1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் (2) – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன் --- சாலேமின் ராசா
2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ? --- சாலேமின் ராசா
3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே --- சாலேமின் ராசா
4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே --- சாலேமின் ராசா
5. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே --- சாலேமின் ராசா
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.