Varuthapattu Paaram Sumapavare
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே
வருவீர் இயேசுவண்டை இளைப்பாற
1. தாகமுள்ளவரே வாரும் என்றார்
தாகத்தோடு வரும் சமாரியாளைக் கண்டார்
தண்ணீர் கேட்டார் அவர் தாகம் தீர்த்தார்
பாவ மன்னிப்பை கொடுத்து மகிழச் செய்தார்
2. பெரும்பாடுள்ள ஓர் ஸ்திரீ இருந்தாள்
கடும் நோய் நீங்க பலரிடம் சென்றாள்
நம்பிக்கை இழந்தாள் நாதன் இயேசுவைக் கண்டாள்
நடுங்கி வஸ்திரம் தொட்டு சுகமடைந்தாள்
3. நாலு நாளாயிற்றே நாறுமென்றாள்
நம்பிக்கை விடாதே அவன் பிழைப்பான் என்றார்
கவலைப்பட்டார் இயேசு கண்ணீர் விட்டார்
மரித்தவன் உயிர்த்தே வரச் சொன்னார்
4. நாடு நகரமெல்லாம் சுற்றி அலைந்தார்
நானே வழி வேறில்லை என பகர்ந்தார்
களைப்படைந்தார் அத்தி மரத்தைக் கண்டார்
கனியற்றிருப்பதை கண்டு சபித்தார்
Kalai Velaiyile Nam Nathanai
காலை வேளையிலே நம் நாதனை போற்றிடுவோம் (2)
துதி மாலையுடன் புகழ் பாடியே (2)
அவர் பாதம் வீழ்ந்து பணிவோம் மகிழ்வோம்
1. காலை தோறும் புது கிருபையினால்
நிறைத்திடும் தேவனை வாழ்த்திடுவோம்
குறைகள் யாவும் குருசினில் ஏற்ற (2)
திருமைந்தன் இயேசுவை வணங்கிடுவோம் (2)
சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே
2. பாவத்தை உணர்த்தும் தினம் வழி நடத்தும்
ஆவியாம் தேவனை துதித்திடுவோம்
மூன்றில் ஒன்றாய் அருள் ஒளி சுடராய் (2)
திகழ்ந்திடும் திரியேகரை நமஸ்கரிப்போம் (2)
சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே
Athikalai Neram Aandavar Samoogam
அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
அமைதலாய் காத்திருப்பேன்
என் இயலாமை மௌனம் அறிவிக்க
அவரைப் போலாவேன்
1. வடதிசை வாழும் என் குடும்பம்
என் நினைவில் என்றும் கலந்துவிடும்
தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
வல்லமை தேவன் வெளிப்படுவார் (2)
2. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் (2)
3. தனக்கென வாழ நினைவிலும் மறந்து
மற்றவர் மீது நாட்டம் கொண்டால்
சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்
சமுகத்தை சீக்கிரம் வசப்படுத்தும் (2)
Kalai Neram Inba Jeba Thiyaname
காலை நேரம் இன்ப ஜெப தியானமே
கருணை பொற்பாதம் காத்திருப்பேன்
அதிகாலையில் அறிவை உணர்த்தி
அன்போடு இயேசு தினம் பேசுவார்
1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே
2. பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல்
பொய்யாய் சொன்னாலும் களிகூருவாய்
இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார்
இந்த மெய் வாக்கு நிறைவேறுதே
3. சிலுவை சுமந்தே அனுதினமே
சோராமல் என் பின் வா என்றாரே
அவரோடு பாடு சகித்தாளுவேனே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே
4. பறந்து புறா போல் சிறகடித்தே
பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன்
பரலோக வாசல் பரம சீயோனே
பூரித்து என்னை வரவேற்குமே
O Enthan Ullam
1. ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்என் வாழ்க்கையில்எல்லாம் நிறைந்திருப்பதால்உம்மைத் துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்இன்றும் என்றும் உம்மைபோற்றி பாடித் துதிப்பேன்2.கண்மணி போல காத்துக் கொள்வதால்உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்3. பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்4. ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்
Kalvari Snegam
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் (2)
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்
2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் (2)
என்னை காணுவோர் உம்மை காணட்டும்
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும் (2)
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்
Siluvai Oar Punitha Sinnam
சிலுவை ஓர் புனிதச் சின்னம்
ஜெகத்து ரட்சகன்
இயேசு மரித்துயிர்த்தெழுந்தார் – சிலுவை
1.கல்வாரியில் முளைத்து
ககனம் வரை தழைத்து
எல்லாத்திக்கும் கிளைத்து
இகபரத்தை இணைத்து
இல்லாரைச் செல்வராக்கும்
பொல்லாரை நல்லோராக்கும்
நல்லாயன் இயேசு சுவாமி
தோளில் சுமந்து சென்ற --- சிலுவை
2.அலகை சிரமுடைக்க
அகந்தை நினைவழிக்க
பலமயல்களகற்றப் பவக்
கடலைக் கடக்க
உலகில் உயிர்களோங்க
உன்னத வாழ்வு பெற
பலகுல மனிதரும்
பகைத்துப்பின் போற்றுகின்ற --- சிலுவை
3.யூதர்க்கிடறலான
இயேசு நாதர் சிலுவை
கிரேக்க ஞானியருக்கு
பைத்தியமச் சிலுவை
அன்பர்க் கடைக்கலமும்
தேவ பெலனும் சிலுவை
தன்னை உணர்ந்தவர்
தனிப்பெருமை சிலுவை - சிலுவை