கர்த்தர் இயேசு வருவார்
நித்தம் காத்துத் தவிக்கும் தேவ புத்திரர்
களிப்பாய் வானத்தில் சேர்ந்திடவே
1.மேகத்தில் தோன்றும் மின்னொளியில்
மகிமைக் கிறிஸ்து வெளிப்படுவார்
தூதர் தொனி ஆரவாரத்துடன்
தேவ எக்காளம் முழங்கிடுமே - கர்த்தர்
2.ஆண்டவர் அழைத்த முதற்பலன்கள்
அமரர் வடிவாய் மாறிடுவோம்
கர்த்தருக்குள் மரித்தோர் எழும்ப
பக்தர்களோடு பறந்திடுவோம் - கர்த்தர்
3.தம் மணவாட்டி ஆயத்தமே
துதியே செலுத்தி மகிழ்ந்திடவே
நீதி விளங்கும் நல் வெண் வஸ்திரம்
ஜோதி இலங்கத் தரித்திடுவார் - கர்த்தர்
4.நூதன சாலேம் வந்திறங்கும்
நடுவான மீதில் அலங்கரிப்பாய்
ஆட்டுக்குட்டியானவர் விருந்தே
அன்று சந்தோஷ சுப மங்களம் - கர்த்தர்
5.வெண் குதிரை மேல் ஏறிவந்தே
கண்கள் நெருப்பாய் மிக ஜொலித்தே
உண்மையும் சத்தியமும் நிறைந்தே
விண் மணவாளன் ஜெயம் எடுப்பார் – கர்த்தர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.