Tuesday 31 March 2020

Kolgatha Malai Meethilae கொல்கதா மலை மீதிலே

Kolgatha Malai Meethilae கொல்கதா மலை மீதிலே சிலுவை சுமந்தேகினார் உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் இரத்தம் சிந்தினார் 1. அந்தோ எருசலேமே ஆண்டவர் பவனி வந்தார் அந்த நாளை நீ மறந்தாய் அன்பரோ கண்ணீர் சிந்தினார் 2. மேனியில் கசையடிகள் எத்தனை வசை மொழிகள் அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் 3. உத்தம தேவ மைந்தனே சுத்தமாய் ரத்தம் சிந்தியே நித்திய வாழ்வு தனையே நீசனாம் எனக்களித்தார் 4. செந்நீரோ கண்ணீராய் மாறி தரணியில் பாய்ந்ததங்கே உன்நிலை நினைத்தவரே தன்நிலை மறந்து சகித்தார் 5. வஞ்சக உலகினிலே வணங்கா கழுத்துடனே வழிபோகும் ஆத்துமாவே வந்திடு நீ இயேசுவண்டை

Monday 30 March 2020

Meetpar Yesu Kurusil மீட்பர் இயேசு குருசில்

Meetpar Yesu Kurusil மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே மூன்றாணி மீதில் காயம் அடைந்தே (2) 1. லோகப் பாவம் தீர்க்க பலியான தேவ ஆட்டுக் குட்டியானவர் சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில் 2. இயேசுவே கல்வாரி சிலுவையில் ஏறி ஜீவன் தந்திராவிடில் ஏழையான் என் பாவ பாரங்களை எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில் 3. தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ என்று இயேசு கதறினாரே பாவத்தால் பிதாவின் முகத்தையும் பார்க்கவும் முடியவில்லையோ – அவர் 4. அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே ஆச்சரிய தேவ அன்பைப் பாட – ஆயிரம் நாவுகள் போதுமோ – பதினாயிரம் 5. பாவ பாரம் லோகக் கவலைகள் தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும் தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத் தேற்றி ஆற்றித் தாங்குவார் அவர் – உன்னை 6. கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால் கல் மனமும் உருகிடுமே மாய லோக ஆசை வஞ்சிக்குமே மாறிடாத இயேசு போதுமே – என்றும்

Sunday 29 March 2020

Anbe Kalvari Anbe அன்பே கல்வாரி அன்பே

Anbe Kalvari Anbe அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே - எல்லா

Friday 27 March 2020

Yesuve Kalvariyil இயேசுவே கல்வாரியில்

Yesuve Kalvariyil 1. இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக் காட்டும் மீட்பரே, மீட்பரே எந்தன் மேன்மை நீரே விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே 2. பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனே ஞானஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே 3. இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாக பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக 4. இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே பின்பு மோட்சலோகத்தில் என்றும் வாழுவேனே

Wednesday 25 March 2020

En Nenjam Nonthu என் நெஞ்சம் நொந்து

En Nenjam Nonthu 1. என் நெஞ்சம் நொந்து காயத்தால் அவஸ்தைப்படவே குத்துண்ட மீட்பர் கரத்தால் அக்காயம் ஆறுமே 2. தீராத துக்கம் மிஞ்சியே நான் கண்ணீர் விடினும் நோவுற்ற இயேசு நெஞ்சமே மெய் ஆறுதல் தரும் 3. என் மனஸ்தாபத் தபசால் நீங்காத கறையும் வடிந்த இயேசு ரத்தத்தால் நிவிர்த்தியாகிடும் 4. என் மீட்பர் கரத்தால் சுகம் செந்நீரால் தூய்மையாம் என் இன்பதுன்பம் அந்நெஞ்சம் அன்பாய் உணருமாம் 5. அக்கரம் நீட்டும், இயேசுவே அவ்வூற்றைத் திறவும் குத்துண்ட உந்தன் பக்கமே என்றன் அடைக்கலம்

Ummai Thuthikkirom உம்மைத் துதிக்கிறோம்

Ummai Thuthikkirom 1. உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2. கிறிஸ்துவே இறங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் 3. நித்ய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமேன்

Tuesday 24 March 2020

Ezhai Manu Uruvai Edutha ஏழை மனு உருவை எடுத்த

Ezhai Manu Uruvai Edutha ஏழை மனு உருவை எடுத்த இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார் ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே (2) 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார் சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய் கனிவுடன் உன்னை அழைக்கிறாரே (2) – ஏழை மனு 2. அவர் தலையையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை அருமை ரட்சகர் தொங்கினார் தனியே அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே (2) – ஏழை மனு 3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே (2) – ஏழை மனு 4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய சிலுவையில் ஜெயித்தார் யாவையும் (2) – ஏழை மனு 5. மாயை உலகம் அதையும் நம்பாதே மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே நித்திய தேவனை நேசித்தால் இப்போதே நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ நம்பிக்கையோடே வந்திடுவாய் (2) – ஏழை மனு

Sunday 22 March 2020

Aathmame Un Aandavarin ஆத்மமே உன் ஆண்டவரின்

Aathmame Un Aandavarin 1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து அல்லேலுயா என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி அல்லேலுயா அவர் உண்மை மா மகிமையாம் துதி 3. தந்தை போல் மா தயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே அல்லேலுயா இன்னும் அவர் அருள் விரிவானதே 4. என்றும் நின்றவர் சமுகம் போற்றும் தூதர் கூட்டமே நாற்றிசையும் நின்றெழுந்து பணிவர் நீர் பக்தரே அல்லேலுயா அனைவோரும் அன்பின் தெய்வம் போற்றுமே

Parir Gethsemane பாரீர் கெத்சமனே

Parir Gethsemane பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே பாவியெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே 1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர் 2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர் 3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர் 4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால் முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர் 5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர் துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் – பாரீர் 6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் – பாரீர்

Paavikku Pugalidam Yesu Ratchagar பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர்

Paavikku Pugalidam Yesu Ratchagar பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தாரே 1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக் காசுக்காகவே கர்த்தர் இயேசுவை கொலை செய்யவே கொண்டு போனாரே கொல்கதா மலைக்கு இயேசுவை --- பாவி 2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல் குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார் பரிகாசமும் பசிதாகமும் படுங்காயமும் அடைந்தாரே --- பாவி 3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட கிரீடம் முட்களில் பின்னி சூடிட இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார் இதைக் கானும் உள்ளம் தாங்குமோ --- பாவி 4. உலகத்தின் இரட்சகர் இயேசுவே உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார் தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார் தளராமல் நம்பி ஓடி வா --- பாவி 5. பாவ சாபங்கள் தீரா வியாதிகள் பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில் கண்டு நீ மனம் கலங்குவதேன் கர்த்தர் இயேசுவண்டை ஓடி வா --- பாவி 6. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே வாருங்கள் என்னண்டையில் என்கிறார் இளைப்பாறுதல் தரும் இயேசுவை இன்று தேடி நம்பி வா --- பாவி

Saturday 21 March 2020

Kolkatha Mettinile கொல்கதா மேட்டினிலே

Kolkatha Mettinile 1. கொல்கதா மேட்டினிலே கொடூர பாவி எந்தனுக்காய் குற்றமில்லாத தேவகுமாரன் குருதி வடிந்தே தொங்கினார் 2. பாவ சாபங்கள் சுமந்தாரே பாவியை மீட்க பாடுபட்டார் பாவமில்லாத தேவகுமாரன் பாதகன் எனக்காய் தொங்கினார் 3. மடிந்திடும் மன்னுயிர்க்காய் மகிமை யாவும் இழந்தோராய் மாசில்லாத தேவ குமாரன் மூன்றாணி மீதினில் தொங்கினார் 4. இரத்தத்தின் பெரு வெள்ளம் ஓட இரட்சிப்பின் நதி என்னில் பாய ஆதரவில்லா தேவ குமாரன் அகோரக் காட்சியாய் தொங்கினார் 5. கல்வாரி காட்சி இதோ கண்டிடுவாயே கண் கலங்க கடின மனமும் உருகிடுமே கர்த்தரின் மாறாத அன்பினிலே 6. உள்ளமே நீ திறவாயோ உருகும் சத்தம் நீ கேளாயோ உன் கரம் பற்றி உன்னை நடத்த உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

Wednesday 18 March 2020

Kalvariyin Karunaiyithe கல்வாரியின் கருணையிதே

Kalvariyin Karunaiyithe 1. கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே 2. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே 3. சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய் தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே 4. எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர் தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன் 5. மனுஷனை நீர் நினைக்கவும் அவனை விசாரிக்கவும் மண்ணில் அவன் எம்மாத்திரம் மன்னவா உம் தயவே

Kalvari Anbai Ennidum கல்வாரி அன்பை எண்ணிடும்

Kalvari Anbai Ennidum கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே 1. கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கிறதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே (2) – கல்வாரி 2. சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போதும் அவர்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே (2) – கல்வாரி 3. எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன் தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும் (2) – கல்வாரி

Siluvaiyil Araiyunda Yesuve சிலுவையில் அறையுண்ட‌ இயேசுவே

Siluvaiyil Araiyunda Yesuve 1. சிலுவையில் அறையுண்ட‌ இயேசுவே உம்மையே நோக்கி பார்க்கிறேன் என் பாவ சுமைகளோடு உம் பாத நிழலில் நிற்கிறேன் இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான்வீட்டில் என்னையும் சேருமே 2. தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்தார்கள் என்றீர் மாறாத இரக்கத்தால் என்னை மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே --- இயேசுவே 3. அம்மா இதோ உன் மகன் என்றீர் இதோ உன் தாய் என்றே நேசத்தால் அன்னையின் அன்பினில் நாளுமே என்னையும் வாழ்ந்திட செய்யுமே ---இயேசுவே 4. தாகமாய் உள்ளதே இறைவா ஏன் என்னை கை விட்டீர் என்றீரே கைவிடா நேசத்தால் எனக்கும் தாகம் மாற்றும் ஜீவநீரை தாருமே --- இயேசுவே 5. தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்னையும் உமது கரத்தில் முற்றிலும் கையளிக்கின்றேன் --- இயேசுவே

Monday 16 March 2020

Kurusin Mel Kurusin Mel குருசின் மேல் குருசின் மேல்

Kurusin Mel Kurusin Mel 1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர் பிராணநாதன் பிராணாநாதன் என் பேர்க்காய்ச் சாகின்றார்

2. பாவத்தின் காட்சியை ஆத்மாவே பார்த்திடாய் தேவ குமாரன் மா சாபத்திலாயினார்

3. இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன் இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

4. பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் குருசினின் காட்சியைத் தரிசித்துத் தேறுவேன்

6. சத்ருக்கள் தூஷணம் பேசியே நிந்தித்தால் நித்தமும் குருசினின் நேசத்தை சிந்திப்பேன்
7. பாவத்தின் சோதனை கோரமாய் வந்திடில் ஆவலாய் குருசினின் காட்சியைச் சிந்திப்பேன்

8. சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில் சிலுவையின் நேசத்தைச் சிந்தித்து நோக்குவேன்

9. சத்ருக்கள் கூட்டமாய் சண்டைக்கு சூழ்கையில் சிலுவையில் காண்கின்ற நேசத்தை சிந்தித்தேன்

10. இம்மகா நேசத்தை ஆத்மமே சிந்திப்பாய் இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

Sunday 15 March 2020

Mutrilum Alaganavar முற்றிலும் அழகானவர்

Mutrilum Alaganavar 1. முற்றிலும் அழகானவர் எல்லாரிலும் மா சிறந்தோர் தேவாதி தேவனானவர் நேசக் கல்வாரி நாயகா கல்வாரி நாயகா என் உள்ளம் ஆட்கொண்டீர் என்னை மீட்க மரித்தீர் கல்வாரி நாயகா 2. காயப்பட்டு நொறுங்குண்டு பாவ துக்கம் சுமந்தோராய் நீசச் சிலுவையில் மாண்டார் துக்கக் கல்வாரி நாயகா 3. ஜீவன் சமாதானம் ஈய சிறையுற்றோரின் மீட்புக்காய் இரத்தமாம் ஊற்றைத் திறந்தார் இரக்கக் கல்வாரி நாயகா 4. நமக்காய் பெற்ற வரங்கள் சுத்தாங்கம் யாவும் நல்கிட அன்பதாம் வெள்ளம் ஊற்றினார் தயாளக் கல்வாரி நாயகா 5. உம்மை மகிமை மாயமாய் கண்டு களிப்பேன் என்பதே இவ்வுலகில் என் ஆறுதல் ஒப்பற்ற கல்வாரி நாயகா 6. கண்ணாடிக் கடல் ஓரமாய் சேர்ந்து நின் அன்பில் மூழ்கியே உம்மைப் போல் என்றும் இருப்பேன் மகிமைக் கல்வாரி நாயகா

Saturday 14 March 2020

Unnaiyum Ennaiyum Ratchikkave உன்னையும் என்னையும் இரட்சிக்கவே

1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே இயேசு தம் ஜீவனை ஈந்தனரே குருசில் கண்டேன் (3) என் இயேசுவை 2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே குருசில் கண்டேன் (3) என் இயேசுவை 3. மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட நானே வழி சத்தியம் ஜீவன் என்றார் சோர்ந்திடாதே நம்பியே வா நிச்சயம் நேசர் ஏற்றுக்கொள்வார் 4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார் அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய் அழைக்கிறார் (3) அன்புடனே 5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய் அல்லேலூயா (3) ஆமென்

Friday 13 March 2020

Kurusinil Thongiye குருசினில் தொங்கியே

Kurusinil Thongiye குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கதா மலைதனிலே – நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி கொள்ளாய் கண் கொண்டு 1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே சிலுவையில் சேர்த்ததையோ – தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார் சேனைத்திரள் சூழ – குருசினில் 2. பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன் போல் தொங்க – யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப் படுத்திய கொடுமைதனை – குருசினில் 3. சந்திர சூரிய சகல வான் சேனைகள் சகியாமல் நாணுதையோ – தேவ சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால் துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில் 4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த இறைவன் விலாவதிலே – அவர் தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும் திறந்தூற்றோடுது பார் – குருசினில் 5. எருசலேம் மாதே மறுகி நீயழுது ஏங்கிப் புலம்பலையோ – நின் எருசலையதிபன் இள மணவாளன் எடுத்த கோல மிதோ – குருசினில்

Thursday 12 March 2020

Aanigal Paintha Karangalai ஆணிகள் பாய்ந்த கரங்களை

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே (2) ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே (2) சரணங்கள் 1. பார் திருமேனி வாரடியேற்றவர் பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய் பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம் நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே உணர்ந்திதையுடனே உன்னதரண்டை சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள் 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப் பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே மறுரூப நாளின் அச்சாரமதுவே மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள் 5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர் இரட்சகர் வேறு இகமதிலுண்டோ அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே அவரே உன் நாயகரே — ஆணிகள்

Tuesday 10 March 2020

Valvin Oliyanar வாழ்வின் ஒளியானார்


Valvin Oliyanar
வாழ்வின் ஒளியானார் இயேசு வாழ்வின் ஒளியானார் என்னை மீட்க இயேசு ராஜன் வாழ்வின் ஒளியானார் எனது (2) --- வாழ்வின் 1. அக்கிரமங்கள் பாவங்களால் நிரம்ப பெற்ற பாவியென்னை அன்பு கரங்கள் நீட்டியே தம் மார்போடணைத்தனரே (2) --- வாழ்வின் 2. வழி தப்பி தடுமாறும் போது வழிகாட்டியாய் செயல்படுவார் வழியில் இருளாய் மாறும் போது வாழ்வின் ஒளியாவார் (2) --- வாழ்வின் 3. துன்பங்கள் தொல்லை வரினும் இன்னல்கள் பல வந்திடினும் இன்னல் தீர்க்க வல்ல இயேசு இன்னல் அகற்றிடுவார் (2) --- வாழ்வின்

Sunday 8 March 2020

Yesuvuke Opuvithen யேசுவுக்கே ஒப்புவித்தேன்

Yesuvuke Opuvithen 1. யேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு தங்கி நம்பி நேசிப்பேன் மெய்யாய் ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் நேச ரட்சகா நான் யாவும் ஒப்புவிக்கிறேன் 2. யேசுவுக்கே ஒப்புவித்தேன் அவர் பாதம் பணிந்தேன் லோக இன்பம் யாவும் விட்டேன் இப்போதேற்றுக் கொள்ளுமேன் 3. யேசுவுக்கே ஒப்புவித்தேன் ஏற்றுகொண்டருளுமேன் நான் உம் சொந்தம் நீரென் சொந்தம் சாட்சியாம் தேவாவியாம் 4. யேசுவுக்கே ஒப்புவித்தேன் நாதா அடியேனையும் அன்பு பலத்தால் நிரப்பி என்னை ஆசீர்வதியும்