Saturday 20 March 2021

Karthave Ummai Nithame கர்த்தாவே உம்மை நித்தமே


 

1. கர்த்தாவே உம்மை நித்தமே

துதித்துப் போற்றுவேன்

எல்லோர் முன்னும் நான் உம்மையே

அறிக்கை பண்ணுவேன்


2. எவ்வித பாக்கியங்களும்

உம்மாலேதான் உண்டே

உண்டான எந்த நன்மைக்கும்

ஊற்றானவர் நீரே


3. இக்கட்டில் நாங்கள் கூப்பிட்டால்

நீர் கேட்டிரங்குவீர்

எங்களைச் சுத்த தயவால்

ரட்சித்துத் தாங்குவீர்


4. அநந்த வாழ்வையும் இனி

கொடுத்தருள்வீரே

அடியாருக்கு நற்கதி

அப்போதுண்டாகுமே


5. ஆ களிகூர்ந்து பூரித்து

மகிழ் என் உள்ளமே

பராபரன் தான் உனது

அநந்த செல்வமே


6. அவர் உன் பங்கு உன் பலம்

உன் கேடகம் நன்றாய்த்

திடப்படுத்தும் உன் திடம்

நீ கைவிடப்படாய்

Sunday 14 March 2021

Marithaare Kiristhesu மரித்தாரே கிறிஸ்தேசு


  Marithaare Kiristhesu

மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி 1. திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே தீன தயாளத்வ மனுவேலே பாராய் - மரித்தாரே 2. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய் - மரித்தாரே 3. மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே மா பாடுபட்டுத் தரித்ததே பாராய் - மரித்தாரே 4. மன்னிப்புண்டாக்கவே மத்யஸ்தராக மாவாதைக்குள்ளானார் தாமே நீ பாராய் – மரித்தாரே

Wednesday 10 March 2021

Mulmudi Nogutho Devane முள்முடி நோகுதோ தேவனே


 Mulmudi Nogutho Devane

1. முள்முடி நோகுதோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதனே முள்முடி நோகுதோ இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதனே 2. கைகளில் ஆணியா குத்தினர் களைத்ததோ கைகளும் ஏசுவே சாட்டையால் முதுகில் அடித்தார் சாட்டையும் ராஜனை அடித்ததோ 3. தாகத்துக்கு காடியா தந்தனர் தண்ணீரை படைத்தவர் நீரன்றோ கண்ணீரும் கண்களில் கொட்டுதோ துடைப்பவர் யாரங்கும் இல்லையோ 4. தோளினில் சிலுவையை சுமந்தீரோ தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ முட்களை படைத்தவர் நீரன்றோ