Inthap Paaril Aavin Veetil இந்தப் பாரில் ஆவின் வீட்டில்
இந்தப் பாரில் ஆவின் வீட்டில்
இயேசு பாலன் பிறந்தாரே
ஆடிப் பாடிடுவோம் அவர் பாதம் தொழுவோம்
ஆண்டவர் இயேசுவை நாம் -- அல்லேலுயா
1. காட்டில் இல்லை மெத்தை இல்லை கந்தையதிலே
விந்தையாக மண்ணில் மாந்தர் குல விளக்கே --- ஆடிப்
2. வானதூதர் வந்து நின்று வாழ்த்துப் பாடிட
ஆயர்களோ ஓடி வந்து சேதி கேட்டிட --- ஆடிப்
3. வானில் வெள்ளி வழி காட்ட வந்த அறிஞர்
வந்தனமும் வாழ்த்துக்களும் கூறி நின்றாரே --- ஆடிப்
4. எத்தனையோ மாளிகைகள் பாரிலிருந்தும்
மாட்டுக் கொட்டில் தானே அவர் தெரிந்தெடுத்தார் --- ஆடிப்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.