Saturday 31 July 2021

Adimai Naan Aandavare அடிமை நான் ஆண்டவரே


 

அடிமை நான் ஆண்டவரேஎன்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

2. உலக இன்பமெல்லாம்நான்
உதறித் தள்ளி விட்டேன்

3. பெருமை செல்வமெல்லாம்இனி
வெறுமை என்றுணர்ந்தேன்

4. வாழ்வது நானல்லஎன்னில்
இயேசுவே வாழ்கின்றீர்

5. என் பாவம் மன்னித்தருளும்உம்
இரத்தத்தால் கழுவிவிடும்

6. முள்முடி எனக்காகஐயா
கசையடி எனக்காக

7. என் பாவம் சுமந்து கொண்டீர்என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

Friday 30 July 2021

Vaan Pugal Valla வான் புகழ் வல்ல


 

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே

காத்திடும் கரமதின் வல்லமையை என்றும்

கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

 

1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்

யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்

யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்

நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான்

 

2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து

இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்

அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்

கர்த்தன் தம் சேனையால் காத்திடுவாரே — வான்

 

3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்

சுற்றி உலாவின நித்திய தேவன்

மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்

முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே — வான்

 

4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க

சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்

சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள

சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே — வான்

 

5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை

தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய

வழுவ விடாமலே காத்திடும் தேவன்

மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே — வான்

 

6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக

மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க

மணவாளன் வரும்வேளை அறியலாகாதே

மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் — வான்

Thursday 29 July 2021

Yesuve Unthan Masilla இயேசுவே உந்தன் மாசில்லா


 

1. இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சிந்தினீரே
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ

மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்

2. என் மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக்கினையில் நின்று மீட்ட
சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்

3. எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல்
தாங்கக்கூடாத மா பாரமே
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
மன்னித்தும் மறந்தும் தள்ளினீர்

4. எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
மனபாரத்தால் சோர்ந்திடும்போது
ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர்

5. எனக்காக நீர் யாவும் முடித்தீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்து வருவேன்

Wednesday 28 July 2021

Nantriyaal Ponguthe Emathullam நன்றியால் பொங்குதே எமதுள்ளம்


 

நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

நாதன் செய்பல நன்மைகட்காய்

நாள்தோறும் நலமுடன் காத்தனரே

நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

நன்றியால் ஸ்தோத்தரிப்போம்

 

1. கடந்த வாழ்நாளில்  கருத்துடனே

கண்மணிபோல் நம்மைக் காத்தனரே

கண்ணீர் கவலையினை மாற்றினாரே

கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால்

 

2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து

ஜீவிய பாதை நடத்தினாரே

ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்

ஜீவனின் அதிபதியை அல்லேலூயா

ஜீவனின் அதிபதியை – நன்றியால்

 

3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே

அதிசயங்கள் பல புரிந்தனரே

ஆயிரம் நாவுகள் தான் போதுமா

ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா

ஆண்டவரைத் துதிக்க – நன்றியால்

 

4. பாவ சேற்றில் அமிழ்ந்த எம்மை

பாச கரம் கொண்டு தூக்கினாரே

கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர்

கருத்துடன் காத்தனரே அல்லேலூயா

கருத்துடன் காத்தனரே – நன்றியால்

 

5. பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி

பொற்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம்

ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே

நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா

நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்

 

Tuesday 27 July 2021

Asaivaadum Aaviyae அசைவாடும் ஆவியே


 

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

1. பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே

2. தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால்

3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே

4. அலங்கரியும் வரங்களினால்
எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும்
நிறைவாக இப்பொழுதே

Monday 26 July 2021

Arul Eralamai Peiyum அருள் ஏராளமாய் பெய்யும்


 

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

உறுதி வாக்கிதுவே

ஆறுதல் தேறுதல் செய்யும்

சபையை உயிர்ப்பிக்குமே

 

அருள் ஏராளம்

அருள் அவசியமே

அற்பமாய் சொற்பமாயல்ல

திரளாய்ப் பெய்யட்டுமே

 

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

மேகமந்தார முண்டாம்

காடான நிலத்திலேயும்

செழிப்பும் பூரிப்புமாம்அருள்

 

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

இயேசு  வந்தருளுமேன்

இங்குள்ள கூட்டத்திலேயும்

கிரியை செய்தருளுமேன்அருள்

 

4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

பொழியும் இஷணமே

அருளின் மாரியைத் தாரும்

ஜீவ தயாபரரேஅருள்

Sunday 25 July 2021

Ennuyire Ennuyire என்னுயிரே என்னுயிரே


 

என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான்

 

கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்

கரையாத அவரன்பு குறையாது

கண்ணாக எந்நாளும் காத்திடுவார்

 

துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

துணையாளன் இருக்கின்றார் திகையாதே

தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார்

 

உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்

உலகாளும் மன்னவன் உனக்குண்டு

என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார்

Saturday 24 July 2021

Karththaraiye Nambidum Devajaname கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே


 

கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே

கலங்காதே ஒரு போதும் வெட்கமடைவதில்லை

 

1. செங்கடல் கோரமாய் முன்னே நிற்கும்

சேனைகள் பின்னால் தொடர்ந்து வரும்

ஆனாலும் முன்னேறிப் போ என்கிறாரே

அவரே ஓர் வழி திறந்திடுவாரே   - கர்த்தரையே

 

2. கானானின் குடிகள் கொடியவரே

கானகபாதை கடினமாமே

கடந்து போய் நாம் அதை சுதந்தரிப்போமே

கர்த்தரே நமக்காய் யுத்தம் செய்வாரே  - கர்த்தரையே

 

3. பாகாலின் சீடர்கள் சவால் விட்டு

பதிலளியா தேவனை வேண்டுகிறார்

எலியாவின் தேவன் இறங்கி வந்தாரே

எரி நெருப்பால் இன்று பதிலளிப்பாரே  - கர்த்தரையே

 

4. உனக்கெதிராக ஆக்கிடுமாயுதம்

ஒருக்காலும் வாய்க்காமல் மறைந்திடுமே

உன் மேல் ஓர் யுத்தம் எழும்பினாலும்

உன்னை இரட்சிக்கும் தேவன் உண்டு   - கர்த்தரையே

 

5. யாக்கோபின் கூட்டமே பயப்படாதே

ஈசாக்கின் தேவன் உன் துணையே

அன்னை தன் சேயை மறந்தாலுமே

ஆண்டவர் இயேசு அரவணைப்பாரே    - கர்த்தரையே

 

6. சீயோனே உந்தன்  பாடுகளெல்லாம்

சில காலம் என்று நினைத்தே பாடு

சீக்கிரம் வருவார் சேர்த்திட உன்னை

பாக்கிய மடைவாய் பரலோக வாழ்வில்   - கர்த்தரையே

Vilaintha Palanai Arupparillai விளைந்த பலனை அறுப்பாரில்லை


 Vilaintha Palanai Arupparillai

விளைந்த பலனை அறுப்பாரில்லை

விளைவின் நற்பலன் வாடிடுதே

அறுவடை மிகுதி ஆளோ இல்லை

அந்தோ மனிதர் அழிகின்றாரே


1.அவர் போல் பேசிட நாவு இல்லை

அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை

எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்

உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த


2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்

ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே

திறப்பின் வாசலில் நிற்பவர் யார்

தினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த


3.ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்

ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்

விரைந்து சென்று சேவை செய்வாய்

விளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த


4.ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை

சபைதனில் விளங்கிட செயல்படுவாய்

நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்

நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் – விளைந்த


5.ஆவியின் வரங்கள் ஒன்பதனை

ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்

சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்

சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் – விளைந்த


6.தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்

உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்

கர்த்தர் நாட்டின தோட்டத்திலே

கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த

Thursday 22 July 2021

Inba Yesu Rajavai Naan இன்ப இயேசு ராஜாவை நான்


 

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் (2)
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு (2)
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு (2)
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

3. முட் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து (2)
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2)
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

5. ஆஹா எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ
அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ (2)
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)

Wednesday 21 July 2021

Aruvadai Miguthi அறுவடை மிகுதி


 

அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அன்பரின் கதறல் கேட்டிடுதே

1. நானிலம் முழுவதும் நானூறு கோடி
நாசத்தின்  வழியை நாடிடுதே
இயேசுவின் அன்பு நம்மையும் நெருக்க
எழும்பிடுவோம் நாம் வாலிபரே

2. அமைதி இல்லை நம்பிக்கை இல்லை
அழுகையும் கண்ணீர் வாழ்க்கையிலே
உறக்கமும் இல்லை முழு உணவில்லை
உணர்ந்திடுவீர் இதை வாலிபரே

3. மிருகம் போல் உழைத்தும் வறுமையின் தொல்லை
வாதையில் வாடிடும் கூட்டத்தைப் பார்
ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை
அன்பினைக் காட்டவும் யாருமில்லை

4. நம்பிக்கையற்ற கல்லறை நாடி
நாளினில் லட்சங்கள் செல்கிறதே
திறப்பினில் நிற்க ஆளில்லை என்று
திகைத்துக் கதறிடும் இயேசுவைப் பார்

5. அலறிடும் பிள்ளைகள் குரலினைக் கேட்டு
அழுவதன்றி வேறென்ன செய்வார்
யாரை அனுப்புவேன் யார் போவார் என்றார்
கதறலை என் உள்ளம் கேட்டிடாதோ

6. அன்பரே வந்தேன் அழுகையைக் கண்டேன்
அர்ப்பணித்தேன் எந்தன் வாழ்க்கையினை
பாரினில் கழுதையாய் சுமந்தும்மை சென்று
பாதத்தில் விடுவேன் என் ஜீவனையே