிழ்வித்த மகிபனையே 3.ஒன்றுமில்லாத வெறுமை நிலையில் உதவுவாரற்றுப் போகையில் கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து தாகம் தீர்த்த தயவை 4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி பட்டினி சஞ்சலம் நேர்கையில் வானமன்னாவால் ஞானமாய் போஷித்த காணாத மன்னா இயேசுவை

Tuesday 1 December 2020

Karthar Kirubai Entrumullathu கர்த்தர் கிருபை என்றுமுள்ளது


 Karthar Kirubai Entrumullathu

கர்த்தர் கிருபை என்றுமுள்ளது என்றென்றும் மாறாதது ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை ஆண்டு நடத்திடுதே (2) கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர் பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மையுள்ளவர் 1. கடந்த ஆண்டு முழுவதும் நம்மை கரத்தைப் பிடித்து நடத்தினாரே தகப்பன் பிள்ளையை சுமப்பது போல தோளில் சுமந்து நடத்தினாரே 2. வியாதி படுக்கை மரண நேரம் பெலனற்ற வேளையில் தாங்கினாரே விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார் சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே 3. சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம் வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி தைரியப்படுத்தி நடத்தினாரே 4.கண்ணீர் கவலை யாவையும் போக்க கர்த்தர் இயேசு வருகின்றாரே கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம் அவரோடு நாமும் பறந்து செல்வோம்

Yesuve Enthan Nesare இயேசுவே எந்தன் நேசரே


 Yesuve Enthan Nesare

இயேசுவே எந்தன் நேசரே என்றும் உம்மை நான் போற்றிப் பாடுவேன் 1. பாவத்தை போக்கிடும் பரமன் நீரல்லவா பாதையை காட்டிடும் மேய்ப்பன் நீரல்லவா அரணும் என் கோட்டையும் இறைவா நீரல்லவா (2) எந்தன் அடைக்கலம் தஞ்சம் கோட்டை என்றும் நீரே அல்லவா (2) 2. வாழ்க்கையாம் படகிலே தலைவன் நீரல்லவா வாழ்விலும் தாழ்விலும் துணைவர் நீரல்லவா ஒரு நாள் வான் மீதிலே வருவீர் என் மன்னவா (2) எந்தன் ஜீவ காலம் வரை உம்மையே எண்ணி வாழ்வேன் நாயகா (2)