Sunday 25 July 2021

Ennuyire Ennuyire என்னுயிரே என்னுயிரே


 

என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான்

 

கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்

கரையாத அவரன்பு குறையாது

கண்ணாக எந்நாளும் காத்திடுவார்

 

துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

துணையாளன் இருக்கின்றார் திகையாதே

தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார்

 

உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்

உலகாளும் மன்னவன் உனக்குண்டு

என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.