Thursday 30 September 2021

Naan Nesikum நான் நேசிக்கும்


 

நான் நேசிக்கும் தேவன்

இயேசு என்றும் ஜீவிக்கிறார்

அவர் நேற்றும் இன்றும் நாளை

என்றும் மாறாதவர்

 

நான் பாடி மகிழ்ந்திடுவேன்

என் இயேசுவைத் துதித்திடுவேன்

என் ஜீவிய காலமெல்லாம்

அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

 

1. கடலாம் துன்பத்தில் தவிக்கும்

வேளையில் படகாய் வந்திடுவார்

இருள் தனிலே பகலவனாய்

இயேசுவே ஒளி தருவார்

 

2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்

மருத்துவராகிடுவார்

மயங்கி விழும் பசிதனிலே

மன்னாவைத் தந்திடுவார்

 

3. தூற்றும் மாந்தரின் நடுவில்

எந்தனை தேற்றிட வந்திடுவார்

கால் தளர ஊன்றுகோலாய்

காத்திட வந்திடுவார்

 

4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க

நான் இனி கலங்கிடேனே

எந்தனுக்கே காவல் அவர்

நான் உடல் அவர் உயிரே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.