Yesuvin Naamathai Potriduvom இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
Yesuvin Naamathai Potriduvom
இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
என்றும் அவர் துதி சாற்றிடுவோம்
1. கரடு முரடான பாதையினில்
கால் தடுமாறி தியங்குகையில்
கருணையாய் பேசி கரமதை நீட்டி
காத்திடும் தயவதை பாடிடுவோம்
2. பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் கோரத்தை போக்கினாரே
சாகாது வாழ சாவதை வென்ற
தேவகுமாரனை பாடிடுவோம்
3. யோர்தானை கடந்திடும் நேரமதில்
அணைத்திடுவார் அவர் மார்பதனில்
அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்
அன்பரின் நாமத்தை பாடிடுவோம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.