என்னத் தியாகம் என் கல்வாரி நாயகா
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ
1. விண் தூதர் போற்றிடும் உம்
பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே
மாட்டுக் கொட்டிலை வாஞ்சித்தீரையா
மானிடர் மேல் அன்பினால் - என்ன
2. ஜெனித்த நாள் முதலாய்
கல்வாரியில் ஜீவனை ஈயும் வரை
பாடுகள் யாவையும் பட்டீரையா
பாவியை மீட்பதற்காய் - என்ன
3. தலையை சாய்த்திடவோ
உமக்கு ஓர் ஸ்தலம் எங்குமில்லையே
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ
முன் பாதை காட்டினீரே - என்ன
4. பாடுகளெல்லாம் உம்மை
மகிமையில் பூரணமாய் சேர்த்ததே
உம்மோடு நானும் பாடு சகிக்க
என்ன தடையுமுண்டோ - என்ன
5. பொய் இன்பம் எனக்கினியேன்
என்னருமை இயேசுதான் என் பங்கல்லோ
நேசரின் பின்னே போகத் துணிந்தேன்
நேச
வலிமையினால் – என்ன
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.