Meetpar Yesu Kurusil
மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே (2)
1. லோகப் பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக் குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில்
2. இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில்
ஏழையான் என் பாவ பாரங்களை
எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில்
3. தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையோ – அவர்
4. அன்னை தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப் பாட – ஆயிரம்
நாவுகள் போதுமோ – பதினாயிரம்
5. பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத்
தேற்றி ஆற்றித் தாங்குவார் அவர் – உன்னை
6. கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல் மனமும் உருகிடுமே
மாய லோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே – என்றும்
Ezhai Manu Uruvai Edutha
ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே (2)
1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே (2) – ஏழை மனு
2. அவர் தலையையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை ரட்சகர் தொங்கினார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே (2) – ஏழை மனு
3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே (2) – ஏழை மனு
4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் (2) – ஏழை மனு
5. மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய் (2) – ஏழை மனு
Aathmame Un Aandavarin
1. ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து
அல்லேலுயா என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று
2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி
அல்லேலுயா அவர் உண்மை
மா மகிமையாம் துதி
3. தந்தை போல் மா தயை உள்ளோர்
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலுயா இன்னும் அவர்
அருள் விரிவானதே
4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவர் நீர் பக்தரே
அல்லேலுயா அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே
Paavikku Pugalidam Yesu Ratchagar
பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தாரே
1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தர் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கதா மலைக்கு இயேசுவை --- பாவி
2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுங்காயமும் அடைந்தாரே --- பாவி
3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக் கானும் உள்ளம் தாங்குமோ --- பாவி
4. உலகத்தின் இரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா --- பாவி
5. பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தர் இயேசுவண்டை ஓடி வா --- பாவி
6. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டையில் என்கிறார்
இளைப்பாறுதல் தரும் இயேசுவை
இன்று தேடி நம்பி வா --- பாவி
Kalvariyin Karunaiyithe
1. கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தன் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரேவிலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்விலாவினின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய்உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே2. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோஇவ்வன்புக் கிணையாகுமோஅன்னையிலும் அன்பு வைத்தேதம் ஜீவனை ஈந்தாரே3. சிந்தையிலே பாரங்களும்நிந்தைகள் ஏற்றவராய்தொங்குகின்றார் பாதகன் போல்மங்கா வாழ்வளிக்கவே4. எந்தனுக்காய் கல்வாரியில்இந்தப் பாடுகள் பட்டீர்தந்தையே உம் அன்பினையேசிந்தித்தே சேவை செய்வேன்5. மனுஷனை நீர் நினைக்கவும்அவனை விசாரிக்கவும்மண்ணில் அவன் எம்மாத்திரம்மன்னவா உம் தயவே
Siluvaiyil Araiyunda Yesuve
1. சிலுவையில் அறையுண்ட இயேசுவேஉம்மையே நோக்கி பார்க்கிறேன் என் பாவ சுமைகளோடு உம் பாத நிழலில் நிற்கிறேன் இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான்வீட்டில் என்னையும் சேருமே 2. தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்தார்கள் என்றீர் மாறாத இரக்கத்தால் என்னை மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே --- இயேசுவே 3. அம்மா இதோ உன் மகன் என்றீர்இதோ உன் தாய் என்றே நேசத்தால் அன்னையின் அன்பினில் நாளுமே என்னையும் வாழ்ந்திட செய்யுமே ---இயேசுவே 4. தாகமாய் உள்ளதே இறைவா ஏன் என்னை கை விட்டீர் என்றீரே கைவிடா நேசத்தால் எனக்கும் தாகம் மாற்றும் ஜீவநீரை தாருமே --- இயேசுவே 5. தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்னையும் உமது கரத்தில் முற்றிலும் கையளிக்கின்றேன் --- இயேசுவே
Valvin Oliyanar வாழ்வின் ஒளியானார் இயேசு வாழ்வின் ஒளியானார்என்னை மீட்க இயேசு ராஜன் வாழ்வின் ஒளியானார் எனது (2) --- வாழ்வின்1. அக்கிரமங்கள் பாவங்களால் நிரம்ப பெற்ற பாவியென்னை அன்பு கரங்கள் நீட்டியே தம் மார்போடணைத்தனரே (2) --- வாழ்வின் 2. வழி தப்பி தடுமாறும் போது வழிகாட்டியாய் செயல்படுவார் வழியில் இருளாய் மாறும் போது வாழ்வின் ஒளியாவார் (2) --- வாழ்வின் 3. துன்பங்கள் தொல்லை வரினும் இன்னல்கள் பல வந்திடினும் இன்னல் தீர்க்க வல்ல இயேசு இன்னல் அகற்றிடுவார் (2) --- வாழ்வின்
Yesuvuke Opuvithen
1. யேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு தங்கி நம்பி நேசிப்பேன் மெய்யாய் ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் நேச ரட்சகா நான் யாவும் ஒப்புவிக்கிறேன் 2. யேசுவுக்கே ஒப்புவித்தேன்அவர் பாதம் பணிந்தேன் லோக இன்பம் யாவும் விட்டேன் இப்போதேற்றுக் கொள்ளுமேன் 3. யேசுவுக்கே ஒப்புவித்தேன்ஏற்றுகொண்டருளுமேன் நான் உம் சொந்தம் நீரென் சொந்தம் சாட்சியாம் தேவாவியாம் 4. யேசுவுக்கே ஒப்புவித்தேன்நாதா அடியேனையும் அன்பு பலத்தால் நிரப்பி என்னை ஆசீர்வதியும்