Friday 29 April 2022

Thaagamullavan Mel Thanneerai தாகமுள்ளவன் மேல் தண்ணீரை


 


தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை
ஊற்றுவேன் என்றீர்

ஊற்றுமையா உம் வல்லமையை
தாகத்தோடு காத்திருக்கிறேன்நான்

1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே

2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே

3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல
நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும்

4. புதிய கூர்மையான கருவியாகணும்
பூமியெங்கும் சுவை தரும் உப்பாகணும்

5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்

6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகணும்
வயல்வெளி அடர்ந்த காடாகணும்

7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும் வளர வேண்டுமே

8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்


Thursday 28 April 2022

VinnaPathai Ketpavare விண்ணப்பத்தைக் கேட்பவரே


 


விண்ணப்பத்தைக் கேட்பவரேஎன்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே


Wednesday 27 April 2022

Entha Nilaiyil Naan Irunthalum எந்த நிலையில் நானிருந்தாலும்


 


எந்த நிலையில் நானிருந்தாலும்
என்னை வெறுக்காதவர்
என் இயேசு ஒருவரே
என் தேவன் நடுவரே

1. நோயாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி
சொல்லி நோகவைப்பார்கள்

2. கடனாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி
சொல்லி கலங்க வைப்பார்கள்

3. பட்டம் படிப்பு இல்லாவிட்டால்
பலர் வெறுப்பார்கள்
வெறும் பட்ட மரம் என்று
சொல்லி பரிகசிப்பார்கள்

4. அனாதையாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று
அலைய வைப்பார்கள்


Tuesday 26 April 2022

Ennile Thaguthi Ontrum Illaiye என்னிலே தகுதி ஒன்றுமில்லையே


 


என்னிலே தகுதி ஒன்றுமில்லையே

என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட

 

1. குயவனாம் தேவன் கையிலே

நான் வெறும் களிமண்தானே

வனைபவரும் வடிவமைப்பதும் தேவனே

என்னில் வாழ்வளித்து நடத்துவதும் தேவனே - என்னிலே

 

2. பாவியில் பிரதான பாவி நான்

என் நீதி அழுக்கான கந்தையே

கழுவிட்டார் தூய தம் இரத்தத்தால்

என்னை மீட்டிட்டார் அளவில்லாத கிருபையால் - என்னிலே

 

3. நடப்பதெல்லாம் உம்மையல்லாமல்

என்னாலேதும் நடக்கலாகுமோ

ஆகும் நீர் சொன்னால் என்றுமே

கூடாதது உம்மால் ஒன்றும் இல்லையே - என்னிலே

Nesikkiren Ummaithaane Iyaa நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா


 


நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா

1. ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால் -- என்
நான் அசைக்கப்படுவதில்லை

2. உம்மையல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே என்
நினைவெல்லாம் ஆள்பவரே

3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம் 
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மைத் தேடணுமே

4. உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்


Monday 25 April 2022

Naane Vazhi Naane Sathyam நானே வழி நானே சத்தியம்


 


நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே(ளே)-உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை

1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்

2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே வருவாயா
இதயத்திலே இடம் தருவாயா

3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே
இதயத்திலே இடம் தருவாயா

4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்
கலங்காதே என் மகனே
கண்மணிபோல் உன்னைக் காத்திடுவேன்


Sunday 24 April 2022

Nantri Nantri Nantri Entru நன்றி நன்றி நன்றி என்று


 


நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயாஇயேசையா

1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே  நன்றி

2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்  நன்றி

3. உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர் (2)
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே  நன்றி

4. கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே  நன்றி


Saturday 23 April 2022

Paralogam Than En Pechu பரலோகந்தான் என் பேச்சு


 


பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் -என்னை

2. உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரைக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன்இயேசுவை

3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன்அங்கு
சேர்ந்து பாடிடுவேன் -நான்
நடனமாடிடுவேன்

4. என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும்நான்

5. கண்ணீர்கள் யாவும் துடைக்கப்படும்
கவலைகள் மறைந்து விடும்
எல்லாமே புதிதாகும்

6. என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
கூட்டிச் சென்றிடுவேன்

Friday 22 April 2022

Kaalmithikkum Desamellaam கால் மிதிக்கும் தேசமெல்லாம்


 

கால் மிதிக்கும் தேசமெல்லாம்என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண் பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்

1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடிஅல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம்அல்லேலூயா

2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று அல்லேலூயா

3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை அல்லேலூயா

4. திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள் அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள் அல்லேலூயா


Thursday 21 April 2022

Karthar Enakkaga Yavaiyum Seivare கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே


 


கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே
அற்புதமானவற்றை ஆச்சரியமாக செய்வார்

1. செய்வார் எல்லாம் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார்

எல்லாம் செய்வார் எனக்காய் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார்கர்த்தர்

2. கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
பெறுவேன் நன்மை பெறுவேன்
பெறாமல் இருக்கமாட்டேன்

எல்லாம் கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
நன்மை பெறுவேன் நிச்சயம் பெறுவேன்
பெறாமல் இருக்க மாட்டேன்கர்த்தர்

3. ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமே

எல்லாம் ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமேகர்த்தர்


Wednesday 20 April 2022

Karam Patri Nadanthiduven கரம் பற்றி நடந்திடுவேன்


 


கரம் பற்றி நடந்திடுவேன்

கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்

அவர் காட்டும் வழியில் உண்மையாய் நடந்து

ஆவியில் மகிழ்ந்திடுவேன்

இராஜாதி இராஜாவுக்கே - மகிமை

இயேசு ராஜனுக்கே

 

இறங்கிடும் தேவ ஆவியே - என்னை

நிரப்பிடும் வல்ல ஆவியே

 

1. சத்துரு கோட்டைகளை

இயேசு இரத்தத்தால் ஜெயித்திடுவேன்

சத்திய ஆவி துணைகொண்டு

என்றும் புதுபெலன் அடைந்திடுவேன்

 

2. நெருக்கங்கள் வரும்போது - என்

நேசர் என் பட்சம் உண்டு

துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன்

அவர் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

 

3. அற்புதம் நடந்திடுமே - என்றும்

மாறிடா தேவ அன்பால்

அல்லேலூயா பாடிடுவோம் - நம்

அதிசய தேவனுக்காய்


Monday 18 April 2022

Elshadai Enthan Thunai எல்ஷடாய் எந்தன் துணை


 


எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே

1. காலைதோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்

2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்

3. யேகோவா ராஃபா எந்த நாளும்
எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்

4. யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்


Sunday 17 April 2022

Ejamanane En Yesu Rajane எஜமானனே என் இயேசு ராஜனே


 


எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே - என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா

2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
அழைத்தீரே உம் சேவைக்குஎன்னை
அதை நான் மறப்பேனோ

3. அப்பா உம் சந்நிதியில்தான்
அகமகிழந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் -நான்
ஏங்குதய்யா என் இதயம்

4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்


Varum Varum Magathuva Devane வாரும் வாரும் மகத்துவ தேவனே


 


வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்

1. மகிமைச் சொருபனே மாவல்ல தேவனே
மன்னா வந்தாசீர்வாதம் தாருமேவாரும்

2. தாய் தந்தை நீர் தாமே தற்பரா எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையேவாரும்

3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே நீர் வாருமேவாரும்

4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே நீர் வாருமேவாரும்

5. காருண்ய தேவனே கதியும்மை யண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும்வாரும்

6. மன்னா உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனேவாரும்

7. விழிப்புள்ள ஜீவியம் விமலா நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமேவாரும்

8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம்வாரும்


Saturday 16 April 2022

Agora Kasthi Pattorai அகோர கஸ்தி பட்டோராய்


 


1. அகோர கஸ்தி பட்டோராய்

வதைந்து வாடி நொந்து

குரூர ஆணி தைத்தோராய்

தலையைச் சாய்த்துக்கொண்டு

மரிக்கிறார் மா நிந்தையாய்

துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்

மரித்த இவர் யாவர்

 

2. சமஸ்தமும் மா வடிவாய்

சிஷ்டித்து ஆண்டுவந்த

எக்காலமும் விடாமையாய்

விண்ணோரால் துதிபெற்ற

மா தெய்வ மைந்தன் இவரோ

இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ

பிதாவின் திவ்விய மைந்தன்

 

3. அநாதி ஜோதி நரனாய்

பூலோகத்தில் ஜென்மித்து

அரூபி ரூபி தயவாய்

என் கோலத்தை எடுத்து

மெய்யான பலியாய் மாண்டார்

நிறைந்த மீட்புண்டாக்கினார்

என் ரட்சகர் என் நாதர்.