என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
இயேசப்பா இயேசப்பா– என்னப்பா
1. உங்க ஆசை தான் எனது ஆசை
உங்க விருப்பம் தான் எனது விருப்பமே
2. உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்
உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா
3. இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
உங்க பாதம் தான் எனது தஞ்சமையா
4. எத்தனை இடர் வரட்டும் அது என்னை பிரிக்காது
உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.