1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே
அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் — அருள்
3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன் — அருள்
4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இஷணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே — அருள்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.