Tuesday 30 November 2021

Kanmani Nee Kanvalarai கண்மணி நீ கண்வளராய்


 

கண்மணி நீ கண்வளராய்

விண்மணி நீ உறங்கிடுவாய்

கண்மணி நீ கண்வளராய்

 

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட

நீங்கும் துன்பம் நித்திரை வர

ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட

தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்

கந்தை துணி பொதிந்தாயோ

 

2. சின்ன இயேசு செல்லப் பாலனே

உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே

என்னைப் பாரும் இன்ப மைந்தனே

உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற

ஏழை மகவாய் வந்தனையோ

 

3. வீடும் இன்றி முன்னனைதானோ

காடும் குன்றும் சேர்ந்ததேனோ

பாடும் கீதம் கேளாயோ நீயும்

தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய

ஏழ்மைக் கோலம் கொண்டனையோ


Friday 26 November 2021

Karthar Ennai Visaarippavar கர்த்தர் என்னை விசாரிப்பவர்


 

கர்த்தர் என்னை விசாரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்

1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் நான்

2. எந்தன் தலையிலுள்ள மயிரெல்லாம்
உன்னதரே எண்ணி வைத்துள்ளார்
அவரின் உத்தரவில்லா தொன்றும்
கீழே விழாது என்று அறிவேன் நான்

3. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்
எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளாரல்லோ

4. வலது கரத்தைப் பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவோர் அனைவரையுமே
வெட்கப்பட்டு போக செய்வாரே

5. தேவன் தமது ஐசுவரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்

Thursday 25 November 2021

Siluvaiyin Nilalil Anuthinam சிலுவையின் நிழலில் அனுதினம்


 

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாறிடுவேன்

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்சிலுவையின்

1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்து
தளர்ந்த என் ஜீவியமே
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம்சிலுவையின்

2. எவ்வித கொடிய இடறுக்கும் அஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன்
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார்சிலுவையின்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன்
திருமறை இன்னிசை நாதம்
தேனிலும் இனிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்சிலுவையின்

Tuesday 23 November 2021

En Yesuvae Ummai Allal என் இயேசுவே உம்மை அல்லால்


 

என் இயேசுவே உம்மை அல்லால்
மண்ணில் ஆறுதல்
ஒன்றும் கண்டிலேன்

1. சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்
இன்பம் தரும் பொருள் காணேன்
தாகம் பெருகும் தண்ணீரேயன்றி
லோகம் வேறொன்றும் நல்காதே

2. ஆபத்துக் காலத்தில் அனுகூலமான
துணையும் நீர் பெலனுமே நாதா
ஆகையால் பூமி நிலை மாறினாலும்
அஞ்சேன் கடல் பொங்கினாலும்

3. பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்
பரனே உம் கிருபையின் நிழலில்
பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்
பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்

4. என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து
பரதேச  யாத்திரை செய்வேன்
பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்
பாரங்கள் ஏதும் நானறியேன்

5. உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன்
உலகின் வினைகள் மறப்பேன்
உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம்
பெருகும் என் இதயத்தின் இன்பம்

Friday 19 November 2021




இஸ்ரவேலின் ஜெய பெலனே

சேனை அதிபதியே

முன்னே செல்லும் எங்கள் இயேசு

வெற்றி சிறந்தவரே

 

1. எகிப்தின் ஜனத்தை இருளும் பின்ன

திகைத்து தவித்தனரே

ஒளியில் என்றும் இஸ்ரவேலை

நடத்தி நிதமே காத்திடுவார்

 

2. கடலைப் பிளந்து வழியைத் திறப்பார்

கர்த்தர் பெரியவரே

பார்வோன் சேனை தொடர்ந்து வரினும்

துணிந்து முன்னே சென்றிடுவோம்

 

3. தேவ ஜனத்தின் எதிராய் தோன்றும்

சத்ரு வீழ்ந்திடுவான்

ஓங்கும் புயமும் தேவ கரமும்

தாங்கி நம்மை நடத்திடுமே

 

4. பாலைவனத்தில் பசியை ஆற்ற

மன்னா அளித்தனரே

நமது ஆத்ம தாகம் தீர்த்து

புதிய பெலனை அளித்திடுவார்

 

5. பொங்கி எழும்பும் யோர்தான் நதியை

தடுத்து நிறுத்தினாரே

அல்லல் யாவும் நீக்கி நம்மை

அக்கரையில் சேர்த்திடுவார்

Thursday 18 November 2021

Aranum Kotaiyum அரணும் கோட்டையும்



 




அரணும் கோட்டையும்

பெலனாய் காப்பவர்

திடமாய் ஜெயித்திட

எனது என்றென்றும் துணையே

 

1. ஜீவ நம்பிக்கை நல்க

இயேசு மரித்து எழுந்தார்

அழிந்திடாத உரிமை பெறவே

மறு ஜென்மம் அடையச் செய்தார் - அரணும்

 

2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க

மகிமை நம்பிக்கை ஈந்தார்

நீதிமானை செழிக்கச் செய்து

என்றென்றும் ஜெயம் நல்குவார் - அரணும்

 

3. தம்மால் மதிலை தாண்டி

உம்மால் சேனைக்குள் பாய்வேன்

எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்

என்றென்றும் துணை செய்கின்றார் - அரணும்

 

4. வாழ்வில் முன்னேறிச் செல்ல

நல்ல நம்பிக்கை ஈந்தார்

கிருபை சொரிந்து அன்பை பொழிந்தார்

வளர்ந்தே நிலைத்திடுவோம்   - அரணும்

 

5. இருளை வெளிச்சமாக்க

ஒளியை அருளிச் செய்வார்

எந்தன் தீபம் நின்று எரிய

என்றென்றும் அருள் செய்குவார் - அரணும்


Jeevikirar Yesu Jeevikirar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்


 

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்

1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே


Tuesday 16 November 2021

என் மீட்பர் சென்ற பாதையில்


 


1. என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன் (2)
சிலுவையை சிலுவையை
நான் விடேன்

2. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா

3. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா

4. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயா
கோழை நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா

5. லோகத்தார் மாண்டு போகிறார்
மெய் வீரர் இல்லாமல்
பார் மீட்பர் ஜீவனை விட்டார்
தொங்கிச் சிலுவையில்

6. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேன்


Sunday 14 November 2021

Anbe Anbe Anbe அன்பே அன்பே அன்பே


 


அன்பே அன்பே அன்பே
ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே

1. ஒரு நாளுந்தயை கண்டேனையா
அந்நாள் என்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா  என் மேல்
உம் தயை பெரிதையாஅன்பே

2. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரில் அன்பேனையா
ஆழம் அறிவேனோ  அன்பின்
ஆழம் அறிவேனோஅன்பே

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே  எனையும்
அணைத்தீர் அன்பாலேஅன்பே

4. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா  அன்பு
வாடாதே ஐயாஅன்பே

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் நான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோஅன்பே


ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்


 


ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

வாழ்த்தி வணங்கிடுவேன்

 

1. அற்புதமான அன்பே – என்னில்

பொற்பரன் பாராட்டும் தூய அன்பே

என்றும் மாறா தேவ அன்பே

என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

 

2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்

ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே

தியாகமான தேவ அன்பே

திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்

 

3. மாய உலக அன்பை – நம்பி

மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே

என்னை வென்ற தேவ அன்பே

என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்

 

4. ஆதரவான அன்பே – நித்தம்

அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே

உன்னதமான  தேவ அன்பே

உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்

 

5. வாக்கு மாறாத அன்பே – திரு

வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே

சர்வ வல்ல தேவ அன்பே

சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்


Friday 12 November 2021

Thuthiye Thuthiye Thuthiye Thuthiye துதியே துதியே துதியே துதியே


 


துதியே துதியே துதியே துதியே
துதியுமக்கே துதியே

1. தூதகணங்கள் தூயவருந்தன்
பாத சேவை செய்து பணிந்துமைத் துதிக்கும்
வேத முதல்வனும் நீர் – துதியே

2. அண்ட சராசரம் அனைத்துமே ஒன்றாய்
விண்டலாதிபா வியந்தும்மை துதிக்கும்
முண்டலாதிபனும் நீர் – துதியே

3. பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்
தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர்  – துதியே

4. அந்தகாரமதின் அடிமைகளுக்கு
சுந்தர ஒளியைச் சுடரிடச் செய்ய
வந்த குமாரனும் நீர் – துதியே

5. மீட்கப்பட்டவர் ஆனந்தங்கொண்டு
பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
ஆட்கொண்ட நாதனும் நீர் – துதியே

6. கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜாவே
நித்தியமான எம் தேவாதி தேவனே
துத்தியம் செய்திடுவோம் – துதியே


ஜாதிகளே எல்லோரும்


 ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்

தேவன் அளித்த நன்மை பெரியதே

கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாததே


1. இன்றைத் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட

ஈந்தளித்தீர் உந்தன் கிருபை

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்

என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம் --- ஜாதிகளே


2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்

சேதமின்றி என்னைக் காத்தாரே

ஜீவியப் பாதையில் தேவை தந்து

ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார் --- ஜாதிகளே


3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி

சாவு பயம் யாவும் போக்கினார்

சோதனை வேதனை சூழ்கையில்

சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார் --- ஜாதிகளே


4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்

சொந்த பிள்ளையாக மாற்றினார்

நாடியே வந்தென்னை ஆதரித்து

வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட --- ஜாதிகளே


5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்

வானவரின் வாக்கு மாறாதே

நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்

சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை --- ஜாதிகளே

Wednesday 10 November 2021

Mahilnthu Kalikkum மகிழ்ந்து களிக்கும்


 


1. மகிழ்ந்து களிக்கும் வனாந்தரம்

மலர்ந்து செழிக்கும் வறண்டநிலம்

ஜொலித்து பூரிக்கும் அலங்காரம்

கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்தும்

 

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி

தள்ளாடும் முழங்காலைப் பெலப்படுத்தி

திடன் கொள்ளுவோம் பயம் நீக்குவோம்

நம் மீட்பின் தேவன் வருகின்றார்  

 

2. இருண்ட கண்கள் ஒளிபெறுமே

செவிடர் செவிகள் திறந்திடுமே

முடவன் மான்போல் குதித்திடுவான்

ஊமையன் நாவு பாடிடுமே

 

3. இராஜபாதை இது என்றே

தூயபாதை இது நன்றே

பாதகர் அங்கு நடப்பதில்லை

பேதையர் வழிகெட்டுப் போவதில்லை

 

4. மீட்கப்பட்டோர் கெம்பீரமாய்

ஆனந்தக் களிப்புடனே வருவார்

சஞ்சலம் தவிப்பும் அங்கே இல்லை

சந்தோஷம் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை


Tuesday 9 November 2021

Azhagai Nirkum Yaar Ivargal


 

அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்

1. காடு மேடு கடந்த சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள்அழகாய்

2. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும், போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள்அழகாய்

3. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர்அழகாய்

4. வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் பிதாவின்  முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்றுஅழகாய்

5. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும், அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லைஅழகாய்

6. ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமேஅழகாய்


Monday 8 November 2021

Ennidathil Palar Yarum என்னிடத்தில் பாலர் யாரும்


 

1. என்னிடத்தில் பாலர் யாரும்
வர வேண்டும் என்கிறார்
இப்பேர்ப்பட்டவர் எல்லாரும்
வான ராஜ்யம் அடைவார்
என்று சொல்லி நேசக் கையில்
இயேசு ஏந்தி அணைத்தார்
பாலர் அவரை உள்ளத்தில்
அன்பாய் எண்ணிப் போற்றுவார்

2. தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா மா ஸ்தோத்திரம்
என்று பாடி சீயோனுக்கு
நேரே சென்ற சமயம்
வாழ்த்தல் செய்த வண்ணம் நாமும்
வாழ்த்திப் பாடி பக்தியாய்
இயேசுவை வணங்கி என்றும்
ஸ்தோத்தரிப்போம் ஏகமாய்

3. பாலனாய் பிறந்த மீட்பர்
ராஜாவாக வருவார்
கூட வரும் தெய்வ தூதர்
மேகமீது தோன்றுவார்
நல்லோர் தீயோர் இயேசுவாலே
தீர்ப்படையும் நேரத்தில்
பாலர் போன்ற குணத்தாரே
வாழ்வடைவார் மோட்சத்தில்


Sunday 7 November 2021

Alaithavarae Nadathiduvar அழைத்தவரே நடத்திடுவார்


 


அழைத்தவரே நடத்திடுவார்

நம்பினவர் நானறிவேன்

நடப்பதெல்லாம் நன்மைக்கென்றே

நன்றியுடன் துதித்திடுவேன்

 

1. பச்சை மரம் உந்தனுக்கே

பாடுகளின் வழியானால்

பட்டமரம் எங்களுக்கே

பாருலகம் என்ன செய்யும்

 

2. குற்றமில்லா உந்தனையே

குறை சொல்லும் உலகமிது

குற்றமுள்ள மனிதனே நான்

குருவே உம் அருள் வேண்டும்

 

3. நம்பினவன் மறுதலித்தான்

நண்பனவன் சதி நினைத்தான்

நல்லவரைப் பகைத்து விடும்

நன்றியில்லா உலகமிது

 

4. சிங்காசனம் விட்டு வந்து

சிலுவை மரம் சுமந்தவரே

நினைத்திடுவேன் உம் சிலுவை

சகித்திடுவேன் துன்பங்களை

 

5. ஜீவனையும் வெறுத்தவனே

ஜீவனதை அடைந்திடுவான்

சீக்கிரமாய் வந்திடுவீர்

சேர்ந்திடுவேன் உம் சமூகம்