என்னிலே தகுதி ஒன்றுமில்லையே
என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட
1. குயவனாம் தேவன் கையிலே
நான் வெறும் களிமண்தானே
வனைபவரும் வடிவமைப்பதும் தேவனே
என்னில் வாழ்வளித்து நடத்துவதும் தேவனே - என்னிலே
2. பாவியில் பிரதான பாவி நான்
என் நீதி அழுக்கான கந்தையே
கழுவிட்டார் தூய தம் இரத்தத்தால்
என்னை மீட்டிட்டார் அளவில்லாத கிருபையால் - என்னிலே
3. நடப்பதெல்லாம் உம்மையல்லாமல்
என்னாலேதும் நடக்கலாகுமோ
ஆகும் நீர் சொன்னால் என்றுமே
கூடாதது உம்மால் ஒன்றும் இல்லையே - என்னிலே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.