Monday 31 August 2020

Koodathathu Ontrumillaiyae கூடாதது ஒன்றுமில்லையே

Koodathathu Ontrumillaiyae கூடாதது ஒன்றுமில்லையே (4) நம் தேவனால் கூடாதது கூடாதது ஒன்றுமில்லையே 1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே வேலைக்காரன் சொஸ்தமானானே சுத்தமாகு என்று சொன்னாரே குஷ்டரோகி சொஸ்தமானானே 2. கடலின் மேல் நடந்தாரே கடும்புயல் அதட்டினாரே பாடையைத் தொட்டாரே வாலிபன் பிழைத்தானே 3. நீ விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பாயே பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே பெரிய காரியம் செய்வாயே 4. பாவங்கள் போக்குவாரே சாபங்கள் நீக்குவாரே தீராத நோய்களையும் தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே 5. லாசருவே வா என்றாரே மரித்தவன் பிழைத்தானே எழுந்திரு என்று சொன்னாரே யவீரு மகள் பிழைத்தாளே 6. வஸ்திரத்தை தொட்டாளே வல்லமை புறப்பட்டதே எப்பத்தா என்று சொன்னாரே செவிட்டு ஊமையன் பேசினானே

Vaaram Mutrum Shemamaai வாரம் முற்றும் ஷேமமாய்

Vaaram Mutrum Shemamaai 1. வாரம் முற்றும் ஷேமமாய் தேவன் காத்தார் தயவாய் ஆலயத்தில் கூடுவோம் வேதங் கேட்டு வாழ்த்துவோம் வாரத்தில் மேலானதே மோட்சம் காட்டும் நாள் இதே 2. யேசுநாதர் ரத்தத்தால் நீதியை நாம் பெற்றதால் நேசர் அவர் நாமத்தில் கூடி வேதங் கேட்கையில் லோக வேலை விட்டோய்வோம் வாஞ்சையோடாராதிப்போம் 3. தேவ ஆவி அருளால் தேவ அன்பைக் காண்பதால் ஆவலாகப் போற்றுவோம் தேவ சாயல் ஆகுவோம் மோட்ச வீட்டின் வாழ்விலே வாழ்வோமாக பாலரே 4. மாசிலா யெருசலேம் நாம் வசிக்கும் ஆலயம் நீதி அங்கி பெற்றதால் ஜோதியுள்ளோர் யேசுவால் வாரம் தோறும் பாடுவோம் வேதம் ஓதிப் போற்றுவோம்

Sunday 30 August 2020

Oru Varthai Sollum ஒரு வார்த்தை சொல்லும்

Oru Varthai Sollum ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே உம் வார்த்தையிலே சுகம் உம் வார்த்தையிலே மதுரம் உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு 2.இருளான வாழ்க்கை எல்லாம் ஒளியாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு 3.எரிகோவின் தடைகள் எல்லாம் துதிகளாலே மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு 4.வியாதிகள் வறுமையெல்லாம் விசுவாசத்தால் மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு

Anathi Devan Un Adaikalame அனாதி தேவன் உன் அடைக்கலமே

Anathi Devan Un Adaikalame அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் – மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த 2. கானக பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை அரும் நீருற்றாய் மாற்றினாரே --- இந்த 3. கிருபை கூர்ந்து மனதுருகும் தூய தேவ அன்பே உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் --- இந்த 4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே தூய தேவ அருளால் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த 5. ஆனந்தம் பாடி திரும்பியே வா தூய தேவ பெலத்தால் சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார் சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த

En Thevan En Velicham என் தேவன் என் வெளிச்சம்

En Thevan En Velicham என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் 1. தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும் அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார் என்னை அவர் நிழலில் வைத்து காத்திடுவார் கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என் 2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு தீமை செய்ய விரும்புகையில் என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார் என்னை பகைத்தவர்கள் தேவனை அறிந்தாரே – என்

Vananthira Yatherayil வனாந்திர யாத்திரையில்

Vananthira Yatherayil வனாந்திர யாத்திரையில் களைத்து நான் சோர்ந்து போகும் நேரங்களில் நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும் (2) என் வாழ்வு செழித்திடுமே 1. செங்கடல் எதிர்த்து வந்தும் பங்கம் வந்திடாமல் அங்கு பாதை ஒன்று கண்ணில் தெரியுமே விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன் தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர 2. தேவனை மறக்கச் செய்யும் வேதனை நிறைந்த வாழ்வை சத்துரு விதைத்திடும் போது மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும் காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர 3. இனிமையற்ற வாழ்வில் நான் தனிமை என்று எண்ணும் போது மகிமை தேவன் தாங்கிடுவாரே இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார் இனி எனக்கொன்றுமே தாழ்வு இல்லையே – வனாந்திர

Unnathamanavarin உன்னதமானவரின்

Unnathamanavarin 1.உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் 2. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே 3. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் – இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் 4. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன்பக்கம் விழுந்தாலும் – அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே 5. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் 6. உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவர் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவர் 7. சிங்கத்தின் மேலும் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் 8. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்

Wednesday 12 August 2020

Igathin Thukkam Thunbam இகத்தின் துக்கம் துன்பம்

Igathin Thukkam Thunbam 1. இகத்தின் துக்கம் துன்பம் கண்ணீரும் மாறிப்போம் முடிவில்லாத இன்பம் பரத்தில் பெறுவோம் 2. இதென்ன நல்ல ஈடு துன்பத்துக்கின்பமா பரத்தில் நிற்கும் வீடு மரிக்கும் பாவிக்கா 3. இப்போது விழிப்போடு போராட்டம் செய்குவோம் விண்ணில் மகிழ்ச்சியோடு பொற் கிரீடம் சூடுவோம் 4. இகத்தின் அந்தகார ராக்காலம் நீங்கிப்போம் சிறந்து ஜெயமாக பரத்தில் வாழுவோம் 5. நம் சொந்த ராஜாவான கர்த்தாவை நோக்குவோம் கடாட்ச ஜோதியான அவரில் பூரிப்போம்.

Tuesday 11 August 2020

Neerintri Vaalvethu Iraiva நீரின்றி வாழ்வேது இறைவா

Neerintri Vaalvethu Iraiva நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் (2) உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் 1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே (2) உம் வார்த்தையில் உண்டு அற்புதமே (2) — நீரின்றி 2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர் உம்மையன்றி அணுவேதும் அசையாதையா (2) உம் துணையின்றி உயிர் வாழ முடியாதையா (2) — நீரின்றி 3. எத்தனை நன்மைகள் செய்தீரையா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் (2) ஆயிரம் ஆண்டுகள் போதாதையா (2) — நீரின்றி

Sunday 9 August 2020

Aasirvathiyum Karthare ஆசீர்வதியும் கர்த்தரே

Aasirvathiyum Karthare ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 1. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே – வீசீரோ 2. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே – வீசீரோ 3. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவன் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ 4. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் – வீசீரோ 5. ஞான விவாகம் எப்போதும் ஞாபகமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாக தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே – வீசீரோ

Saturday 8 August 2020

Senaigalin Devan சேனைகளின் தேவன்

Senaigalin Devan சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர் 1. எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும் தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார் --- சேனை 2. சேனையின் கர்த்தரை நம்பிடுவாய் பாக்கியம் அடைந்திடுவாய் உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார் --- சேனை 3. எதிர்ப்பு ஏளனம் பெருகினாலும் ஜெய கர்த்தர் நமக்குண்டு ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம் ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம் --- சேனை 4. ஆவியின் வரத்தை தந்திடுவார் ஆவியை பொழிந்திடுவார் விரைந்திடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய் --- சேனை

Friday 7 August 2020

Arasanai Kanamal அரசனைக் காணாமல்

Arasanai Kanamal அரசனைக் காணாமலிருப்போமோ – நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ அனுபல்லவி பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ – யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ – யூத சரணங்கள் 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே – இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத — அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் – மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார் பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே - அவர் பொன்னடி வணங்குவோம் நடவுமின்றே – யூத — அரசனை 3. அலங்காரமனை யொன்று தோணுது பார் – அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார் இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் – நாம் எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் – யூத — அரசனை 4. அரமனையில் அவரைக் காணோமே – அதை அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே மறைந்த உடு அதோ பார் திரும்பினதே – பெத்லேம் வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் – யூத — அரசனை 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே – ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே வன்கண்ணன் ஏரோதைப் பாராமல் – தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல் – யூத — அரசனை

Wednesday 5 August 2020

Karthar Unnai கர்த்தர் உன்னை

Karthar Unnai கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் நீ கலங்காதே மனமே 1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும் களங்களில் நிரம்பிடும் தானியமும் நிறைவான நன்மை உண்டாக கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார் வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார் தன் பெயரை உனக்கு வழங்கினாரே சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும் உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் பிறருக்கு நீயும் கடன் கொடுக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

Tuesday 4 August 2020

Anantha Thuthi Oli ஆனந்த துதி ஒலி

Anantha Thuthi Oli ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ ஆ 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு — ஆ ஆ 2. ஆதி நிலை ஏகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோமே பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் — ஆ ஆ 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் — ஆ ஆ 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் — ஆ ஆ 5. ஆறாத காயங்கள் ஆறும் ஆரோக்கியம் வாழ்வினில் மூடும் ஆற்றியே தேற்றும் நல்நாதர் போற்றியே பாதம் தரிப்போம் அனாதி தேவன் அடைக்கலம் பாரில் அனாதையாவதே இல்லை – ஆ ஆ 6. பார் போற்றும் தேவன் நம் தேவன் பாரினில் வேறில்லை பாக்கியம் நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே வேறென்ன வாழ்வினில் வேண்டும் பிள்ளைகளும் சபையும் பிதாமுன்னே நிலைக்கும் பரிசுத்தர் மாளிகை எழும்பும் – ஆ ஆ

Sunday 2 August 2020

En Inba Thunba Neram என் இன்ப துன்ப நேரம்

En Inba Thunba Neram என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே ராஜனே தேற்றி என்னை தாங்கிடுவார் – என் 2. இவரே நல்ல நேசர் – என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் – என் 3. பார்போற்றும் ராஜன் – புவியில் நான் வென்றிடச் செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன் – என்