Wednesday 30 October 2019

Valiyentral Ethu Athu Jeeva Oli வழியென்றால் எது அது ஜீவ வழி

Valiyentral Ethu Athu Jeeva Oli
வழியென்றால் எது? அது ஜீவ வழி
வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு
                     வழியும் அவர் ஒளியும் அவர்
                     ஜீவ நதியும் அவரே
                     சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
                     ஜீவ அப்பமும் அவரே அவர் இயேசு

1.   ஒளியென்றால் எது? அது ஜீவ ஒளி
     ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு  --- வழியும்

2.  ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம்
   ஜலம் காட்டும் சற்குருயார்? அவர் இயேசு  --- வழியும்

3. சத்தியம் என்றால் எது? அது தேவ சத்யம்
   சத்தியம் காட்டிடும் சற்குணர்  யார்? அவர் இயேசு  --- வழியும்

4. அப்பம் என்றால் எது? அது ஜீவ அப்பம்
  அப்பம் ஊட்டிடும் அன்புளர்  யார்? அவர் இயேசு  --- வழியும்

5. அன்பு என்றால் எது? அது தேவ அன்பு
 அன்பு காட்டிடும் நற்குணர் யார்? அவர் இயேசு   --- வழியும்

Karthar yesu Varuvar கர்த்தர் இயேசு வருவார்

Karthar yesu Varuvar
கர்த்தர் இயேசு வருவார் 
நித்தம் காத்துத் தவிக்கும் தேவ புத்திரர்
களிப்பாய் வானத்தில் சேர்ந்திடவே

1.மேகத்தில் தோன்றும் மின்னொளியில்
மகிமைக் கிறிஸ்து வெளிப்படுவார்
தூதர் தொனி ஆரவாரத்துடன்
தேவ எக்காளம் முழங்கிடுமே - கர்த்தர்

2.ஆண்டவர் அழைத்த முதற்பலன்கள்
அமரர் வடிவாய் மாறிடுவோம்
கர்த்தருக்குள் மரித்தோர் எழும்ப
பக்தர்களோடு பறந்திடுவோம் - கர்த்தர்

3.தம் மணவாட்டி ஆயத்தமே
துதியே செலுத்தி மகிழ்ந்திடவே
நீதி விளங்கும் நல் வெண் வஸ்திரம்
ஜோதி இலங்கத் தரித்திடுவார்  - கர்த்தர்

4.நூதன சாலேம் வந்திறங்கும்
நடுவான மீதில் அலங்கரிப்பாய்
ஆட்டுக்குட்டியானவர் விருந்தே
அன்று சந்தோஷ சுப மங்களம் - கர்த்தர்

5.வெண் குதிரை மேல் ஏறிவந்தே
கண்கள் நெருப்பாய் மிக ஜொலித்தே
உண்மையும் சத்தியமும் நிறைந்தே
விண் மணவாளன் ஜெயம் எடுப்பார் – கர்த்தர்




Tuesday 29 October 2019

Inba Thunba Nerathilum Un இன்ப துன்ப நேரத்திலும் உன்

Inba Thunba Nerathilum Un
இன்ப துன்ப நேரத்திலும்  உன்
அன்புள்ள இயேசுவைப் பார்

1.இன்பத்தினால் அகமகிழ்ந்து 
கிலேசத்தினால் துக்கித்து
சிற்றின்பப் பேருலகில்
சிக்கிக்கொண்டு இருக்கும் போதும்  - இன்ப

2. சோதனையால் பிடிபட்டு 
இடுக்கண்ணில் இருக்கும் போதும்
சாத்தான் உன்னை மேற்கொள்ளும் போதும்
அக்கினி யாஸ்திரம் எரியும்போதும் - இன்ப

3.தோழரால் பகைக்கப்பட்டு 
மனகிலேசம் அடையும் போதும்
உலகம் உன்னை இகழ்ச்சி செய்து
தங்கள் இடத்தை  விட்டோடும் போதும் - இன்ப

4.அவர் தாமே சோதிக்கப்பட்டு 
பாடு நமக்காய் பட்டதினால்
அவர் சோதிக்கப்படும்
நமக்கு உதவி செய்ய வல்லவராம் - இன்ப

5.வறுமையினால் யாசித்து 
பாடு மிகப்படும் போது
சாத்தான் உன்னைப் பகடிப் பண்ணி
உன் விசுவாசத்தைக் குறைக்கும் போதும் – இன்ப

6.கடுநோயால் பெலன் குன்றி 
பெவீனத்தால் தள்ளாடி
ஜீவன் உனக்குக் கசப்பாகி
சாவை நீ விரும்பும் போதும் - இன்ப

7.பகைஞரால் கல்லெறியுண்டு 
மரண நேரம் கிட்டும்போது
பக்தன் ஸ்தேவானைப் போல
தைரியமாய் உன் இயேசுவைப் பார் - இன்ப

8.நான்  என் இயேசுவின் தரிசனத்தை 
நிமிஷந் தோறும் காண்கிறதால்
நான் தான் பயப்படாதிருங்கள் 
என்றவர் என்னை தேற்றுகிறார் – இன்ப

Sunday 27 October 2019

Naan Umai Patri Ratchaga நான் உம்மைப் பற்றி இரட்சகா

Naan Umai Patri Ratchaga
1.நான் உம்மைப் பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில்
நம்பி வந்து நிற்க்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

2.ஆ உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3.மா வல்ல வாக்கின் உண்மையைக்
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4.நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

Virunthai Serumen Alaikirar விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்

Virunthai Serumen Alaikirar
1.விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன் போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா பாவி வா

2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு
வா பாவி வா

3. மீட்பரின் பாதமும் சேராவிடில்
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
இயேசுவே வல்லவர்
இயேசுவே நல்லவர்
இயேசுவே ஆண்டவர்
வா பாவி வா

4. மோட்சத்தின் பாதையில் முன்செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்
வாடாத கிரீடமும்
ஆனந்த களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா பாவி வா

5. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர்
பாவமும் அறவே சுத்தம்செய்வீர்
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்

Theeratha Thagathal En Ullam தீராத தாகத்தால் என் உள்ளம்

Theeratha Thagathal En Ullam
1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,
ஆ  ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே.

2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே;
நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே.

3. தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்,
மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.

4. உம் தூய ரத்தத்தால் எம் பாவம் போக்கினீர்,
உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.

5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்;
மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.

6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே;
என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.

Friday 25 October 2019

Kartharai Padiye Potriduvome கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

Kartharai Padiye Potriduvome
1.கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரையில்லை அவரன்பு கரையற்றதே

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசுவைபோல் வேறு நேசரில்லையே

2.கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின்  மீதே
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய்
வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார்

3.போரட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவ குமாரனின் விசுவாசத்தாலே  நான்
ஜீவித்து சேவிக்க திடமளித்தார்

4.கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்

5.சீயோனில் சிறப்புடன் சேர்த்திட  இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
முகமுகமாகவே காண்போமே  அவரை
யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம்

En Meetper Sentra Pathaiyil என் மீட்பர் சென்ற பாதையில்

En Meetper Sentra Pathaiyil
1. என் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில் பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன்   (2)
சிலுவையை சிலுவையை நான் விடேன் 

2. ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா
  
3. தாகத்தாலும் பசியாலும் தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா
  
4. பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம் செய்வாயா
கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா

5. லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல்
பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்
 
6. வாழ் நாளெல்லாம் நிலை நின்று சிலுவை சுமப்பேன்
தேவ அருளினால் வென்று மேல் வீட்டைச் சேருவேன்

Kalvari Mamalai Mel கல்வாரி மா மலைமேல்

Kalvari Mamalai Mel 
1.கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர்  இயேசு தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை (2)

2.அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத் தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார் (2)

3.கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே  (2)

Yesuvin kudumpam ontru unndu இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

Yesuvin Kudumbam Ontru Undu
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2) 

1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை 
ஏழை இல்லை பணக்காரனில்லை 
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார் — இயேசுவின்

2. பாவமில்லை அங்கு சாபமில்லை 
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார் — இயேசுவின்

3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதி பாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார் — இயேசுவின்




Wednesday 23 October 2019

Kadaisi Natkalilae Kadatsikum Thevanavar கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் தேவனவர்

Kadaisi Natkalilae Kadatsikum Thevanavar 
கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் தேவனவர்
 மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியே பொழிவேனென்றார்
அருள் மாரியே பொழிவேனென்றார்  - 2

1. பெருமழையின் இரைச்சல் பெருந்தொனியாய் முழங்க - 2
பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
அருள்மழை பொழியுமென்றார்
இன்று அருள்மாரி பொழியுமென்றார்  – 2  --- கடைசி நாட்களிலே

2. தரிசனம் கண்டிடுவார் கரிசனை உள்ளோரெல்லாம் - 2
 பரிசுத்த வான்கள் கூடி மகிழ்வார்
மாரிதனை கண்டிட
பின் மாரிதனை கண்டிட  - 2   --- கடைசி நாட்களிலே

3. முழங்காலில் நின்றோரெல்லாம் முழங்கிடுவார் அன்று - 2
முழங்கால்கள் மடக்கும் இயேசுவின் நாமம்
தளங்களை நிரப்பிவிடும்
பணி; தளங்களை நிரப்பிவிடும்  - 2  --- கடைசி நாட்களிலே

4. இந்தியாவின் மண்ணிலே சிந்திய கண்ணீரெல்லாம் - 2
பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
தந்தோரை எழுப்பிவிடும்
தம்மை தந்தோரை எழுப்பிவிடும் – 2   --- கடைசி நாட்களிலே

Tuesday 22 October 2019

Thasare Itharaniyai Anbai தாசரே இத்தரணியை அன்பாய்

Thasare Itharaniyai Anbai 
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே

2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே

4. இந்து தேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட

5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம்

Sathya Vethamana vithai சத்ய வேதமான விதை

Sathya Vethamana vithai
1.     சத்ய வேதமான
  காலை மாலை
விதைப்போம் எப்போதும்
ஓய்வில்லாமலே,
அறுப்பின் நற்காலம்
எதிர் நோக்குவோமே,
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே

அரிக்கட்டோடே
அரிக்கட்டோடே
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே.

2. மழையடித்தாலும்
வெயிலெரித்தாலும்
குளிர்ச்சியானாலும்
வேலை செய்வோமே;
நல்ல பலன் காண்போம்,
துன்பம் மாறிப்போகும்
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே.

3. கவலை, விசாரம்;
கஷ்ட நஷ்டத்தோடு
விதைத்தாலும் வேலை
விடமாட்டோமே
இளைப்பாறக் கர்த்தர்
நம்மை வாழ்த்திச் சேர்ப்பார்
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே.

Saturday 19 October 2019

Kalvariyin karunaiyithae கல்வாரியின் கருணையிதே

Kalvariyin karunaiyithae
1.கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

2.பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே  --- விலையேறப்

3.சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே  --- விலையேறப்

4.எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்   --- விலையேறப்

5.மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே   --- விலையேறப்

Friday 18 October 2019

Paviku Pugalidam Yesu Ratchagar பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

Paviku Pugalidam Yesu Ratchagar
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி

Thursday 17 October 2019

Yesuvin Marbinil Saruvene இயேசுவின் மார்பினில் சாருவேனே

Yesuvin Marbinil Saruvene
இயேசுவின் மார்பினில் – சாருவேனே (3)
துன்பம் துக்கம் கண்ணீர் - மறப்பேனே  (3)
 
1. காரிருள் மூடும் நேரத்தினில்
கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
எந்தனை மீட்டிட உந்தனை ஈந்திரே
அன்பின் சொரூபி என் இயேசு நாதா
 
2. நீசச் சிலுவை மீதினிலே
என் பாவம் போக்கத் தொங்கினீரே
ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே
 
3. கல்வாரி நாதா நின் இரத்தத்தை
சிந்தினீரே இப்பாவிக்காக
கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே
முள்முடீ சூட்டியே நின் சிரசில்
 
4. ஜீவனைத் தந்த என் நேசரே
ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே
விண்ணிலும் சேர்ப்பீரே பாவியென்னை

Wednesday 16 October 2019

Ullamellam Uruguthaiyo உள்ளமெல்லாம் உருகுதையோ

Ullamellam Uruguthaiyo
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே

2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்

3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ

Antho Kalvariyil Arumai அந்தோ கல்வாரியில் அருமை

Antho Kalvariyil Arumai
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார் (2)

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே

அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே

முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே

அதிசயம் இது இயேசுவின் நாமம்
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே

சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்

Arasanai Kanamalirupomo அரசனைக் காணாமலிருப்போமோ

Arasanai Kanamalirupomo
அரசனைக் காணாமலிருப்போமோ – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ – யூத – அரசனைக்

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத – அரசனைக்

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே – அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே – யூத – அரசனைக்

3. அலங்காரமனை யொன்று தோணுது பார் – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் – யூத – அரசனைக்

4. அரமனையில் அவரைக் காணோமே – அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே
மறைந்த உடு, அதோ பார் திரும்பினதே, – பெத்லேம்
வாசலில் நமைக்கொண்டு சேர்க்குது பார் – யூத – அரசனைக்

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமி்ட்டே, – ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல் – யூத – அரசனைக்

Tuesday 15 October 2019

Urugayo Nenjame Nee Kurusinil உருகாயோ நெஞ்சமே நீ குருசினில்

Urugayo Nenjame Nee Kurusinil
1. உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்
கரங் கால்கள் ஆணி யேறித்
திரு மேனி நையுதே

2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நிலமெல் லாம் புரக்க
ஈனக் குரு சேறினார்

3. தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏக பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்

4. மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்

5. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கினார் அன்றோ

Yesu Raja Munne Selgirar இயேசு ராஜா முன்னே செல்கிறார்

Yesu Raja Munne Selgirar

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஒசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)

1. அல்லேலூயா துதி மகிமை – என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா (2)
என்றென்றும் போற்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)

2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)

3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே (2)

Erukintaar Thalladi Thavalnthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

Erukintaar Thalladi Thavalnthu
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
களைப்போடே என்
இயேசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கொதா
மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான்

மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை
இரத்தம் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார்

இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே

சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்தக் குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார்

பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியை போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்

செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்தத் தாயின் அன்பதுவே
எருசலமே ! எருசலமே
என்றழுதார் கண் கலங்க

Hosanna Paduvom Yesuvin Thasare ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே

Hosanna Paduvom Yesuvin Thasare
ஓசன்னா பாடுவோம்  ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும் அன்பாய்த் துதி பாடுவோம்

2. சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்

3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்

4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்

5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்று நாமும் திரியேகரைப் போற்றுவோம்

Monday 14 October 2019

Raakkalam Bethlem Meipargal ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

Raakkalam Bethlem Meipargal
1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்

2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்

3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்

4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்

5.என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்

6. மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்

Piranthar Piranthar Vanavar பிறந்தார் பிறந்தார் வானவர்

Piranthar Piranthar Vanavar
பிறந்தார் பிறந்தார்
  புவி மானிடர் புகழ்  பாடிட பிறந்தார்  (2)

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால்
மேலான நாமம் பெற்றார்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

Thursday 10 October 2019

Bavani Selgintrar Rasa பவனி செல்கின்றார் ராசா

Bavani Selgintrar Rasa
பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா!
                அனுபல்லவி
அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம். — பவனி
               சரணங்கள்
1. எருசலேமின் பதியே! – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே! — பவனி

2. பன்னிரண்டு சீடர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம் சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத. — பவனி

3. குருத்தோலைகள் பிடிக்க, – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.   — பவனி

Hosanna Palar Paadum Rajavaam ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம்

Hosanna Palar Paadum Rajavaam
ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே

1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்
தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர்.

2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.

3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்

4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.

5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.

Tuesday 8 October 2019

En Nesare En Aathma Nayagare என் நேசரே என் ஆத்ம நாயகரே

En Nesare En Aathma Nayagare
என் நேசரே என் ஆத்ம நாயகரே வந்திடுவீர்
என் கண்ணீர் துடைத்திடவே உம்மில் நான் சேர்ந்திடவே
என் இயேசுவே மத்ய வானில் வேகம் வந்திடுவீர்

விண்மேகத்தில் தூத கணங்களுடன் வரும் நேரம்
எனக்காய் காயப்பட்டதாம் பொன்முகம் முத்தம் செய்திட
தண்ணீர் தேடும் மான்களைப்போல நானும் வாஞ்சிக்கிறேன்

வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த சுத்தருடன்
சேர்ந்து நின் சமூகத்திலே அல்லேலூயா பாடிட
புத்தியுள்ள கன்னிகைபோல் எப்போதும் ஆயத்தமே

சூரிய சந்திர நட்சத்திரங்களை கடந்து சொர்க்க வீட்டில்
பளிங்கு நதியோரத்தில் ஜீவ விருட்சத்தின் நிழலில்
நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன் என் நேசரே

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார்

Yesu Manidanai Piranthar
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1.மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே

2.ஆலோசனை கர்த்தரே இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே

3.யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார்

4.பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே

5.மாட்டுத் தொழுவத்திலே பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர்
ஏழ்மையின் பாதையிலே

Bethalaiyil Piranthavarai Potri பெத்தலையில் பிறந்தவரைப் போற்றி

Bethalaiyil Piranthavarai
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்

2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Monday 7 October 2019

Samathanam Othum Yesu kiristhu சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து

Samathanam Othum Yesu kiristhu
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
அனுகூலரிவர் மனுவேலரிவர்

2. நேய கிருபையின் ஓர் சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயரிவர்

3. ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே

5. மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

Sunday 6 October 2019

Raayar Moovar Keelthesam ராயர் மூவர் கீழ்தேசம்

Raayar Moovar Keelthesam
1. ராயர் மூவர் கீழ்தேசம்
விட்டு வந்தோம் வெகுதூரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின் செல்வோம் நட்சத்திரம்

ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
நித்தம் வழி காட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்

2. பெத்லகேம் வந்த இராஜாவே
உம்மை நித்திய வேந்தன் என்றேன்
க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்
வைத்தேன் உம் முன்னமே — ஓ…

3. வெள்ளை போளம் நான் ஈவேன்
கொண்டு வந்தேன் காட்டவுமே
துஷ்ட பாவ பாரம் தாங்கி
மரிப்பார் தேவனே — ஓ…

4. தூப வர்க்கம் நான் ஈவேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன் — ஓ…

Kel Jenmitha Rayarkkae கேள் ஜென்மித்த ராயர்க்கே

Kel Jenmitha Rayarkkae
1. கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்
கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே

2. வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்

3. வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்

Yesuvai Nambi Patri Konden இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்

Yesuvai Nambi Patri Konden
இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவகுமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்

Friday 4 October 2019

Karirul Velayil Kadungkulir காரிருள் வேளையில் கடுங்குளிர்

Karirul Velayil Kadungkulir
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவு – காரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மானுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு – காரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு – காரிருள்

O Yesu Umathanbu ஓ இயேசு உமதன்பு

O Yesu Umathanbu
ஓ இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது

1 அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை மாலைகளிலும் துதிக்க உயர்ந்தது
துதிக்க உயர்ந்தது   --- ஓ இயேசு

2 சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன் என்றதால் பாடுகிறேன்
என்றதால் பாடுகிறேன்   --- ஓ இயேசு

3 இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
கருணையா யென்னைக் கரம் பிடித்தே கர்த்தரே காப்பதாலும்
கர்த்தரே காப்பதாலும்   --- ஓ இயேசு

4 குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர்
திருப்தியாக்குகிறீர்   --- ஓ இயேசு

Yesuvin Ninthaiyai Sumapom இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்

Yesuvin Ninthaiyai Sumapom
இயேசுவின் நிந்தையைச்  சுமப்போம் 
வாசலுக்கு புறம்பே போவோம்

1. சன்பல்லாத்  தொபியா சக்கந்தங்களையும்
துன்புறுத்தும் தீயர் கேள்விகளையும்
அன்பருடனே இன்பமாய் ஏற்போம்
புறப்பட்டுப்போகக்  கடவோம்  --- இயேசுவின்

2. ஸ்தேவான் மேல் விழுந்த கற்களை நினைத்து
சீஷர்கள் அடைந்த சிறைகளை சிந்தித்து
மோசங்களென்றாலும் நேசமாய் ஏற்போம்
புறப்பட்டுப்போகக்  கடவோம்  --- இயேசுவின்

3. கள்ளச் சகோதரர் கைவிடுவார்கள்
சொல்லாதவைகளை சுமத்திடுவார்கள்
நல்ல கிறிஸ்தேசுவை மறுதலிப்பார்கள்
புறப்பட்டுப்போகக்  கடவோம்  --- இயேசுவின்

4. கோலால் கொடுமையாய் அடிக்கப்பட்டாலும்
வாளால் துண்டாக வகுக்கப்பட்டாலும்
நாளெல்லாம் நரரால் நசுக்கப்பட்டாலும்
புறப்பட்டுப்போகக்  கடவோம்  --- இயேசுவின்

5. அமர்ந்திருந்து அவர் கர்த்தரென்றறியுங்கள்
நடந்திடும் யுத்தம் நாதனுடையதே
ஸ்தோத்திரப்  பலியை  நேர்த்தியாய் செலுத்தி
அல்லேலுயா பாடக்கடவோம்  --- இயேசுவின்

Salemin Raja சாலேமின் ராசா

Salemin Raja
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன்  (2) – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்  --- சாலேமின் ராசா

2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?  --- சாலேமின் ராசா

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே   --- சாலேமின் ராசா

4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே   --- சாலேமின் ராசா

5. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய  இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே    --- சாலேமின் ராசா

Thursday 3 October 2019

Naarpathu Naal Raapagal நாற்பது நாள் ராப் பகல்

Naarpathu Naal Raapagal 
1. நாற்பது நாள் ராப் பகல்
வனவாசம் பண்ணினீர்;
நாற்பது நாள் ராப் பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர்.

2. ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகத் துணை;
மஞ்சம் உமக்குத் தரை,
கல் உமக்குப் பஞ்சணை.

3. உம்மைப்போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்,
உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்.

4. சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும்,
வென்றீரே நீர் அவனை.

5. அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்;
தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்.

Ellam Yesuve எல்லாம் இயேசுவே

 Ellam Yesuve
எல்லாம் இயேசுவே எனக்கெல்லா மேசுவே
தொல்லைமிகு மிவ்வுலகில் துணை யேசுவே

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்

தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்

கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்

போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும்

அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென்  காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்

Wednesday 2 October 2019

Rojapoo Vasamalargal Nam ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்

Rojapoo Vasamalargal Nam
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ

2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ

3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ

4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ…
நேசமணாளன் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ

Thammandai Vantha Palarai தம்மண்டை வந்த பாலரை

Thammandai Vantha Palarai
1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.

2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.

3. குழந்தைகளுக் காகவும்
மரித்துயிர்த்த   ஆண்டவர்
சிறந்த நன்மை வரமும்
தரக்  காருண்ய முள்ளவர்

Logam Aalum Aandavar லோகம் ஆளும் ஆண்டவர்

Logam Aalum Aandavar
1. லோகம் ஆளும் ஆண்டவர்,
         ஆணும் பெண்ணும் செய்தனர்,
         இரு பேரும் வாழவே
        ஆசீர்வாதம் தந்தாரே.

     2. ஆதலால் விவாகமே
         மேன்மையுள்ள தாயிற்றே;
          இந்த நன்மைக்காகவும்
          ஸ்தோத்திரம் உண்டாகவும்.

       3. தேவ வாக்குக் கேற்றதாய்
           விசுவாச முள்ளோராய்
           நடப்போர்க்கு நன்மையே
           தவறா தளிப்பாரே.

       4. இந்த இரு பேரையும்
           கர்த்தரே கடாட்சியும்
          இவரால் புகழ்ச்சியே
          தேவரீர்க்குண்டாகவே.


Enthan Aathma Nesar Yesuvai எந்தன் ஆத்ம நேசர் இயேசுவை

Enthan Aathma Nesar Yesuvai
எந்தன் ஆத்ம நேசர் இயேசுவை 
பாவ பாரத்தோடு   நிற்கின்றோம்
இன்பமானாலும் துன்பமானாலும்
உந்தன் சிலுவை சுமந்து செல்வேனே

1. என் அந்தரங்க ஜீவியம்
கறை படிந்த சாவின் ஓவியம்
என் சாவின் பின் முதல்
உம்மைக் காணா நீசன் ஆவேனோ
என் ஆவியும் உம்மை சேராமல்
ஏங்கி அலைந்து திரியுமோ  தேவா  --- எந்தன்

2. உம்  ராஜரீக  நாளிலே
பரிசுத்தவான்கள் நடுவில்
உம்மைக்காணும் நான் தூர நிற்பேனோ
என்னை ஏற்றுக்கொள்ளும்  என் தேவா
யாதும் அற்றோனாய் எந்தன் பாவத்தை
நினைத்து  அழுது  நிற்பேனோ தேவா  --- எந்தன்

Enthan Ullathil Puthu Unarvu எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு

Enthan Ullathil Puthu Unarvu
1.எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு
எந்தன் வாழ்வினில் புதுமலர்ச்சி
எந்தன் நடை உடை பாவனை சொல் செயலும்
எந்தன் இயேசுவால் புதிதாயின

புதுவாழ்வு புது ஜீவன் புதுபாடல்
என்னை சந்தித்த இயேசு தந்தார்
ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன்
ஆண்டவர் சமூகத்தை அலங்கரிப்பேன்

2.கதரேனரின் கடற்கரையில் கல்லறையிடை
வாசம் செய்த பொல்லா ஆவி
நாதர் பாதம் பணிய நல்ல
அற்புத மாற்றம் பெற்றான்   --- புதுவாழ்வு

3.ஓடையில் உருண்டோடி வரும்
சின்னக் கற்களும் வடிவம் பெறும்
சின்னத் தாவீதுக்கும் கோலியாத்தை
வீழ்த்த கவண்கல் ஆயுதமாகிடும்  --- புதுவாழ்வு

4. கள்ளனும் கொள்ளைக்காரனான
குள்ளன் சகேயுவும் மீட்படைந்தான் 
உள்ளபடி யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான்
வெள்ளம் போல் மகிழ்வு பெற்றான்  --- புதுவாழ்வு

Neengatha Pavam Neengathatheno நீங்காத பாவம் நீங்காததேனோ

Neengatha Pavam Neengathatheno
நீங்காத பாவம் நீங்காததேனோ நீங்கிடும் நாள்தானிதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

1. காணாத ஆட்டை தேடி உன் நேசர் கண்டுன்னை சேர்த்திடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

2.என்பாவம் போக்கி என்னையும் மீட்டார் உன்னையும் மீட்டிடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

3.நினையாத நேரம் மரணம் சந்தித்தால் எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

Thambiye Kel Thangaiye Kel தம்பியே கேள் தங்கையே கேள்

Thambiye Kel Thangaiye Kel
தம்பியே கேள் தங்கையே கேள்
தேவனின் எச்சரிப்பை கவனித்து கேள்
எண்ணாகமம் முப்பத்திரண்டு
இருபத்தி மூன்றாம் வசனத்தைக் கேள்
உங்கள் பாவம் உங்களையே
தொடர்ந்து பிடிக்கும் என அறியுங்கள்
இயேசுவை உன் உள்ளத்தில் அழைத்தால்
பாவம் இனி உன்னை தொடர்ந்திடாதே

Nam Naduvathu Oru Puthu Ulagam நாம் நாடுவது ஒரு புது உலகம்

Nam Naduvathu Oru Puthu Ulagam
நாம் நாடுவது ஒரு புது உலகம்
அதை ஆளுவது  நம் இயேசு ராஜன்

1. வானில் எக்காளமதின் தொனி  முழங்கிடவே
என்னை அழைத்துச் செல்ல  அவர் வருவாரே
சிறையுற்றோர் மீட்படைவார்
சிறியோரும் பெரியோரும்  பணிந்திடுவார்  --- நாம் நாடுவது

2. விதை விதைப்பதில்லை  வயல் அறுப்பதில்லை
வீடு கட்டுவோரில்லை அந்த நாட்டினிலே
வாகனங்கள் நீதிமன்றம் கடைத் தெரு  யாவுமே
அங்கு இல்லையே  --- நாம் நாடுவது

3. மெய்  தேவன் அவரே ஒளி வீசிடுவார்
பரிசுத்தர் எனவே தூதர் வாழ்த்திடுவார்
இராஜாதி  ராஜாவுடன் என்றென்றும்
வாழ்ந்திடலாம்  அல்லேலூயா --- நாம் நாடுவது

Unnai Alaikum Yesuvin உன்னை அழைக்கும் இயேசுவின்

Unnai Alaikum Yesuvin
உன்னை அழைக்கும் இயேசுவின்
சத்தத்தை நீ கேளாயோ
உன்னை தேடி வரும் இயேசுவை
உள்ளத்தில் ஏற்றுக்  கொள்ளாயோ -(2)

1.உன் பாவ பாரமெல்லாம்
தன் தோளில் சுமந்தாரே
அவர் பட்ட காயம் நீ செய்த பாவம்
ஆனாலும் அழைக்கின்றார் வா -(2)  --- உன்னை

2.ஐங்காயம் அடைந்தாரே
சிலுவையில் மரித்தாரே
அவர் பட்ட பாடு உனக்காக தானே
உள்ளம் கலங்காதே வா -(2)   --- உன்னை

3.உன்னைப் பேர் சொல்லி அழைத்தாரே
இரத்தத்தால் மீட்டுக் கொண்டாரே
கரங்களை நீட்டி அன்போடு உன்னை
அழைக்கிறார்  இப்போதே வா  (2) --- உன்னை

Tuesday 1 October 2019

Mahimaiyaai Vetri Sirantha Kartharai மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை

Mahimaiyaai Vetri Sirantha Kartharai
மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிழ்ந்து பாடிடுவேன் (2)

1.கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே
கர்த்தர் என் பெலன் கீதமுமானார்
கரம்பிடித்து என் இரட்சிப்புமானார்  - மகிமை

2.அமிழ்ந்தது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே    - மகிமை

3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்   - மகிமை

4.கிருபையால் அழைத்த தேவனை
கரம் குவித்து நான் பாடுவேன்
துதிகளில் பயப்படத்தக்கவரை
துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்   - மகிமை

5.தம்புரு நடனத்தோடே பாடுவேன்
தீர்க்கத்தரிசி மீரியாம் போல
பெலத்தினால் வழி நடத்தினவரை
பரிகாரி என்று நான் பாடுவேன்   - மகிமை

Kalvari Mamalai Mel கல்வாரி மா மலைமேல்

Kalvari Mamalai Mel
1.கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் இயேசு  தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை (2)

2.அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார் (2)

3.கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே (2)

Kalgal Koopidum கல்கள் கூப்பிடும்

Kalgal Koopidum
கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் .. இந்த
கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்
       
1. ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்துவிட்டால்
கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா!
       
2. வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடித்தால்
ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே!
       
3. இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்!

Inba Yesu Rajavai Naan இன்ப இயேசு ராஜாவை நான்

Inba Yesu Rajavai Naan
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் (2)
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு (2)
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு (2)
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து (2)
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா(2)
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

5. ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2)
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ (2)
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)

Yesu Nesikirar இயேசு நேசிக்கிறார்

Yesu Nesikirar
இயேசு நேசிக்கிறார்  – இயேசு நேசிக்கிறார் ;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ!
                                    சரணங்கள்

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் — இயேசு

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம் — இயேசு

3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம் — இயேசு

4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
ஆவலாய்ப் பரப்பேன் — இயேசு

5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,
ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன் — இயேசு