ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே (2)
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் (2)
1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று
2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
கனி தந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று
Aaraathikka koodinom
ஆராதிக்கக் கூடினோம்
ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
வல்ல இயேசு நம் தேவன்
என்றென்றும் அவர் நல் தேவன்
தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே
மகிமை மகிமையே என் மனம் பாடுதே -2
மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே
சீயோன் பெலனே வெற்றி சிகரமே
சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்
ஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும் - 2
நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே
கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே
கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்
அல்லேலூயா என் ஆவி பாடுதே - 2
ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே
தேவ சாயல் சபையில் தோன்றுதே
தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார்
தேவ சேவையே என் கெம்பீர சேவை - 2
தேவ ஆவியில் நிறைந்து நானும் ஆடிப்பாடுவேன்
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர்
2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர்
3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர்
வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
காத்திடும் கரமதின் வல்லமையை என்றும்
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே
1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்
யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான்
2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான்
3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
சுற்றி உலாவின நித்திய தேவன்
மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே — வான்
4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க
சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள
சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே — வான்
5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை
தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
வழுவ விடாமலே காத்திடும் தேவன்
மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே — வான்
6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
மணவாளன் வரும்வேளை அறியலாகாதே
மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் — வான்
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு
பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு
Athikalayil Palanai Thedi
அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாட்டையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
1. அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க — அதி
2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் — அதி
Deva Senai Vaanameethu Kodi Kodiyaga Thondrum
1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்
அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )
2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்
அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )
3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்
Magilvom Magilvom
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே – இந்த
2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்