1. எக்காள தொனியோடே மானிடரே வாரீர்
எக்காலம் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்
அல்லேலூயா! அல்லேலூயா
2. என் இயேசு பொன்னேசு என்னை மாற்றியவரும் அவரே
அன்போடும் பண்போடும் நடத்தியவரும் அவரே
அல்லேலூயா! அல்லேலூயா
3. சந்தோஷம் சந்தோஷம் என்னை ஆவியிலே நிறைத்தீர்
சங்கீதம் பாடிடுவேன் நான் சபையிலே சேர்ந்திடுவேன்
அல்லேலூயா! அல்லேலூயா
4. கல்வாரி நாயகனாம் இயேசு மீண்டும் வந்திடுவார்
கைதட்டிப் பாடிடுவேன் நான் அவருடன் சேர்ந்திடுவேன்
அல்லேலூயா! அல்லேலூயா
5. சாத்தான் என்னை அணுகும்போது இயேசுவை கூப்பிடுவேன்
சாத்தானை ஜெயித்தவராம் அவர் எனக்கு ஜெயம் தருவார்
அல்லேலூயா! அல்லேலூயா
6. அன்பான மானிடரே நீங்கள் அனைவரும் வாருங்கள்
அன்பான இரட்சகராம் நம்மை அழைக்கிறார் வாருங்கள்
அல்லேலூயா! அல்லேலூயா
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.