Thursday 25 November 2021

Siluvaiyin Nilalil Anuthinam சிலுவையின் நிழலில் அனுதினம்


 

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாறிடுவேன்

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்சிலுவையின்

1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்து
தளர்ந்த என் ஜீவியமே
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம்சிலுவையின்

2. எவ்வித கொடிய இடறுக்கும் அஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன்
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார்சிலுவையின்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன்
திருமறை இன்னிசை நாதம்
தேனிலும் இனிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்சிலுவையின்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.