Thursday 2 September 2021

Varum Ayya Pothagarae வாரும் ஐயா போதகரே


 

1. வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்

2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே வாரும் ஐயா
கழித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய்

3. நான் இருப்பேன் நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் தருவாய்

4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்கியம் அளித் தாண்டருள்வாய்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.