Monday 28 February 2022

Yesu Swami Arul Natha இயேசு சுவாமி அருள் நாதா


 


1. இயேசு சுவாமி அருள் நாதா
கெஞ்சிக் கேட்கிறேன்
பாவியேனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்

இயேசு சுவாமி
கெஞ்சிக் கேட்கிறேன்
பாவியேனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்

2. கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்

3. தீயகுணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்
நீரே தஞ்சம் என்று நம்பி
வந்து நிற்கிறேன்

4. தூய ரத்தத்தாலே என்னைச்
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்துக் கொள்ளுவீர்


Sunday 27 February 2022

Thuthi Gana Magimaku Pathirare துதி கன மகிமைக்கு பாத்திரரே


 


துதி கன மகிமைக்கு பாத்திரரே  உம்மை

அனுதினம் துதித்திடுவேன்

அன்பே உந்தன் ஆசிகளை எண்ணவே

ஆனந்தமே என்னில் பொங்குதே

 

1. நாடித் தேடி ஓடி உம் பாதம் வந்தேன்

நன்மை செய்யும் தேவன் நீரல்லோ

பாச வலையால் என்னை வீசி அணைத்தீர்

நேசா உமக்கென்ன செய்குவேன்

 

2. பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னை

தேடி வந்த தேவன் நீரல்லோ

தூக்கி எடுத்தே தூய ஆவியும் ஈந்தீர்

தேவா என்னை சொந்தமாக்கினீர்

 

3. என்றும் உம்மோடு சீயோன் மலையில்

நிற்பதும் என் பாக்கியமல்லோ

ஆசையுடனே பூவில் காத்திருக்கிறேன்

ஆருயிரே வேகம் வாருமே

 

Saturday 26 February 2022

Aathiyum Anthamumanavare ஆதியும் அந்தமுமானவரே


 


ஆதியும் அந்தமுமானவரே

அல்பாவும் ஓமேகாவும் ஆனவரே

 அல்லேலுயா அல்லேலுயா (4)

 

1. வல்லவர் வல்லவர் வல்லவரே

நமது தேவன் வல்லவரே - அல்லேலுயா

 

2.  நல்லவர் நல்லவர் நல்லவரே

நமது தேவன் நல்லவரே - அல்லேலுயா

 

3. பரிசுத்த பிதாவே நீர் வாழ்க

யெகோவா தேவனே நீர் வாழ்க  - அல்லேலுயா

 

4. பரிசுத்த குமாரனே நீர் வாழ்க

இயேசு கிறிஸ்துவே நீர் வாழ்க - அல்லேலுயா

 

5. பரிசுத்த பலியாய் வந்தவரே

எங்களுக்காய் பலியானவரே - அல்லேலுயா

 

6. பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - அல்லேலுயா

 

7. பரிசுத்த ஆவியே நீர் வாழ்க

தேற்றரவாளனே நீர் வாழ்க  - அல்லேலுயா

 

8. சீக்கிரமாக வருபவரே நீர்

 சீயோனின் இராஜாவே நீர் வாழ்க - அல்லேலுயா

 

9. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - அல்லேலுயா 

 

10. அல்லேலுயா ஆமென் அல்லேலுயா

அல்லேலுயா ஆமென் அல்லேலுயா - அல்லேலுயா


Friday 25 February 2022

Kiristhuvukul Valum Enaku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு


 


கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு

வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

1. என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார் இயேசு

4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்


Thursday 24 February 2022

Kannokki Parum Deva கண்ணோக்கி பாரும் தேவா


 


கண்ணோக்கி பாரும் தேவா என்னை

கண்ணோக்கி பாரும் தேவா

கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா

கண்ணோக்கி பாரும் தேவா

 

ஒத்தாசை அனுப்பும் பர்வதமே

கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா

கண்ணோக்கி பாரும் தேவா

 

1. அசுத்த ஆவியை எடுத்தீரே

பரிசுத்த ஆவியை கொடுத்தீரே

கர்த்தாதி கர்த்தனே அப்பா பிதாவே

உம் நாமம் எந்தன் கெம்பீரமே

 

2. பயமுள்ள ஆவியை எடுத்தீரே

பலமுள்ள ஆவியை கொடுத்தீரே

தேவாதி தேவனே அப்பா பிதாவே

உம் பாதம் எந்தன் தஞ்சமே

 

3. உலகத்தின் ஆவியை எடுத்தீரே

உன்னத ஆவியை கொடுத்தீரே

ராஜாதி ராஜனே அப்பா பிதாவே

உம் கிருபை என்றும் போதுமே


Wednesday 23 February 2022

Nadanamadi Sthotharipen நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்


 

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்

1. காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம்ஐயா

 

2. வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காகஐயா

 

3. ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம் தான் உண்டுஐயா

 

4. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே


Tuesday 22 February 2022

Entrum Aanantham என்றும் ஆனந்தம்

 



என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)

1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்

2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்

3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்

4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு

5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்

6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்

7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்


Monday 21 February 2022

Ummai Pirinthu உம்மைப் பிரிந்து


 

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

இயேசையா இயேசையா

 

1. திராட்சை செடியின் கொடியாக

உம்மில் நிலைத்திருப்பேன்

மிகுந்த கனி கொடுப்பேன்

உம் சீடானாயிருப்பேன்நான்

 

2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி

உம் கரம் வைக்கின்றீர்

உமக்கு மறைவாய் எங்கே போவேன்

உம்மைவிட்டு எங்கே ஓடுவேன்நான்

 

3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே

பயந்து போக மாட்டேன்

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்

சோர்ந்து போகமாட்டேன்நான்

 

4. நடந்தாலும் படுத்திருந்தாலும்

என்னை சூழ்ந்து உள்ளீர்

என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்

எல்லாம் உம் கிருபைஐயா

 

5.கர்த்தாவே என்னை ஆராய்ந்து

அறிந்து இருக்கின்றீர்

உட்காருதலையும் எழுதலையும்

அறிந்து இருக்கின்றீர்


Saturday 19 February 2022

Nantri Nantri Nantri Entru நன்றி நன்றி நன்றி என்று


 


நன்றி நன்றி  நன்றி என்று

நாள்தோறும் பாடிடுவோம்

 

1. வல்லவரே நல்லவரே

 

2. காண்பவரே காப்பவரே

 

3. பாவங்களைப் போக்கிவிட்டீர்

 

4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்

 

5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்

 

6. புது வாழ்வு எனக்குத் தந்தீர்


Friday 18 February 2022

Ummodu Irukkanume உம்மோடு இருக்கணுமே


 


உம்மோடு இருக்கணுமே ஐயா

உம்மைப் போல் மாறணுமே

உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து

வெளிச்சம் கொடுக்கணுமே

 

1. ஓடும் நதியின் ஓரம் வளரும்

மரமாய் மாறணுமே

எல்லா நாளும் இலைகளோடு

கனிகள் கொடுக்கணுமே

 

2. உலகப் பெருமை இன்பமெல்லாம்

குப்பையாய் மாறணுமே

உம்மையே என் கண்முன் வைத்து

ஓடி ஜெயிக்கணுமே

 

3. ஆத்ம பார உருக்கத்தோடு

அழுது புலம்பணுமே

இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்

மேய்ப்பன் ஆகணுமே

 

4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு

பிரசங்கம் பண்ணணுமே

கடினமான பாறை இதயம்

உடைத்து நொறுக்கணுமே

 

5. வார்த்தை என்னும் வாளையேந்தி

யுத்தம் செய்யணுமே

விசுவாசம் என்னும் கேடயத்தால்

பிசாசை வெல்லணுமே

 


Thursday 17 February 2022

Eppadi Paduven Naan எப்படி பாடுவேன் நான்


 


எப்படி பாடுவேன் நான்என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்

1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்

3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்

 


Thursday 10 February 2022

Vallamai Arul Niraive வல்லமை அருள் நிறைவே



 




Vallamai arul niraive varum
Pinmaari polinthidume
Theva aaviye thagam theerumae
Vallamaiyal intru emai nirapidume

1. Puthu ennai abishegam
Puthu belan alithidume
Navamoliyal thuthithidave
Vallamai alithidume – vallamai

2. Saththiya aaviye neer
Nithamum nadathidume
Muthiraiyaai abishegiyum
Aaviyin acharamaai – vallamai

3. Akkini abishegam
Nugathinai murithidume
Sathuruvai jeyithidave
Sathuvam alithidume – vallamai

4. Thooya nal aavithanai
Thukamum paduthaamal
Thooya vali nadathidave
Belan thanthu kaathidume – vallamai

5. Petra nal aavithanai
Kaathida varam tharum
Aaviyinal nadanthidave
Aalugai seithidume – vallamai

6. Ularnthidum elumpugalum
Uyirpetru elumpidave
Elupputhalai kandidave
Vallamai alithidume – vallamai 

Wednesday 9 February 2022

Varum Maa Devane வாரும் மா தேவனே


 

1. வாரும் மா தேவனே

உம்மைத் துதிக்கவே

துணை செய்யும்

உமக்கே கனத்தை

உமக்கே நன்றியை

உமக்கே துதியை

செலுத்துவேன்

 

2. அநாதி வார்த்தையே

அன்பாக நித்தமே

என்னோடிரும்

என்னைப் போதிக்கவும்

 உம்மைப் போலாக்கவும்

மோட்சத்தில் சேர்க்கவும்

அருள் செய்யும்

 

3. மாசற்ற ஆவியே

அடியேன் நெஞ்சிலே

தரித்திரும்

என் ஆசை அறிவீர்

குறைவை நீக்குவீர்

 திருப்தியாக்குவீர்

அன்பாகவும்

 

4. திரியேக தேவனே

நித்திய ஜீவனே

உம்மாலேயே

மானிடர் யாவரும்

இகபரத்திலும்

விரும்பும் பாக்கியம்

கிடைக்குமே

 


Tuesday 8 February 2022

Eliyavin Devan எலியாவின் தேவன்


 

எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம்

1. வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்

2. சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்

3. தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன்

4. வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்

Monday 7 February 2022

Enthan Jeba Velai எந்தன் ஜெபவேளை


 

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

தேவா பதில் தாருமே

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே

உம்மை நான் நாடி வந்தேன்

 

1. சோராது ஜெபித்திட

ஜெப ஆவி வரம் தாருமே

தடையாவும் அகற்றிடுமே

தயை கேட்டு உம் பாதம் வந்தேன் --- எந்தன்

 

2. உம்மோடு எந்நாளும்

உறவாட அருள் செய்யுமே

கர்த்தாவே உம் வார்த்தையை

கேட்டிட காத்திருப்பேன் --- எந்தன்

 

3. நம்பிக்கை இல்லாமல்

அழிகின்ற மாந்தர்தனை

மீட்டிடும் என் இயேசுவே

போராடி ஜெபிக்கின்றேன் நாதா --- எந்தன்

 

4. நாளெல்லாம் பாதத்தில்

கர்த்தாவே காத்திருப்பேன்

கண்ணீரின் ஜெபம் கேளுமே

கருணையின் பிரவாகம் நீரே --- எந்தன்

 

5. சகாயம் பெற்றிட

கிருபாசனம் வந்தேனே

இரக்கங்கள் ஈந்திடுமே

என்றென்றும் தயை காட்டும் தேவா --- எந்தன்