Tuesday 25 April 2023

Ekkala Thoniyide எக்காள தொனியோடே


 

1. எக்காள தொனியோடே மானிடரே வாரீர்

எக்காலம் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்

அல்லேலூயா! அல்லேலூயா

 

2. என் இயேசு பொன்னேசு என்னை மாற்றியவரும் அவரே

அன்போடும் பண்போடும் நடத்தியவரும் அவரே

அல்லேலூயா! அல்லேலூயா

 

3. சந்தோஷம் சந்தோஷம் என்னை ஆவியிலே நிறைத்தீர்

சங்கீதம் பாடிடுவேன் நான் சபையிலே சேர்ந்திடுவேன்

அல்லேலூயா! அல்லேலூயா

 

4. கல்வாரி நாயகனாம் இயேசு மீண்டும் வந்திடுவார்

கைதட்டிப் பாடிடுவேன் நான் அவருடன் சேர்ந்திடுவேன்

அல்லேலூயா! அல்லேலூயா

 

5. சாத்தான் என்னை அணுகும்போது இயேசுவை கூப்பிடுவேன்

சாத்தானை ஜெயித்தவராம் அவர் எனக்கு ஜெயம் தருவார்

அல்லேலூயா! அல்லேலூயா

 

6. அன்பான மானிடரே நீங்கள் அனைவரும் வாருங்கள்

அன்பான இரட்சகராம் நம்மை அழைக்கிறார் வாருங்கள்

அல்லேலூயா! அல்லேலூயா


Monday 24 April 2023

Elumbi Pragasi எழும்பி பிரகாசி


 

எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது

கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது

 

பூமியையும் ஜனங்களையும்

காரிருள் மூடும்  ஆனாலும்

உன்மேல் கர்த்தர் உதிப்பார்

 

1. உன் குமாரரும் குமாரத்திகளும்

உன் அருகினில் வளர்க்கப்படுவர்

உன் கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்

உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்

 

2. உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்

ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்

கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்

என்று கூறி நீ அழைக்கப்படுவாய்

 

3.உன் தேசத்திலே கொடுமை தீண்டாதே

உன் எல்லைகளில் நாசமும் வராதே

உன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்

உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய்

 

4.சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை

சந்திரன் இனி மறைவதுமில்லை

கர்த்தரே நித்ய வெளிச்சமாவாரே

உன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே


Saturday 22 April 2023

Unthan Aasi Tharum உந்தன் ஆசி தாரும்


 


உந்தன் ஆசி தாரும்

எந்தன் ஏசு தேவா

தந்தையே நான் பணிகிறேன்

 

1. ஞானம் அற்றவள் நானே

ஞானம் தாரும் தேவா

உம்மையன்றி வழி ஏது

என் கல்வி ஊற்று நீரே

 

2. பெலன் இல்லாதவள் நானே

பெலனைத் தாரும் தேவா

உந்தன் பெலன் போல் பெலன் ஏது

என் பெலனும் சுகமும் நீரே

 

3. பக்தி அற்றவள் நானே

பக்தி தாரும் தேவா

பக்தியோடு உம்மைத் தேட

உம் கிருபை தாரும் தேவா


Wednesday 25 January 2023

Seermigu Van Puvi Deva சீர்மிகு வான் புவி தேவா


 


1. சீர்மிகு வான் புவி தேவா தோத்ரம்

சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,

ஏர்குணனே, தோத்ரம் அடியார்க்-கு

இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா.

 

2. நேர்மிகு அருள்திரு அன்பா, தோத்ரம்,

நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,

ஆர் மணனே, தோத்ரம், உனது

அன்பினுக்கே தோத்ரம், மா நேசா.

 

3. ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்

தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்

ஆவலுடன் தோத்ரம், உனது

அன்பினுக்கே தோத்ரம், மா நேசா.

 

4. ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்.

அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்

சாற்றுகிறோம் தோத்ரம், உனது

தகுமன்புக்கே தோத்ரம், மா நேசா.

 

5. மாறாப் பூரண நேசா, தோத்ரம்,

மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம்,

தாராய் துணை, தோத்ரம், இந்தத்

தருணமே கொடு தோத்ரம், மா நேசா.


Tuesday 24 January 2023

Paadi Thuthi Maname பாடித் துதி மனமே


 

பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து

1. தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்

2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்

3. எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை

 


Monday 23 January 2023

Innum Orumurai இன்னும் ஒருமுறை



 

இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை

மன்னிக்கவேண்டும் தேவா

என்று பலமுறை என்று பலமுறை

வந்துவிட்டேன் இயேசு ராசா (2)

 

1. ஒத்தையில போகையிலே கூட வந்தவரும் நீர்தான்

தத்து தடுமாறையில தாங்கிப்பிடிச்சவர் நீர் தான்

ஓடி ஓடி ஒளிஞ்சேனே தேடி தேடி வந்து மீட்டீர்

இருளில் இருந்து தூக்கி ராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர்இன்னும்

 

2. பச்சையினு எண்ணி நானும் இச்சையால விழுந்தேன்

பஞ்சு மெத்தையினு நம்பி முள்ளுக்குள்ள தான் படுத்தேன்

புத்தி கெட்டு போனதால பாதை மாறி போனேனே

நல்ல மேய்ப்பன் இயேசு தானே காயம் கட்டி அணைத்தீரே- இன்னும்

 

3.  சொத்து சுகம் நீங்க தானு புரியாமல் நானே

சத்துருவின் சதியாலே தூரமாகி போனேன்

தகப்பன் வீட்டை நினைத்தேன் தந்தையின் நேசத்தை உணர்ந்தேன்

தாமதமின்றி வருவேன் நித்தமும் தாங்கி மகிழ்வேன்- இன்னும்

Sunday 22 January 2023

Illathin Thalaivarai Yesu இல்லத்தின் தலைவராய் இயேசு


 

இல்லத்தின் தலைவராய் இயேசு -  இருந்தால்

 இல்லை என்பது இல்லையே

 

1.  நிறைவான வாழ்வினைத் தருவார் - தந்து

குறையாவும் போக்கியே விடுவார்

மறைவான விருந்தினராவார் - இன்ப

மறை ஞான விருந்தினைத் தருவார்

 

2. வழியாக வருபவர் அவரே - வழியில்

ஒளியாக திகழ்பவர் அவரே

வழுவாமல் காப்பவர் அவரே நம்மைத்

தழுவியே அணைப்பவர் அவரே

 

3. அவர் பாதம் தொடர்ந்திட வேண்டும் - நித்தம்

அவர் பாதை நடந்திட வேண்டும்

அவர் போல வாழ்ந்திட வேண்டும் - என்றும்

பிறர்க்காக உழைத்திட வேண்டும்

 

 


Saturday 21 January 2023

Masilla Kanniye Mathave மாசில்லா கன்னியே மாதாவே


 

மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்

நேசமில்லாதவர் நீசரே ஆவார்

வாழ்க வாழ்க வாழ்க மரியே

வாழ்க வாழ்க வாழ்க மரியே

 

1. மூதாதை தாயாசை முற்பாதமற்றாய்

ஆதியில்லாதோனை மாதா நீ பெற்றாய்

ஆவே ஆவே  ஆவே மரியா

ஆவே ஆவே  ஆவே மரியா

 

2. அருள் நிறைந்த மாதாவே  ஆண்டவர் உம்முடனே

பெண்களுக்குள்ளே நீ பேறுபெற்றாயே

வாழ்க வாழ்க வாழ்க மரியே

வாழ்க வாழ்க வாழ்க மரியே


Friday 20 January 2023

Suga Ragam Neeye Yesuve சுக ராகம் நீயே இயேசுவே


 

சுக ராகம் நீயே இயேசுவே உன் நாமம் போற்றுவேன்

தெவிட்டாத நீா்ச்சுனையாகவே கவி நூறு பாடுவேன்

மேகமாய் பொழியும் அருளும் நீ நேசமாய் தாங்கும் தாய் மடி நீ

தினந்தோறும் வாழ்த்துவேன்.

 

1. உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்

உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன்

அன்பில் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்

அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்

நீயே எந்தன் ஜீவன் நீயே எந்தன் ஆற்றல்

நீயே இல்லை என்றால் எனது உலகம் இல்லை.

 

2. கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன்

அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழக்கிறேன்

உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன்

புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன்

நீயே எனக்கு சொந்தம் நீயே வாழ்வின் தஞ்சம்

உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே.


Wednesday 18 January 2023

Vaarum Naam Ellorum Koodi வாரும் நாம் எல்லோரும் கூடி


 

வாரும் நாம் எல்லோரும் கூடி

மகிழ் கொண்டாடுவோம் – சற்றும்

மாசிலா நம் இயேசு நாதரை

வாழ்த்திப் பாடுவோம் 


1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்

தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – மகிழ்


2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே

மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – மகிழ்


3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்

நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – மகிழ்


4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த

மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – மகிழ்


5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்

பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – மகிழ்


Sagotharargal Orumithu சகோதரர்கள் ஒருமித்து


 

1. சகோதரர்க ளொருமித்துச்

சஞ்சரிப்பதோ எத்தனை

மகா நலமும் இன்பமும்

வாய்த்த செயலாயிருக்குமே

 

2. ஆரோன் சிரசில் வார்த்த நல்

அபிஷேகத்தின் தைலந்தான்

ஊறித் தாடியில் அங்கியில்

ஒழுகுமானந்தம் போலவே

 

3. எர்மோன் மலையின் பேரிலும்

இசைந்த சீயோன் மலையிலும்

சேர்மானமாய்ப் பெய்கின்ற

திவலைப் பனியைப் போலவே

 

4. தேசம் மார்க்கம் இரண்டிற்கும்

சேனை எகோவா தருகிற

ஆசீர்வாதம் ஜீவனும்

அங்கே என்றுமுள்ளதே


Monday 16 January 2023

Aiyaiyaa Naan Vanthen ஐயையா நான் வந்தேன்


 

ஐயையா நான் வந்தேன் தேவ

ஆட்டுக்குட்டி வந்தேன்

 

1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்

துஷ்டன் எனை அழைத்தீர் தயை

செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்

ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்

தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

3. எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்

எத்தனை எத்தனையோ இவை

திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

4. ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்

தென்னை அரவணையும் மனம்

தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தத்தங்களால்

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

5. மட்டற்ற உம் அன்பினால் தடை எதும்

மாறி அகன்றதுவே இனி

திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்

தேவாட்டுக்குட்டி வந்தேன்.


Paalar Gnayirithu Paasamai Vaarum பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்


 

பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்

பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும்.

தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்

ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பை எண்ணிப்பாலர்

 

1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்,

பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம்,

பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்,

ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம்பாலர்

 

2. தேடி வந்தலையும் தேசிகருண்டு,

பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,

கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு

நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு. — பாலர்

 

3. இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே,

இன்னும் நித்தியமும் பாதுகாப்பாரே,

அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்

எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டுபாலர்

Friday 13 January 2023

Imayamum in Kumariyum இமயமும் குமரியும்


 

1. இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
நெஞ்சார் அன்பின் தியாக சேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா
சமாதானம் யேசுவின் வீடே
சகலர்க்கும் சாந்தி எம் நாடே,
சாந்தி இதற்கிலை ஈடே,
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே

2. உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவே
ஓங்கிய வர்த்தகம் தாங்கப்
பொய்யா மொழி மாகாணத்தலைவர்
புருஷோத்தம மந்திரிகள்
நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை
நட்புடன் கருணை இலங்கப்
பணிவிடை நேர்மை அருளே,
பரனர செனப்பகர் தெருளே,
பாரதம் போற்ற மெய்ப் பொருளே
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே


Thursday 5 January 2023

Nantriyodu Naan Thuthi Paduven நன்றியோடு நான் துதி பாடுவேன்


 


நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும்நாதனே
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியேநன்றியோடு

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமேநன்றியோடு

3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால்
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியேநன்றியோடு

4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர்
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர்நன்றியோடு