Aathumave Sthothiri
ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
அல்லேலூயா
1. ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும்
2. நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள்
3. பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ
4. நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார்
Pitha Anbu Selvan
பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான் பிறை ஒளி முன்னணை புரண்டதே தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன் தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் --- பிதா 1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள் ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள் ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் --- தாழ்மை 2. கனி கடலாக ஆவியினால் தருவான் பகை கலைந்தோட அமுதமொழி அருள்வான் பிறர் கனிந்துயர உடலாவி கொடுப்பான் மனம் கசிந்துருக கோடி துயர் சுமப்பான் --- தாழ்மை 3. கடல் உப்பாக வாழ்ந்துவிடில் இன்பம் பிறர் கண்டு வர ஒளிப்பாதை எழும்பும் விழி தூண்டும் பணி அமைதியுன் சிரிப்பு அதில் துலங்க வரும் தூயோனின் ரட்சிப்பு --- தாழ்மை 4. புவி புல்லரெல்லாம் மாற்றி விடும் புனிதன் வளர் புது மலராய் பூத்த தெய்வ மனிதன் உளம் பூம்பொழிலாய் மாற்ற வந்த கோமான் தேன் பூங்குயிலாய் அறம் பாடும் பூமான் --- தாழ்மை
Paduvom Paduvom Intru
1. பாடுவோம் பாடுவோம் இன்று பாடி மகிழ்வோம்
பாலனாம் இயேசு இன்று பிறந்தார்
இந்தப் பாருலகில் இன்று அவதரித்தார்
என்று பாடியே மகிழ்ந்திடுவோம்
ஆ மகிழ்ந்திடுவோம் இன்று பாடிடுவோம்
இயேசு பாலகன் இன்று பிறந்தார்
இந்த ஆயர்களின் வாழ்த்து உரைத்திடவே
இந்தப் பூவுலகில் உதித்தார்
2. பொன் வெள்ளைப் போளம் தூப வர்க்கத்தோடு
மூவர் வந்து பணிந்தனரே
இயேசு பாதமதில் தம் சிரசை வைத்து
தம்மைத் தாழ்த்தி வணங்கினரே --- ஆ
3. இயேசு நமக்காகவே இவ்வுலகில் வந்தார்
இந்தப் பூமியை மீட்டிடவே
இன்று உள்ளமதில் அவர் பிறந்து விட்டார்
என்று பாடியே மகிழ்ந்திடுவோம் --- ஆ
Jathigale Ellorum Kartharai
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்
தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாததே
1. இன்றைத் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம் --- ஜாதிகளே
2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்
சேதமின்றி என்னைக் காத்தாரே
ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார் --- ஜாதிகளே
3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
சோதனை வேதனை சூழ்கையில்
சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார் --- ஜாதிகளே
4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்த பிள்ளையாக மாற்றினார்
நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட --- ஜாதிகளே
5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை --- ஜாதிகளே
Mavinbam Kondu Nam Devanai
மாவின்பம் கொண்டு நம் தேவனை
தேடி ஓடி வா
கூவி உன்னை அழைக்கிறோம்
புதிய ஆண்டினில்
1. பலவித இக்கட்டுகள் சூழ்ந்து வந்த போதும்
பரம பாதை இடறிடாமல் கடந்து வந்தோமே
2. வஞ்சகரின் கொடுமை சொல் வாதித்த வேளையிலும்
நெஞ்சம் நீட்டி அன்பு கொண்டு நேர்மை வழி கண்டோம்
3. தன்னிருகை நீட்டி நம்மை அணைத்துக் காத்திட்டார்
மன்னாவையும் மா தயவாய் தினமும் ஈந்திட்டார்
4. சென்றாண்டெமின் சேதம் போக்கி சிறப்புக் காணச் செய்த
இன்னோராண்டும் இன்பங் கொள்ள எம்மை நடத்தினீர்
இந்தப் பாரில் ஆவின் வீட்டில்
இயேசு பாலன் பிறந்தாரே
ஆடிப் பாடிடுவோம் அவர் பாதம் தொழுவோம்
ஆண்டவர் இயேசுவை நாம் -- அல்லேலுயா
1. காட்டில் இல்லை மெத்தை இல்லை கந்தையதிலே
விந்தையாக மண்ணில் மாந்தர் குல விளக்கே --- ஆடிப்
2. வானதூதர் வந்து நின்று வாழ்த்துப் பாடிட
ஆயர்களோ ஓடி வந்து சேதி கேட்டிட --- ஆடிப்
3. வானில் வெள்ளி வழி காட்ட வந்த அறிஞர்
வந்தனமும் வாழ்த்துக்களும் கூறி நின்றாரே --- ஆடிப்
4. எத்தனையோ மாளிகைகள் பாரிலிருந்தும்
மாட்டுக் கொட்டில் தானே அவர் தெரிந்தெடுத்தார் --- ஆடிப்
Intha Kaalam Pollathathu
இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் வாழ்க்கை தான்
அது வாடகை வீடு தான்
1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார் --- இந்த
2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போரிட
ஜெய வீரனாய் திகழ வா --- இந்த
3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் வார்த்தையோ
நித்திய ஜீவனை அருளுமே --- இந்த
4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார் --- இந்த
Narkarunai Naathane
நற்கருணை நாதனே
சற்குருவே அருள்வாய் பொறுமை (2)
1. கோதுமை கனிமணி போல்
தீ திலோர் குண நலன்கள்
யோக்கியமாய் சேர்ந்திடவே
தூயனே அருள் மழை பொழிவாய் (2)
2. திராட்சை கனி ரசமே
தெய்வீக பானமதாம்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கொரு புது முகம் நல்கிடுவார் (2)
3. சுவை மிகு தீங்கனியே
திகட்டாத தேன் சுவையே
தித்திக்கும் கிருபையினாலே
எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2)
4. தேடி வந்தவரே
தினம் உனதன்பாலே
தாய் மனம் போல் அருளி
தாரணி செழித்தோங்கிடவே (2)
Yesuvai Thuthiungal Entrum
இயேசுவை துதியுங்கள் என்றும்
இயேசுவை துதியுங்கள் (2)
மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை
என்றென்றும் துதியுங்கள் (2) --- இயேசு
1. ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்பரை துதியுங்கள் (2)
சர்வ வல்லமையும் பொருந்திய நமது
இயேசுவை துதியுங்கள் (2) --- இயேசு
2. ஆவியின் அருளால் பாவி நமை சேர்த்த
தலைவனை துதியுங்கள் (2)
நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற
நேயனை துதியுங்கள் (2) --- இயேசு
3. பாவியை ரட்சிக்க பூமியில் தோன்றிய
பரமனைத் துதியுங்கள் (2)
ஆசை கோபம் களவுகள் மறந்த
கர்த்தனைத் துதியுங்கள் (2) --- இயேசு
Niyaaya Theerpu Naalana
நியாய தீர்ப்பு நாளான அந்த நாள்
மகா பெரிய நாள் இந்த பூவிலுள்ளோர்
அனைவரும் நடுங்கும் நாள் --- அந்த நாள்
1. நீதியும் அநீதியும் பிரிக்கப்படுமே அவரவர்
ஜீவனும் ஆக்கினையும் அடைந்திடவே
2. சிறியவரும் பெரியவரும் ஏகமாய் நிற்க அங்கு
தங்கள் தங்கள் கிரியைகளின் பங்கைப் பெற்றிட
3. வலது புறத்தில் நிற்போரேல்லாம் ஆசி பெற்றிட அன்று
இடது புறத்தில் நிற்போரேல்லாம் சபிக்கவேப் பட
4. இம்மையிலே இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் திட்டம் நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே
Immanuvelin Ratha Ootratho
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
என் பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலூயா பாரதோ கல்வாரியிலே அதோ
ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2)
1. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே
2. பாவியான கள்ளனும் மா ஊற்றில் மூழ்கினான்
பாவ மன்னிப் பானந்தமும் கண்டு பூரித்தான்
3. ஆவியில் நிறைத்து தேவ சாயலாக்கினார்
தூய ரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார்
4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த ரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே
En Maeipparaai Yesu
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது
1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம்
ஆகா என்றென்றும் இன்பமல்லவா
2. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி
ஆகா எங்கெங்கும் ஒளியல்லவா
3. என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால்
என் உள்ளமே ஆகா என் தேவனை
ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே
Aayiram Naavugal Pothaa
ஆயிரம் நாவுகள் போதா
ஆண்டவா உந்தனை பாட
கணக்கில்லா நன்மைகள் செய்தீர்
கர்த்தா உம்மை போற்றிப் பாட
1.காலமெல்லாம் உந்தன் அன்பால்
கரம் பிடித்தென்னை நடத்தி
காத்த உம் கிருபையை நினைத்தே
கர்த்தா உம்மைப் போற்றிப் பாட --- ஆயிரம்
2. அலைமோதி ஆடும் படகாய்
அலைந்த என்னை நீர் கண்டீர்
ஆணிகள் பாய்ந்த உம் கைகள்
ஆண்டு நடத்துமே தேவா --- ஆயிரம்
3. வானமும் பூமி ஆழ்கடலும்
வல்லவா நீரே என சொல்ல
வல்ல நல் தேவா உம் பாதம்
வந்தேன் இயேசையா நான் ஏழை --- ஆயிரம்
4. உன்னதர் உம் வாக்கை நம்பி
உம்மோடு என்றும் நான் வாழ
ஊற்றும் உம் உன்னத பெலத்தை
உம் சித்தம் செய்திடுவேன் நான் --- ஆயிரம்