Potriduvom Thuthithiduvom போற்றிடுவோம் துதித்திடுவோம்
Potriduvom Thuthithiduvom
போற்றிடுவோம் துதித்திடுவோம்
சேனையின் தேவனை பாடி மகிழ்வோம்
பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
அல்லேலூயா துதி அவர்க்கே - அல்லேலூயா
1. கடந்திட்ட நாட்களில் நம்மை காத்தவர்
புதிதொரு நாளையும் நமக்கு தந்தார்
யுத்தங்கள் வெள்ளங்கள் பூகம்பம் வந்தாலும்
தேவன் நம்மைக் காத்துக் கொண்டார்
2. மேய்ப்பராய் நம்மையும் நடத்தி வந்தார்
வாழ்வையும் நன்மையால் நிரப்பிடுவார்
நமக்காக சிலுவையில் இரத்தமும் சிந்தியே
தேவன் நம்மைக் மீட்டுக் கொண்டார்
3. நம்மையும் அவரிடம் ஒப்புக் கொடுப்போம்
உலகத்தின் ஆசைகள் விட்டு விடுவோம்
அவரோடு பரலோக வாழ்வினில் நாமும்
என்றென்றும் வாழ்ந்திடுவோம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.