வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
1. மகிமைச் சொருபனே மாவல்ல தேவனே
மன்னா வந்தாசீர்வாதம் தாருமே — வாரும்
2. தாய் தந்தை நீர் தாமே தற்பரா எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையே — வாரும்
3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே நீர் வாருமே — வாரும்
4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே நீர் வாருமே — வாரும்
5. காருண்ய தேவனே கதியும்மை யண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும் — வாரும்
6. மன்னா உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனே — வாரும்
7. விழிப்புள்ள ஜீவியம் விமலா நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமே — வாரும்
8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் — வாரும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.