Aayiram Naavugal Pothaa
ஆயிரம் நாவுகள் போதா
ஆண்டவா உந்தனை பாட
கணக்கில்லா நன்மைகள் செய்தீர்
கர்த்தா உம்மை போற்றிப் பாட
1.காலமெல்லாம் உந்தன் அன்பால்
கரம் பிடித்தென்னை நடத்தி
காத்த உம் கிருபையை நினைத்தே
கர்த்தா உம்மைப் போற்றிப் பாட --- ஆயிரம்
2. அலைமோதி ஆடும் படகாய்
அலைந்த என்னை நீர் கண்டீர்
ஆணிகள் பாய்ந்த உம் கைகள்
ஆண்டு நடத்துமே தேவா --- ஆயிரம்
3. வானமும் பூமி ஆழ்கடலும்
வல்லவா நீரே என சொல்ல
வல்ல நல் தேவா உம் பாதம்
வந்தேன் இயேசையா நான் ஏழை --- ஆயிரம்
4. உன்னதர் உம் வாக்கை நம்பி
உம்மோடு என்றும் நான் வாழ
ஊற்றும் உம் உன்னத பெலத்தை
உம் சித்தம் செய்திடுவேன் நான் --- ஆயிரம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.