Saturday 20 March 2021

Karthave Ummai Nithame கர்த்தாவே உம்மை நித்தமே


 

1. கர்த்தாவே உம்மை நித்தமே

துதித்துப் போற்றுவேன்

எல்லோர் முன்னும் நான் உம்மையே

அறிக்கை பண்ணுவேன்


2. எவ்வித பாக்கியங்களும்

உம்மாலேதான் உண்டே

உண்டான எந்த நன்மைக்கும்

ஊற்றானவர் நீரே


3. இக்கட்டில் நாங்கள் கூப்பிட்டால்

நீர் கேட்டிரங்குவீர்

எங்களைச் சுத்த தயவால்

ரட்சித்துத் தாங்குவீர்


4. அநந்த வாழ்வையும் இனி

கொடுத்தருள்வீரே

அடியாருக்கு நற்கதி

அப்போதுண்டாகுமே


5. ஆ களிகூர்ந்து பூரித்து

மகிழ் என் உள்ளமே

பராபரன் தான் உனது

அநந்த செல்வமே


6. அவர் உன் பங்கு உன் பலம்

உன் கேடகம் நன்றாய்த்

திடப்படுத்தும் உன் திடம்

நீ கைவிடப்படாய்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.