அல்பா ஒமேகா ஆதியும் நீரே
நேசர் சத்தம் கேட்டேன்
அவரை இன்று பணிவேன்
அவர் சமூகம் எனக்கு பேரின்பம் (3)
1. இயேசு நிற்கிறார் அமர்ந்த கடலிலே
அழைத்துச் செல்கிறார் அமைதி வாழ்விலே
லீபனோன் சிகரத்தில் ஓங்கி நிற்கும் விருட்சம் போல்
கிருபை நிறைந்த இடத்தில் நான்
செழித்து வளருவேன்
2. வாடை எழும்பிடும் தென்றல் வீசிடும்
ஜீவ தண்ணீரின் துரவு தோன்றிடும்
லீபனோன் சிகரத்தில் ஓடிவரும் வெள்ளம்போல்
வசனம் நிறைந்த இடத்தில் நான்
கனிகள் பெற்றிடுவேன்
3. நிழல் சாய்ந்திடும் பகல் குளிர்ந்திடும்
வெள்ளைப் போள வாசனை வந்து நிறைந்திடும்
லீபனோன் சிகரத்தில் சீறிவரும் சிங்கம் போல்
வீரம் நிறைந்த இடத்தில் நான்
ஜெயித்து வளருவேன்
4. லீலி புஷ்பமே கிச்சிலி மரம் இதோ
மதுரமானவர் மகிமை தருகிறார்
லீபனோன் சிகரத்தில் வீசிவரும் வாசனை
சாட்சி நிறைந்த இடத்திலே
பெருகிப் படர்ந்திடும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.