துதியே துதியே துதியே துதியே
துதியுமக்கே துதியே
1. தூதகணங்கள்
தூயவருந்தன்
பாத சேவை செய்து
பணிந்துமைத் துதிக்கும்
வேத முதல்வனும் நீர் –
துதியே
2. அண்ட சராசரம்
அனைத்துமே ஒன்றாய்
விண்டலாதிபா
வியந்தும்மை துதிக்கும்
முண்டலாதிபனும் நீர் – துதியே
3. பரிசுத்தர் யாவரும்
பரமனே உம்மைத்
தரிசிக்க நாடி
தாழ்ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர் – துதியே
4. அந்தகாரமதின்
அடிமைகளுக்கு
சுந்தர ஒளியைச்
சுடரிடச் செய்ய
வந்த குமாரனும் நீர் –
துதியே
5. மீட்கப்பட்டவர்
ஆனந்தங்கொண்டு
பாட்டுகள் பாடி
மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
ஆட்கொண்ட நாதனும் நீர்
– துதியே
6. கர்த்தாதி கர்த்தனே
இராஜாதி ராஜாவே
நித்தியமான எம் தேவாதி
தேவனே
துத்தியம்
செய்திடுவோம் – துதியே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.