அன்பே அன்பே அன்பே
ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே
1. ஒரு நாளுந்தயை கண்டேனையா
அந்நாள்
என்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா என்
மேல்
உம் தயை பெரிதையா – அன்பே
2. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரில் அன்பேனையா
ஆழம் அறிவேனோ அன்பின்
ஆழம் அறிவேனோ – அன்பே
3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே எனையும்
அணைத்தீர் அன்பாலே – அன்பே
4. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா அன்பு
வாடாதே ஐயா – அன்பே
5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் நான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ – அன்பே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.