Thursday 30 September 2021

Naan Nesikum நான் நேசிக்கும்


 

நான் நேசிக்கும் தேவன்

இயேசு என்றும் ஜீவிக்கிறார்

அவர் நேற்றும் இன்றும் நாளை

என்றும் மாறாதவர்

 

நான் பாடி மகிழ்ந்திடுவேன்

என் இயேசுவைத் துதித்திடுவேன்

என் ஜீவிய காலமெல்லாம்

அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

 

1. கடலாம் துன்பத்தில் தவிக்கும்

வேளையில் படகாய் வந்திடுவார்

இருள் தனிலே பகலவனாய்

இயேசுவே ஒளி தருவார்

 

2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்

மருத்துவராகிடுவார்

மயங்கி விழும் பசிதனிலே

மன்னாவைத் தந்திடுவார்

 

3. தூற்றும் மாந்தரின் நடுவில்

எந்தனை தேற்றிட வந்திடுவார்

கால் தளர ஊன்றுகோலாய்

காத்திட வந்திடுவார்

 

4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க

நான் இனி கலங்கிடேனே

எந்தனுக்கே காவல் அவர்

நான் உடல் அவர் உயிரே

Wednesday 29 September 2021

Singa Kuttigal Pattini சிங்கக் குட்டிகள் பட்டினி


 சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

குறையில்லையே குறையில்லையே

ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே


1. புல்லுள்ள இடங்களிலே

என்னை மேய்க்கின்றார்

தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று

தாகம் தீர்க்கின்றார்


2. எதிரிகள் முன் விருந்தொன்றை

ஆயத்தப்படுத்துகின்றார்

என் தலையை எண்ணெயினால்

அபிஷேகம் செய்கின்றார்


3. ஆத்துமாவைத் தேற்றுகின்றார்

ஆவி பொழிகின்றார்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

கிருபை என்னைத் தொடரும்


4. என் தேவன் தம்முடைய

மகிமை செல்வத்தினால்

குறைகளையே கிறிஸ்துவுக்குள்

நிறைவாக்கி நடத்திடுவார்

Tuesday 28 September 2021

En Yesu Raja என் இயேசு ராஜா


 

என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)

1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு

2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு

3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு

Monday 27 September 2021

Sabayin Asthibaram சபையின் அஸ்திபாரம்


 

1. சபையின் அஸ்திபாரம்
நல் மீட்பர் கிறிஸ்துவே
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்

2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்
சபை ஒன்றே ஒன்றாம்
ஒரே விசுவாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்
ஓர் திவ்விய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும்

3. புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்
உள்ளானவரின் துரோகம்
கிலேசப்படுத்தும்
பக்தர் ஓயாத சத்தம்
எம்மட்டும் என்பதாம்
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்

4. மேலான வான காட்சி
கண்டாசீர் வாதத்தை
பெற்று போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்

5. என்றாலும் கர்த்தாவோடு
சபைக்கு ஐக்கியமும்
இளைப்பாறுவாரோடு
இன்ப இணக்கமும்
இப்பாக்கிய தூயோரோடு
கர்த்தாவே, நாங்களும்
விண் லோகத்தில் உம்மோடு
தங்கக் கடாட்சியும்

Aadhiyum Neerae Andhamum Neerae ஆதியும் நீரே அந்தமும் நீரே


 

ஆதியும் நீரே அந்தமும் நீரே

மாறிடா நேசர் துதி உமக்கே

தேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்து

எந்நாளும் துதித்திடுவோம்


1. தூதர்கள் போற்றும் தூயவரே

துதிகளின் பாத்திரர் தேவரீரே

உந்தனின் சமூகம் ஆனந்தமே

உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம்


2. வல்லமை ஞானம் மிகுந்தவரே

வையகம் அனைத்தையும் காப்பவரே

ஆயிரம் பேர்களில் சிறந்தவராம்

ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்


3. செய்கையில் மகத்துவம் உடையவரே

இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே

பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே

பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்


4. ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்

ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்

உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே

உத்தம தேவனை பணிந்திடுவோம்


5.ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்

பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்

மகிமையும் கனமும் துதிகளையே

செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்


Saturday 25 September 2021

Yesu Periyavar Nam Yesu Periyavar இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர்


 

இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர்
என்றென்றும் இயேசு பெரியவர்
அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்

1.மனுஷனைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
பிரபுக்களைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
செல்வங்களைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
பட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர்

2.அதிசயங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
அற்புதங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
நம்பினோரை வாழவைக்கும் இயேசு பெரியவர்
நம்பிக்கையின் நங்கூரம் இயேசு பெரியவர்

3.உனக்குள்ளே இருக்கின்ற இயேசு பெரியவர்
உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு பெரியவர்
உறங்காமல் காத்திடும் இயேசு பெரியவர்
உன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர்

4. யோனாவிலும் பெரியவர் என்று பாடிடு
சாலமோனிலும் பெரியவர் என்று கூறிடு
தேவாலயத்திலும் பெரியவர் என்று எண்ணிடு
பெரிய காரியங்களை எதிர்பார்த்திடு

Anantham Kolluvaen ஆனந்தம் கொள்ளுவேன்


 

1. ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவிலே
எந்தன் பாவங்கள் போக்கியதால்
அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம்
எந்தன் ஜீவியம் மாற்றியதால்

நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதை
நன்றி நிறைந்த நல் இதயமுடன்
ஆயுட் காலமெல்லாம் துதி பாடிடுவேன்
நன்றி மறவா நல் மனதுடனே

2. இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்
இன்னமும் என்னைக் காத்திடுவார்
அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவே
கர்த்தர் இயேசுவே முன் செல்கிறார்நான்

3. சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவே
ஈந்தவர் தேவ ஆவி எம்மில்
நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்
நேசர் கிருபைகள் அளித்திடுவார்நான்

4. கூப்பிடும் வேளைகள் நேசக் கொடி அசைத்தே
வேகமாய் வந்தே பதிலளித்தார்
தப்பிடும் வழிகள் எந்தன் ஆபத்தினில்
வேத வசனத்தால் நடத்திடுவார்நான்

5. பற்பல சோதனை எம்மைச் சூழ்ந்திட்டதால்
நற்பலன் வாழ்வில் பரிசுத்தமே
சீயோனை எமக்காய் கட்டி வெளிப்படுவார்
சேர்வேன் தரிசிக்க தூய முகம்நான்

Friday 24 September 2021

Aanantha Thuthi Oli ஆனந்த துதி ஒலி


 

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் ---

1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு ---

2. ஆதி நிலை ஏகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் ---

3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் ---

4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் ---

5. ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் தரிப்போம்
அனாதி தேவன் அடைக்கலம் பாரில்
அனாதையாவதே இல்லை ---

6. பார்போற்றும் தேவன் நம் தேவன்
பாரினில் வேறில்லை பாக்கியம்
நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே
வேறென்ன வாழ்வினில் வேண்டும்
பிள்ளைகளும் சபையும் பிதாமுன்னே நிலைக்கும்
பரிசுத்தர் மாளிகை எழும்பும் ---

7. தாவீதின் மைந்தன் தலையவர்
தாசரின் தலைகள் வணங்கும்
தேடிடும் தாசரின் கனம்
தேவாதி தேவனின் தியானம்
தலைவர்கள் எழுவார் எளியோரும் உயர்வார்
பணியாளர் திரண்டெழும் ஆண்டு ---

 

Wednesday 22 September 2021

Ulagor Unnai Pagaithalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்


 


1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூருவாயா
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்

2. உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா
ஊழியம் செய்ய வருவாயா  உனக்காக

3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுவாயோ  உனக்காக

4. இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர்
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா  உனக்காக

5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே
யாரை நான் அனுப்பிடுவேன்
யார் தான் போவார் எனக்காக  உனக்காக

Ratha Kottaikulle இரத்தக் கோட்டைக்குள்ளே


 

இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்


Monday 20 September 2021

KaiVidar Yesu Kaividar கைவிடார் இயேசு கைவிடார்


 

கைவிடார் இயேசு கைவிடார்
நம்மை ஒருபோதும் அவர் கைவிடார்

1. சாத்தானின் சேனைகள் வந்தாலும்
சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும்
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்கைவிடார்

2. சாவின் பள்ளத்தாக்கில்  நடந்தாலும்
சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும்
இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்கைவிடார்

3. மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்
எந்த காரணமின்றி எள்ளி  நகைத்திட்டாலும்
ஜெய கர்த்தராம் நம் இயேசு
ஜெயம் காண கிருபை செய்வார் கைவிடார்

Sunday 19 September 2021

Rajathi Rajan Yesu இராஜாதி இராஜன் இயேசு


 

1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்

சந்திக்க ஆயத்தமா

வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்

சந்திக்க ஆயத்தமா

 

கேள்  கேள்  மானிடரே

சிந்திக்க ஆயத்தமா

இராஜாதி இராஜனாய் வந்திடுவார்

சந்திக்க ஆயத்தமா 

 

2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே

சந்திக்க ஆயத்தமா

பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை

சந்திக்க ஆயத்தமா

 

3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்

சந்திக்க ஆயத்தமா

கத்திக் கதறியே தாழிடுவார்

சந்திக்க ஆயத்தமா

 

4. உலகமனைத்துமே கண்டிடுமே

சந்திக்க ஆயத்தமா

பரிசுத்தவான்களின் போர் நிற்குமே

சந்திக்க ஆயத்தமா

Saturday 18 September 2021

Atho Or Jeeva Vaasalae அதோ ஓர் ஜீவ வாசலே


 

1. அதோ ஓர் ஜீவ வாசலே

அவ்வாசலில் ஓர் ஜோதி

எப்போதும் வீசுகின்றதே

மங்காத அருள்ஜோதி

 

ஆழ்ந்த அன்பு இதுவே

அவ்வாசல் திறவுண்டதே

பாரேன் பாரேன்

பார் திறவுண்டதே.

 

2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்

கண்டடைவார் மெய்வாழ்வும்

கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,

எத்தேச ஜாதியாரும்.

 

3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,

அவ்வாசலில் உட்செல்வோம்

எப்பாவம் துன்பம் நீங்கிப்போம்

கர்த்தாவைத் துதிசெய்வோம்.

Friday 17 September 2021

Alba Omega Aathium Neerae அல்பா ஒமேகா ஆதியும் நீரே


 

அல்பா ஒமேகா ஆதியும் நீரே
நேசர் சத்தம் கேட்டேன்
அவரை இன்று பணிவேன்
அவர் சமூகம் எனக்கு பேரின்பம் (3)

1. இயேசு நிற்கிறார் அமர்ந்த கடலிலே
அழைத்துச் செல்கிறார் அமைதி வாழ்விலே
லீபனோன் சிகரத்தில் ஓங்கி நிற்கும் விருட்சம் போல்
கிருபை நிறைந்த இடத்தில் நான்
செழித்து வளருவேன்

2. வாடை எழும்பிடும் தென்றல் வீசிடும்
ஜீவ தண்ணீரின் துரவு தோன்றிடும்
லீபனோன் சிகரத்தில் ஓடிவரும் வெள்ளம்போல்
வசனம் நிறைந்த இடத்தில் நான்
கனிகள் பெற்றிடுவேன்

3. நிழல் சாய்ந்திடும் பகல் குளிர்ந்திடும்
வெள்ளைப் போள வாசனை வந்து நிறைந்திடும்
லீபனோன் சிகரத்தில் சீறிவரும் சிங்கம் போல்
வீரம் நிறைந்த இடத்தில் நான்
ஜெயித்து வளருவேன்

4. லீலி புஷ்பமே கிச்சிலி மரம் இதோ
மதுரமானவர் மகிமை தருகிறார்
லீபனோன் சிகரத்தில் வீசிவரும் வாசனை
சாட்சி நிறைந்த இடத்திலே
பெருகிப் படர்ந்திடும்

Devan Thangum Ullam தேவன் தங்கும் உள்ளம்


 

தேவன் தங்கும் உள்ளம்
அது தேவாலயம்

1. அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
அதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்
வீண் பெருமைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்

2. துதிகள் நிறைந்த உள்ளம் அது தேவாலயம்
இயேசு துங்கவன் மகிழும் உள்ளம் அது தேவாலயம்
இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்
இயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம்

3. அன்பு நிறைந்த உள்ளம் அது தேவாலயம்
அதில் அமைதி வாழும் உள்ளம் அது தேவாலயம்
அடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம்
இவை அனைத்தும் நிறைந்த மனிதன் அவன் தேவாலயம்