Sunday 12 September 2021

Seeyon Thesamathil சீயோன் தேசமதில்


 

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்

அன்பருடன் வாழ்வேன்

ஜெயகீதம் பேரின்பம்

துதி பாடி மகிழுவேன்

 

1. நகரத்தின் வீதிகள்

பொன்னாக மின்னுதே

இராப் பகல் இல்லையே - என்

இரட்சகர் வெளிச்சமே

 

2. என் கண்ணீர் யாவையும்

கரத்தால் துடைப்பாரே

சஞ்சலமில்லையே - என்

நேசர் மகிழ்ச்சியே

 

3. மண் சாயல் மாறியே

விண் சாயல் அணிந்துமே

மறுரூபம் அடைவேனே - என்

இயேசுபோல் மாறுவேன்

 

4. நிதமும் என் நேசரை

துதிபாடி போற்றுவேன்

மகிபனின் தேசத்தில் - நான்

மகிமையாய் வாழுவேன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.