Immanuvelin Ratha Ootratho இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
Immanuvelin Ratha Ootratho
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
என் பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலூயா பாரதோ கல்வாரியிலே அதோ
ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2)
1. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே
2. பாவியான கள்ளனும் மா ஊற்றில் மூழ்கினான்
பாவ மன்னிப் பானந்தமும் கண்டு பூரித்தான்
3. ஆவியில் நிறைத்து தேவ சாயலாக்கினார்
தூய ரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார்
4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த ரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.