கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் தேவனவர்
மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியே பொழிவேனென்றார்
அருள் மாரியே பொழிவேனென்றார் - 2
1. பெருமழையின் இரைச்சல் பெருந்தொனியாய் முழங்க - 2
பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
அருள்மழை பொழியுமென்றார்
இன்று அருள்மாரி பொழியுமென்றார் – 2 --- கடைசி நாட்களிலே
2. தரிசனம் கண்டிடுவார் கரிசனை உள்ளோரெல்லாம் - 2
பரிசுத்த வான்கள் கூடி மகிழ்வார்
மாரிதனை கண்டிட
பின் மாரிதனை கண்டிட - 2 --- கடைசி நாட்களிலே
3. முழங்காலில் நின்றோரெல்லாம் முழங்கிடுவார் அன்று - 2
முழங்கால்கள் மடக்கும் இயேசுவின் நாமம்
தளங்களை நிரப்பிவிடும்
பணி; தளங்களை நிரப்பிவிடும் - 2 --- கடைசி நாட்களிலே
4. இந்தியாவின் மண்ணிலே சிந்திய கண்ணீரெல்லாம் - 2
பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
தந்தோரை எழுப்பிவிடும்
தம்மை தந்தோரை எழுப்பிவிடும் – 2 --- கடைசி நாட்களிலே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.