என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான்
கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்
கரையாத அவரன்பு குறையாது
கண்ணாக எந்நாளும் காத்திடுவார்
துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
துணையாளன் இருக்கின்றார் திகையாதே
தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார்
உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்
உலகாளும் மன்னவன் உனக்குண்டு
என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.