Kanni Marithaayin Karuvoolane கன்னி மரித்தாயின் கருவூலனே
Kanni Marithaayin Karuvoolane
கன்னி மரித்தாயின் கருவூலனே
கந்தை உருக்கோலனே
மண்ணில் மலர்ந்திட்ட மனுவேலனே
மாந்தர்க் கனுகூலனே
1. மார்கழிப் பனியுந்தன் மலர் மஞ்சமோ
மயக்கும் இருள் சொந்தமோ
மாட்டுத் தொழு உன்னை மகிழ்விக்கும் பந்தலோ
மாற்றுத் துணி கந்தலோ
மாற்றுக் குறையாத மணித் தங்கமோ
மாசு இல் நெஞ்சமோ
2. வாலொடு ஒரு வெள்ளி உதிக்கின்றதே
வையம் திகைக் கின்றதே
வானத்திரள் கூடி கானங்கள் பாடி
வாழ்த்திப் பணி கின்றதே
வஞ்சன் ஏரோதின் நெஞ்சத்திலே
வன்மம் எழுகின்றதே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.