Wednesday, 2 October 2019

Nam Naduvathu Oru Puthu Ulagam நாம் நாடுவது ஒரு புது உலகம்

Nam Naduvathu Oru Puthu Ulagam
நாம் நாடுவது ஒரு புது உலகம்
அதை ஆளுவது  நம் இயேசு ராஜன்

1. வானில் எக்காளமதின் தொனி  முழங்கிடவே
என்னை அழைத்துச் செல்ல  அவர் வருவாரே
சிறையுற்றோர் மீட்படைவார்
சிறியோரும் பெரியோரும்  பணிந்திடுவார்  --- நாம் நாடுவது

2. விதை விதைப்பதில்லை  வயல் அறுப்பதில்லை
வீடு கட்டுவோரில்லை அந்த நாட்டினிலே
வாகனங்கள் நீதிமன்றம் கடைத் தெரு  யாவுமே
அங்கு இல்லையே  --- நாம் நாடுவது

3. மெய்  தேவன் அவரே ஒளி வீசிடுவார்
பரிசுத்தர் எனவே தூதர் வாழ்த்திடுவார்
இராஜாதி  ராஜாவுடன் என்றென்றும்
வாழ்ந்திடலாம்  அல்லேலூயா --- நாம் நாடுவது

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.