Siluvai Oar Punitha Sinnam சிலுவை ஓர் புனிதச் சின்னம்
Siluvai Oar Punitha Sinnam
சிலுவை ஓர் புனிதச் சின்னம்
ஜெகத்து ரட்சகன்
இயேசு மரித்துயிர்த்தெழுந்தார் – சிலுவை
1.கல்வாரியில் முளைத்து
ககனம் வரை தழைத்து
எல்லாத்திக்கும் கிளைத்து
இகபரத்தை இணைத்து
இல்லாரைச் செல்வராக்கும்
பொல்லாரை நல்லோராக்கும்
நல்லாயன் இயேசு சுவாமி
தோளில் சுமந்து சென்ற --- சிலுவை
2.அலகை சிரமுடைக்க
அகந்தை நினைவழிக்க
பலமயல்களகற்றப் பவக்
கடலைக் கடக்க
உலகில் உயிர்களோங்க
உன்னத வாழ்வு பெற
பலகுல மனிதரும்
பகைத்துப்பின் போற்றுகின்ற --- சிலுவை
3.யூதர்க்கிடறலான
இயேசு நாதர் சிலுவை
கிரேக்க ஞானியருக்கு
பைத்தியமச் சிலுவை
அன்பர்க் கடைக்கலமும்
தேவ பெலனும் சிலுவை
தன்னை உணர்ந்தவர்
தனிப்பெருமை சிலுவை - சிலுவை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.