உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே
1.
ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா
நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே
2.
உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி
ஜெயிக்கணுமே
3.
ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது
புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே
4.
பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கம் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே
5.
வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.