Friday, 4 October 2019

Salemin Raja சாலேமின் ராசா

Salemin Raja
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன்  (2) – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்  --- சாலேமின் ராசா

2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?  --- சாலேமின் ராசா

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே   --- சாலேமின் ராசா

4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே   --- சாலேமின் ராசா

5. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய  இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே    --- சாலேமின் ராசா

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.